சினிமாவிலும் சரி, சின்னத்திரையிலும் சரி பிரபலங்கள் பலர் காதல் திருமணம் செய்துகொண்டுள்ளனர். அதிலும் சீரியல் நடிகைகளின் திருமணம் என்றால் சொல்லவே வேண்டாம் அது சமூக வலைத்தளங்களில் படு வைரலாக பரவி விடுகிறது.
மலையாள தொலைக்காட்சியில் சீதா என்ற தொடரில் நடிப்பவர்கள் ஆதித்யன் – அம்பிலி தேவி. இவர்கள் இருவருக்கும் காதல் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், இவர்கள் கொல்லத்தில் உள்ள கொட்டி தேவி கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக் கொண்டனர்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆதித்யனுக்கு அம்பிலி நான்காவது மனைவியாம், அதேபோல், அம்பிலிக்கு ஆதித்யன் இரண்டாவது கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர்கள் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வர
ஆதித்யன் – அம்பிலி தேவி ஜோடியை பயங்கரமாக வறுத்தெடுத்து வருகின்றனர்.