`யார் ஹீரோயின்?’ – நடிகைகளுக்கு இடையே பஞ்சாயத்து, சீரியல் தொடங்கும் முன்னே விலகிய நடிகை.

0
672
actress
- Advertisement -

சீரியல் ஒளிபரப்பாகும் முன்னே சீரியலில் இருந்து பூவே உனக்காக சீரியல் நடிகை ராதிகா ப்ரீத்தி விலகிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சமீபத்தில் முடிவடைந்த சீரியல்களில் ஒன்று பூவே உனக்காக. கடந்த 2020 ஆம் ஆண்டு ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக பல எபிசோடுக்கு மேல் கடந்து இருக்கிறது. ஆரம்பத்தில் இந்த சீரியலில் இரண்டு நாயகிகள் நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த தொடரில் பூவரசி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ராதிகா பிரீத்தி. இந்த தொடரில் இருந்து இவர் பாதியிலேயே வெளியேறி விட்டார் . இதுகுறித்து அவரே தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அறிவித்து இருக்கிறார். இவருக்கு பதிலாக சன் டிவியில் அக்னி சீரியலில் நடித்த வர்ஷினி நடித்து இருந்தார். இப்படி சீரியலில் இருந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் விலகி இருந்தாலும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை சமீபத்தில் திடீரென சீரியலை முடித்து விட்டதாக சொல்கிறார்கள்.

- Advertisement -

மேலும், இந்த தொடரின் மூலம் ராதிகா ப்ரீத்திக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது. சமீபத்தில் தான் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் கம்மிட் ஆகி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருந்தது. இந்த சீரியலை விஷன் டைம் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. ப்ரைம் டைமில் இந்த சீரியல் ஒளிபரப்பாகும் என்று அறிவித்திருந்தார்கள். ஹீரோயினியாக இந்த சீரியல் ராதிகா ப்ரீத்தி கமிட் செய்திருந்தார்கள். இந்த சீரியலின் துவக்க விழா பூஜை கூட தடபுடலாக நடந்திருந்தது.

அதில் ராதிகா ப்ரீத்தி உற்சாகமாக கலந்து கொண்டிருந்தார். பின் பூஜை முடிந்து ஒரு வாரம் சூட்டிங் நடந்தது. ஆனால், அதற்குப் பின் சில காரணங்களால் சூட்டிங் தடைப்பட்டு போனதாக சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இது குறித்து விசாரித்த போது தான் சீரியலின் ஹீரோவே இன்னும் கமிட்டாகவில்லை என்று தெரிய வந்தது. ஹீரோ கமிட்டானதும் சூட்டிங் தொடங்கும் என்று கூறியிருந்தார்கள். இந்த நிலையில் தற்போது சீரியல் இருந்து ஹீரோயின் ராதிகா ப்ரீத்தி விலகிவிட்டார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

இது குறித்து சீரியலின் ஆர்ட்டிஸ்ட்களிடம் விசாரித்த போது அவர்கள் கூறியிருந்தது, ஹீரோ இல்லாமல் தான் ஆரம்பத்தில் பூஜை போட்டார்கள். ஹீரோவாக நடிக்க பல ஆர்டிஸ்ட்களிடம் பேசி இருந்தார்கள். கடைசியாக, செம்பருத்தி சீரியலில் நடித்த அக்னி கமிட்டானார். ஏற்கனவே இந்த சீரியலில் கம்மிட் ஆகி இருந்த நடிகர் தினேஷுக்கு ஜோடியாக நிவிசா கமிட்டாகி இருந்தார். மேலும், இந்த சீரியல் அக்கா – தங்கை கதை. தங்கையாக நடிக்கிற நீங்கள்தான் ஹீரோயினி என்று ராதிகா கிட்ட சொல்லி கமிட் செய்திருக்கிறார்கள். ஆனால், ஷூட்டிங் தொடங்கின பிறகு அக்கா கதாபாத்திரத்துக்காக தான் சீரியலில் முக்கியத்துவம் என்று நிவிசா , ராதிகாவுக்கு தெரியும்படி பேசியிருக்கிறார். இரண்டு பேருமே ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்தார்கள்.

பின் யாருக்கும் முக்கியத்துவம் என்றும் சீரியலில் ஹீரோயினி யார் என்ற பேசியதும் இரண்டு பேருக்குமே மனவருத்தம் ஏற்பட்டது. அதனால் ராதிகா சீரியலில் இருந்து விலகி விட்டார். இதனை அடுத்து ராதிகா ப்ரீத்தி இடம் இது குறித்து கேட்டபோது, பூஜையில் கலந்து கொண்டது நிஜம்தான். ஆனால், சீரியலில் தற்போது நான் இல்லை. அதற்கு காரணம் என்னவென்றால், டெலிகாஸ்ட் தாமதமாகிக் கொண்டே இருந்தது. பூஜை போட்டு நாலு மாதம் ஆகியும் ஒளிபரப்பு எப்போது என்று தெரியவில்லை. இரண்டு நாள்தான் நான் சூட் போனேன். இன்னொரு பக்கம் எனக்கு படங்கள், வெப் சீரிஸ் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

அதனால் இன்னும் எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும் என்று நான் விலகி விட்டேன். தயாரிப்பு நிறுவனம் இடம் சொன்னதனால் அவர்கள் என் பக்கம் இருக்கும் நியாயம் புரிந்து கொண்டு சரி என்று ஒத்துக் கொண்டார்கள் என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து நடிகை நிவிஷாவிடம் கேட்ட போது, இது ரொம்ப பர்சனலான கேள்வி. இது மாதிரி என்னிடம் கேள்வி கேட்க வேண்டாம். சீரியல் ஒளிபரப்பு தொடங்குற வரை இது தொடர்பாக என்னால் எதுவும் சொல்ல முடியாது என்று கூறி இருக்கிறார்.

Advertisement