புடவை கட்டுங்க அக்கா அதான் சூப்பர்.இது நல்லா இல்ல. செம்பருத்தி சீரியல் நடிகைக்கு ரசிகர் அட்வைஸ்.

0
17818
JANANIASHOK
- Advertisement -

தற்போது இருக்கும் காலகட்டத்தில் வெள்ளித்திரைக்கு இணையாக சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் பிரபலம் குறுகிய காலத்திலேயே கிடைத்து விடுகிறது. அந்த வகையில் பிரபல சீரியல் நடிகை ஜனனி ஆஷிக் குமாரும் ஒருவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘மாப்பிள்ளை தொடரில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்தவர் சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார். கோயம்பத்தூரை பூர்விகமா கொண்ட இவர் ‘மாப்பிள்ளை தொடரில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/B9bxBTNDsZf/

தனது முதல் சீரியல் எனத் தெரியாத அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் சீரியலில் முத்தக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். சின்னத்திரையில் இவர் பிரபலம் என்றாலும் இவர் அறிமுகமானது என்னவோ சினிமாவில்தான். இவர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியிருந்த நண்பேன்டா படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்திருந்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது மாப்பிள்ளை தொடர்தான்.

- Advertisement -

இதையும் பாருங்க : என் இல்லத்தரசியுடன், மகளீர் தினத்தன்று மனைவியடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஈரோடு மகேஷ்.

அந்த சீரியலுக்கு பின்னர் அடுத்தடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல்களில் நடித்து வருகிறார். குறிப்பாக செல்ல வேண்டும் என்றால் செம்பருத்தி, ஆயுத எழுத்து போன்ற பிரபலமான சீரியல்களில் நடித்து வருகிறார். சமூக வளைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜனனி அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். ஆனால், அதில் பெரும்பாலும் புடவை அணிந்த புகைப்படமாக தான் இருக்கும்.

-விளம்பரம்-

இவரை இன்ஸ்டாகிராமில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். இந்த நிலையில் ஜனனி அசோக் மாடர்ன் உடையில் தொடை தெரியும் ஆடையில் போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பல ரசிகர்கள் லைக் செய்து வரும் நிலையில் ரசிகர் ஒருவர், சாரி கட்டுங்க அக்கா அதான் சூப்பரா இருக்கும் இது நல்லா இல்ல என்று கமன்ட் செய்துள்ளார். ஒரு சில ரசிகர்கள் ஹாட், ஹார்ட் என்றெல்லாம் கமன்ட்களை அள்ளி வீசி வருகின்றனர்.

Advertisement