செம்பருத்தி சீரியலில் இருந்து வெளியேறுகிறாரா கார்த்தி ? அப்போ ஜனனி சொன்னது உண்மை தானா?

0
4975
janani
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் இல்லத்தரசிகள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் மக்களிடையே அதிக ஆதரவும்,அன்பும் பெற்ற சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் தான். இப்போது இருக்கும் டாப் சீரியல்களில் செம்பருத்தி சீரியலும் ஒன்று. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடரில் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கும், பார்வதி என்ற கதாபாத்திரத்தில் சபானாவும், அவருக்கு ஜோடியாக ஆபிஸ் புகழ் கார்த்தியும் நடிக்கின்றனர்.

-விளம்பரம்-
செம்பருத்தி கார்த்திக்

தற்போது 800 எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியல் ஹீரோ கார்த்திக் தானாகவே வெலியேறுவதாக அறிவித்துவிட்டார். மாற்று ஹீரோ கமிட் செய்து விட்டு சேனல் முறைப்படி அறிவிக்கும் என்கிறார்கள் சிலர். வேறு சிலரோ, சீரியலில் இருந்து கார்த்திக் நீக்கப்பட்டு விட்டார். சீரியல் நல்லபடியாகப் போய்க் கொண்டிருக்கும் சூழலில் கார்த்திக்கின் இந்த திடீர் நீக்கத்துக்கான காரணம் குறித்து உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்ல என்கிறார்கள். இதன் தொடர்பாக சேனல் இப்போதைக்கு நாங்கள் இதுகுறித்து எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று குறியிள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

சமீபத்தில் தான் இந்த தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜனனி நீக்கப்பட்டார். இதுகுறித்து கூறிய அவர், டேட் பிரச்சனை என்றும் சீரியலில் சில உள் பூசல் சென்றுகொண்டு இருந்தது. நான் நாமிருவர் நமக்கிருவர் தொடரில் நடித்து வருகிறேன். அதற்காக 1 முதல் 15 நாள் வரை தேதி கொடுத்துவிடுவேன். இடையில் நான் செம்பருத்தி சீரியல் டேட் கொடுப்பேன். ஆனால் சமீபகாலமாக செம்பருத்தி சீரியலில் டிஆர்பி குறைந்ததால். என்னுடைய டேட் ரொம்ப தேவைப்பட்டது. ஆனால் என்னால் டேட்டை சமாளிக்க முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி என்னை சீரியலில் இருந்து நீக்கிவிட்டார்கள் என்று கூறி இருந்தார்.

https://www.youtube.com/watch?v=dQM2NAJqHzo&feature=youtu.be

அதே போல, பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஜனனியிடம் செம்பருத்தி சீரியலில் இருந்து யாரை மாற்ற வேண்டும் என்று கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு பதில் அளித்திருந்த ஜனனி, ல் நான் ஆதியை தான் சொல்வேன். அவருக்கு சீரியலில் நடிக்க ஆசை இல்லை, படங்களில் நடிக்க தான் ஆசை என்று கூறி இருந்தார். தற்போது அவர் சொன்னது போலவே தான் கார்த்தி இந்த சீரியலில் இருந்து வெளியேறி படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டாரோ என்னவோ.

-விளம்பரம்-
Advertisement