‘காதலே பண்ணக்கூடாது” – தன் திருமண வாழ்கை குறித்து வாணி ராணி விக்னேஷ்.

0
786
- Advertisement -

‘காதலே பண்ணக்கூடாது’ என்று சின்னத்திரை நடிகர் விக்னேஷ் மன வேதனையுடன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பல ஆண்டு காலமாக மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை திகழ்கிறது. சின்னத்திரையில் சீரியல்கள் மட்டுமில்லாமல் பல ரியாலிட்டி ஷோக்களும் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் கொரோனா தொடங்கிய காலத்தில் இருந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி பார்க்கும் ஒன்றாக சின்னத்திரை திகழ்கிறது. இதனால் வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை நடிகர்களுக்கும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது.

-விளம்பரம்-

இதற்கு சமூக வலைத்தளங்கள் தான் பெரிய பங்காற்றுகின்றன. ஆனால், சமூக வலைதளங்களின் ஆதிக்கம் இல்லாத காலகட்டத்திலேயே பல நடிகர்கள் பெண்களின் மனதில் இடம் பிடித்து இருக்கிறார்கள். அந்த வகையில் இளம் பெண்களை கவர்ந்த சின்னத்திரை நடிகர் தான் விக்னேஷ். எல்லோருக்கும் இவர் கௌதம் என்று தான் தெரியும். மேலும், இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த கனா காணும் காலங்கள் என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர். பிறகு விக்னேஷ் பல தொடர்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார்.

- Advertisement -

விக்னேஷ்-ஹரிப்பிரியா திருமணம்:

அதுமட்டும் இல்லாமல் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த நடிகை ஹரிப்பிரியாவை காதலித்து 2012 ஆம் ஆண்டு நடிகர் விக்னேஷ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். மேலும், நடிகை ஹரிபிரியவை இசை என்றால் தான் எல்லோருக்கும் தெரியும். அந்த அளவிற்கு பிரியமானவள் தொடரின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான லட்சுமி வந்தாச்சு, பிரியமானவள் என்று பல தொடர்களில் நடித்திருந்தார். பின் இவர் சிறிய இடைவெளி எடுத்து கொண்டார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற தொடரிலும் நடித்து வருகிறார்.

விக்னேஷ்-ஹரிப்பிரியா விவாகரத்துக்கு காரணம்:

இப்படி சந்தோஷமாக இருந்த இவர்கள் திடீரென்று விவாகரத்து செய்வதாக அறிவித்து இருந்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பேர் அதிர்ச்சியாக இருந்தது. மேலும், இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் இவர்களின் விவாகரத்துக்கு குறித்து சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருந்தார்கள். ஹரிப்ரியா -விக்கி விவாகரத்துக்கு காரணம் பிரபல தொகுப்பாளர் அசார் தான் என்றும், அசாருக்கும், ஹரிப்ரியாவுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கத்தினால் தான் இவர்கள் விவாகரத்து செய்தார்கள் என்றும் கிசுகிசுக்கள் வந்தன. ஆனால், இந்த தகவலை ஹரிப்பிரியா மறுத்து இருந்தார். தற்போது இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

விக்னேஷ் அளித்த பேட்டி:

விக்னேஷ் தன்னுடைய விவாகரத்திற்கு பிறகு வாழ்க்கையை மிகுந்த மன அழுத்தத்துடன் அனுபவித்து வருவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் விக்னேஷ் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் காதல் குறித்தும், தன்னுடைய வேதனைகள் குறித்தும் கூறியிருப்பது, எனக்கு மீடியா உலகில் கிட்டத்தட்ட 18 வருடங்கள் அனுபவம் இருக்கு. இயக்குனர் ஆக வேண்டுமென தான் நான் மீடியாவுக்குள் நுழைந்தேன். ஆனால், நான் நடிக்க வந்துவிட்டேன். என் வாழ்க்கையில இது நடந்து விட்டதே, நடக்காமல் இருந்திருக்கலாமே என்று நான் நினைத்ததே கிடையாது. எல்லாமே அனுபவம் தான். அதனால் கடந்து போக வேண்டியது தான். என்னை சுற்றி இருக்கும் நல்ல மனிதர்களை தான் நான் விலைமதிப்பில்லாதவர்களாக பெரிதாக நினைக்கிறேன்.

காதல் குறித்து விக்னேஷ் சொன்னது:

நான் எல்லோரையும் சமமாக நினைப்பேன் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்கிற வேறுபாடு கிடையாது.ரொம்ப பொறுமையாக இருப்பேன். அதேநேரம் ரொம்ப கோவம் வரும். நிறைய தடவை யோசித்துதான் எல்லா முடிவையும் எடுப்பேன். எவ்வளவு கோடி ரூபாய் கொடுத்தாலும் நேரத்தை இழக்கக்கூடாது அதேபோல புகைபிடிக்கக் கூடாது என்பது தான் என்னுடைய நிலைப்பாடு. காதலே பண்ணக்கூடாது என்று தான் நான் சொல்லுவேன். இருந்தாலும் காதல் வாழ்க்கையில் நேர்மையாக இருக்கணும், உண்மையாக இருக்கனும். இன்னும் சிம்பிளாக சொல்ல வேண்டுமென்றால், உங்க மொபைல் போன் பேட்டன் உங்களுக்,கும் அவங்களோடது உங்களுக்கும் தெரியனும். அவ்வளவுதான் என்று தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து இருந்தார். இப்படி விக்னேஷ் அளித்திருந்த பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலானது தொடர்ந்து இவருக்கு பலரும் ஆறுதல்களை கூறி வருகின்றனர்.

Advertisement