டயட்டால் நேர்ந்த விபரீதம், சில நாட்கள் கோமா – அநியாயமாக உயிரிழந்த சீரியல் நடிகரின் மனைவி.

0
1081
- Advertisement -

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரின் மனைவி இறந்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் பரத் கல்யாண். இவர் 90 காலகட்டத்தில் சீரியல்களில் கதாநாயகனாக நடித்து இருந்தவர். இவர் நடித்த அனைத்து சீரியல்களுமே சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. மேலும், இவர் பல முன்னணி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பழமொழி தொலைக்காட்சி தொடர்களிலும் பணியாற்றியிருக்கிறார். இவருடைய தந்தை மறைந்த பழம் பெறும் நடிகர் கல்யாண் குமார் ஆவார். மேலும், நடிகர் பரத் அவர்கள் சின்னத்திரையில் மட்டுமில்லாமல் யாக்கா, சிருங்காரம், பாட்டாளி, பார்த்த ஞாபகம், சுள்ளான் போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

நடிகர் பரத் நடிக்கும் சீரியல்கள்:

தற்போது இவர் ஹாட்ஸ்டார் ஒடிடியில் ஒளிபரப்பாகி வரும் கனா காணும் காலங்கள் 2 என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இந்த தொடர் ஒளிபரப்பானதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதே போல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த தொடரிலும் மருத்துவராக பரத் நடித்து வருகிறார். அதேபோல் சன் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பான தொடர் இலக்கியா.

பரத் குடும்பம்:

இந்த தொடரின் கதாநாயகன் கௌதமுக்கு அப்பா என்ற கதாபாத்திரத்தில் பரத் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் பரத்தின் மனைவி உடல்நிலை குறைவால் இன்று இறந்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் பரத் அவர்கள் பிரியதர்ஷினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். சில மாதங்களாகவே பரத் மனைவி பிரியதர்ஷினி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

-விளம்பரம்-

பரத் மனைவி இறப்பு:

தீவிர சிகிச்சை அளித்தும் இன்று திடீரென பிரியதர்ஷினி இறந்திருக்கிறார். இவருடைய மறைவிற்கு சின்னத்திரை நடிகர்கள் பலரும் தங்களுடைய இரங்கலையும், ஆறுதலையும் பரத்திற்கு தெரிவித்து வருகிறார்கள். மேலும், நடிகர் பரத்தின் மனைவி இறப்பு குறித்து அவருடைய நண்பரும், நடிகருமான ரிஷி கூறியிருந்தது, பிரியா கடந்த மூன்று மாதங்களாகவே உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்தார்.

பிரியதர்ஷினி இறப்பிற்கு காரணம்:

ப்ரியா பேலியோ டயட் ஃபாலோ பண்ணதால் டயாபட்டிக் வந்துவிட்டது. அதுக்காக அவர் ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருந்தார். பின் உடல் நிலை மோசமாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு இறந்துவிட்டார். 43 வயது தான் அவருக்கு ஆகிறது. பிரியா தங்கச்சியின் இறுதி சடங்கு செய்வதற்காக வெளியூரிலிருந்து வந்து கொண்டு இருக்கிறேன். நாளை அவருடைய இறுதி ஊர்வலம் நடப்பதாக கூறியிருக்கிறார்கள். பிரியாவின் திடீர் மரணம் அவருடைய ஒட்டு மொத்த குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது என்று கன மனதுடன் கூறியிருக்கிறார்.

Advertisement