ராஷ்மிகாவாக ராஜலக்ஷ்மி, அல்லு அர்ஜூனாக செந்தில் கணேஷ் – ‘வாயா சாமி’ பாடலை ரீ-கிரியேட் செய்த சூப்பர் சிங்கர் ஜோடி.

0
869
rajalakshmi
- Advertisement -

சமீபத்தில் வெளியான ‘புஷ்பா’ படத்தின் வாயா சாமி பாடலை ரீ – கிரியேட் செய்துள்ளனர் செந்தில் கணேஷ் – ராஜலக்ஷ்மி தம்பதியினர். ‘என்ன மச்சான், சொல்லு புள்ள’ என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்– ராஜலக்ஷ்மி. விஜய் டிவியில் பல ஆண்டு காலமாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கணவன், மனைவி இருவரும் கலந்து கொண்டார்கள். பின் இந்த சூப்பர் சிங்கர் மேடையில் பல நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள்.

-விளம்பரம்-

ஒரே பாடலில் பேமஸ் ஆன தம்பதி :

இந்த போட்டியில் செந்தில் கணேஷ் தன்னுடைய விடாமுயற்சியால் பைனலுக்கு சென்று வீட்டை தட்டிச் சென்றார். மேலும், இந்த சிங்கர் நிகழ்ச்சி மூலம் தான் இவர்கள் வாழ்க்கைக்கு திருப்பு முனையாக அமைந்தது என்று சொல்லலாம். தற்போது இந்த ஜோடிகள் திரை உலகில் பல பாடல்களை பாடி வருகிறார்கள். அதிலும் நடிகர் பிரபு தேவா நடிப்பில் வெளிவந்த சார்லின் சாப்ளின் படத்தில் பாடிய “என்ன மச்சான், சொல்லு புள்ள” பாடல் வேற லெவல்ல ஹிட்.

- Advertisement -

ராஜலக்ஷ்மி கிடைத்த புஷ்பா வாய்ப்பு :

இதனை தொடர்ந்து இருவரும் உள்ளூர், வெளியூர் என பல கச்சேரிகளில் தங்களுடைய நாட்டுப்புற பாடல்களை பாடி வருகிறார்கள். தற்போது இவர்கள் சொந்தமாக ஒரு ஸ்டூடியோ ஒன்றை கூட வைத்து நடத்தி வருகின்றனர். சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெற்ற ‘வாயா சாமி’ பாடலை கூட தமிழில் ராஜலக்ஷ்மி தான் பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஹிட் அடித்த புஷ்பா பாடல்கள் :

சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாநடித்திருந்தார். பகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து இருந்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியானது.

-விளம்பரம்-

வாயா சாமி பாடல் :

மேலும், இந்த படத்திற்க்கு இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் ஹிட் அடித்தது. அதிலும் குறிப்பாக ‘வாயா சாமி’ பாடலும், ‘ஊ சொல்றியா மாமா’ பாடலும் வேற லெவல் ஹிட். சொல்லப்போனால் ஒரிஜினல் பாடலை விட தமிழில் தான் இந்த இரண்டு பாடல்களும் மாபெரும் ஹிட் அடித்தது.

ரீ கிரியேட் செய்த செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி :

ஊ சொல்றியா மாமா பாடலை தமிழில் ஆண்ட்ரியா பாடி இருந்தார். அதே போல ”வாயா சாமி ‘ பாடலை ராஜலக்ஷ்மி பாடி இருந்தனர். இப்படி ஒரு நிலையில் ”வாயா சாமி ” பாடலை செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி இருவரும் ரி – கிரியேட் செய்து வீடியோ வெளியிட்டு இருக்கின்றனர். அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே செந்தில் சினிமாவில் ஹீரோவாக படம் ஒன்றில் நடித்து உள்ளார். ஆனால், அந்த படம் மாபெரும் தோல்வியடைந்தது.

Advertisement