‘நான் எல்லாம் பிறந்திருக்கவே கூடாது’- மீம்ஸ்களால் விரக்தியடைந்த செம்பருத்தி கார்த்தி

0
1018
karthikaj
- Advertisement -

நான் பிறந்திருக்கவே கூடாது என்று விரக்தியில் நடிகர் கார்த்திக் ராஜ் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் கார்த்திக் ராஜ். இவர் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2011 ஆம் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ சீரியல் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன் பின்னர் கார்த்திக் ஆபிஸ் தொடரில் நடித்தார்.

-விளம்பரம்-

இந்த சீரியல் மூலம் இவருக்கு என்று ஓரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. அதன் பின் இவர் ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று இருந்தார்.. மேலும், ஜோடி நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் மூன்று வருடங்களாக சீரியல் வாய்ப்பு இல்லாமல் இருந்தார். அதற்கு முக்கிய காரணமே இவரது திருமண வாழ்க்கை தான். கார்த்திக் கல்லூரி படித்த போது யாசினி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின்னர் நடிகர் கார்த்திக் சினிமாவில் நுழைந்தார்.

- Advertisement -

கார்த்திக் ராஜ் நடித்த படங்கள்:

அவர் 465, நாலு பேருக்கு நல்லதுன்னா ஏதும் தப்பில்லை போன்ற படங்களில் நடித்தார். ஆனால், இவருடைய படங்கள் எதுவும் வெற்றியடையவில்லை. சினிமாவில் நுழைந்த கார்த்திக் ஏகப்பட்ட அவமானங்களை சந்தித்து இருந்தார். அதோடு குடும்ப வாழ்க்கையிலும் ஏகப்பட்ட பிரச்சனை. இதனால் திருமணத்திற்கு பின்னர் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்தார் கார்த்திக். அதன் பின்னர் தான் ‘செம்பருத்தி’ சீரியலில் வாய்ப்பு கிடைத்தது.

செம்பருத்தி சீரியல்:

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த சீரியல் செம்பருத்தி. இந்த சீரியலில் ஆதி கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் கார்த்திக் ராஜ். இந்த சீரியல் மூலம் மீண்டும் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது இவர் பிரேக் எடுத்துக்கொண்டார். தற்போது இவர் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் என்ற புது சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-

கார்த்திக் ராஜ் நடிக்கும் சீரியல்:

இந்த சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. கார்த்திகேயா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் நடிக்கிறார். மேலும், கதாநாயகியாக தீபா என்ற கதாபாத்திரத்தில் ஹர்த்திகா நடிக்கிறார். இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் கார்த்திக் ராஜாவை பிடிக்காத சில ஹேட்டர்ஸ்கள் கார்த்திக் குறித்து மீம்ஸ்கலை வெளியிட்டு ட்ரோல் செய்கின்றனர்.

கார்த்திக் ராஜ் அளித்த பேட்டி:

குறிப்பாக, கார்த்திக்கு நடிக்க தெரியவில்லை. ஒரு எக்ஸ்பிரஷனும் கொடுக்க தெரியவில்லை என்றெல்லாம் கிண்டல் செய்திருக்கிறார்கள். இந்நிலையில் இது குறித்து கார்த்திக் ராஜ் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், நான் பிறந்திருக்கவே கூடாது. நான் பிறந்த காரணத்தினால் தான் இவ்வளவு கஷ்டப்பட வேண்டியதாக இருக்கு. பிறக்காமல் இருந்திருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. யாரும் நம்மிடம் இருந்து எதுவும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். நாம பண்ணுறதை எதையும் தப்பு என்று சொல்லி இருக்கவும் மாட்டார்கள் என்று விரக்தியாக பேசி இருக்கிறார்.

Advertisement