கூடவே இருந்த பாலாஜி இறந்துட்டாரு அதுக்குள்ள இப்படி பண்றீங்க – செந்தில் கணேஷின் செயலால் கடுப்பான ரசிகர்கள்.

0
18684
senthilganesh
- Advertisement -

விஜய் டிவி பிரபலமும் பிரபல காமெடி நடிகருமான வடிவேல் பாலாஜி உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் மேடை காமெடி கலைஞரும் காமெடி நடிகருமான பாலாஜி. வடிவேல் பாலாஜி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு சீசன் 4 மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அந்த சீசனில் வடிவேல் பாலாஜி பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

-விளம்பரம்-
Senthil Ganesh ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಶುಕ್ರವಾರ, ಸೆಪ್ಟೆಂಬರ್ 11, 2020

கலக்க போவது யாரு சீசன் 4 நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேரு காமெடி நிகழ்ச்சியில் அசத்திய வடிவேலு சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.வடிவேல் பாலாஜியின் மறைவிற்கு பல்வேறு சின்னத்திரை மற்றும் வெள்ளித் திரை பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வந்தனர் மேலும் நடிகர் விஜய் சேதுபதி கூட வடிவேலு பாலாஜியின் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார்.

- Advertisement -

வடிவேல் பாலாஜியுடன் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பணியாற்றிய என்னம்மா ராமர், பாலா, புகழ், யோகி என்று பல்வேறு நபர்களும் வடிவேல் பாலாஜி யின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார்கள்.மேலும் வடிவேல் பாலாஜியின் மறைவிற்கு நேரில் செல்லாத பல கலைஞர்கள் தங்களது சமூக வலைத்தளத்தில் வடிவேல் பாலாஜியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இருந்தார்கள். சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் நேற்று வடிவேல் பாலாஜியின் மறைவு குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

ஆனால் இன்று அவரின் மறைவு குறித்து எந்த ஒரு பதிவையும் செந்தில் கணேஷ் பதிவிடவில்லை இப்படி ஒரு நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடைபெற்ற வளைகாப்பு கொண்டாட்டத்தில் பங்கு பெற்ற சில புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். செந்தில் கணேசன் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலர் கொஞ்சம் கடுப்பில் ஆழ்ந்துள்ளனர். அதில் ஒரு சில ரசிகர்கள்,

-விளம்பரம்-

Advertisement