ஆசை தீர தடவிக்கோன்னு விட்டுட்டேன் – படு ஓப்பனாக பேசிய சன் டிவி ஆனந்த ராகம் சீரியல் நடிகை

0
614
- Advertisement -

சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரீஹானா. இவர் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர்’சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியலில் நடிக்கிறார். பின் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றிருக்கும் மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலிலும் நடிக்கிறார் .

-விளம்பரம்-

இப்படி இவர் பிசியாக நடித்து கொண்டு இருந்தாலும் சில சர்ச்சையான விஷயங்களை வெளிப்படையாக பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் கூட இவர் நானும் நடிகை ரேகா நாயரும் தோழிகள் தான். நாங்கள் இருவரும் எதார்த்தமாக தான் பேசுவோம் என்றெல்லாம் பல விஷயங்களை பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர், எனக்கும் பேருந்தில் ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கிறது.

- Advertisement -

ரீஹானா பேட்டி:

நான் செவிலியராக பணியாற்றிய போது பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு நபர் என்னை ரொம்ப நேரம் தடவிக் கொண்டிருந்தார். எனக்கு ரொம்ப எரிச்சலை ஏற்படுத்தியது. என்னால் தாங்கவே முடியவில்லை. பின் நான், உனக்கு என்ன தடவ வேண்டுமா? எனக்கு எரிகிறது. இந்த பக்கம் வேண்டும் ஆனால் தடவிக் கொள் என்று காட்டினேன். இதை அங்கிருந்த எல்லோரும் பார்த்தார்கள். யாரும் அவனைக் கேட்கவில்லை. பின்னர் பேருந்து நடந்துனரிடம் அனைத்தையும் சொன்னேன்.

-விளம்பரம்-

குடும்ப வாழ்க்கை:

உடனே அவனை திட்டி இறக்கி விட்டார். மேலும், எனக்கு 16 வயதில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. 18 வயதில் திருமணம் ஆகி 19 வயதில் ஒரு குழந்தையை பெற்றெடுத்தேன். 24 வயதில் எனக்கு இரண்டு குழந்தைகள். என் கணவர் நல்ல குணம் கொண்டவர் தான். என்னுடைய பெண் தோழிகள் வீட்டுக்கு வருகிறார்கள் என்று சொன்னால் கூட அவர் ரூமில் உட்கார்ந்து விடுவார். அந்த அளவிற்கு நல்ல மனிதர். யாரோ ஏதோ சொல்லி அவரை மாற்றி விட்டார்கள். ஒரு நாள் அவர், நீ நாலு பேரிடம் ஆவது சென்றாவது குழந்தைகளை பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டார்.

தன் கணவர் குறித்து சொன்னது:

இது எனக்கு ரொம்ப மன உளைச்சல் ஏற்படுத்தியது. நான் நடிப்பது என் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தான். அதுபோக நான் மெஸ் நடத்துகிறேன். ஆக, உணவை சமைப்பதை விட நடிப்பதில் அதிகமாக சம்பளம் வருகிறது. அதில் வரும் வருமானத்தை வைத்து என் குழந்தைகளை படிக்க வைத்து விட்டு எனக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்வதற்கு மட்டும் எல்லோரும் சினிமாவில் மட்டும் அட்ஜஸ்ட்மென்ட் இருக்கிறதா என்று கேட்கிறீர்கள். ஏன் மற்ற துறைகளில்அட்ஜஸ்ட்மெண்ட் இல்லையா? எதனால் அதை பலரும் தட்டிக் கிழறுகிறீர்கள். நானும் தான் மருத்துவரிடம் வேலை செய்திருக்கிறேன்.

அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து சொன்னது:

மருத்துவர் என்னிடம் ஊசி எப்படி போட வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதற்காக அறைக்குள் என்னை அவர் அழைத்துச் சென்றார். நானும் நம்பி போனேன். திரும்பி நில் என்று சொன்னார். நானும் திரும்பி நின்னேன். அதன் பிறகு தான் அவர் கையால் என்னை தவறான இடத்தில் தொட்டார். அந்த இடத்திலிருந்து உடனே நான் சென்று விட்டேன். அவரை அந்த இடத்திலேயே நான் அறிந்திருந்தால் என்னை தான் தவறாக பேசி இருப்பார்கள். அதனால் அங்கிருந்து நான் கிளம்பி விட்டேன். நடந்த விஷயங்களை நான் சொன்னால் கான்வர்சி பர்சன் என்று என்னை முத்திரை குத்துகிறார்கள். ஆனால் இதுதான் உண்மை என்று பேசி இருக்கிறார்.

Advertisement