பரபரக்கும் சீரியல்கள் – இந்த வாரம் டிஆர்பியில் டாப் இடம் பிடித்த சீரியல் என்னென்ன தெரியுமா?

0
503
- Advertisement -

தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கியதிலிருந்தே மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக சீரியல்கள் விளங்குகிறது. சமீப காலமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்கள். அதிலும் தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் வெள்ளித்திரையை விட சின்னத்திரையை ரசிக்கும் ரசிகர்களின் பட்டாளம் அதிகமாகி வருகிறது.

-விளம்பரம்-

மேலும், ஒவ்வொரு சேனலும் புது வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறார்கள். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. வாரத்தின் எல்லாம் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் முதல் இரவு தூங்கும் வரை சீரியல்கள் வரிசைகட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனல்களாக சன் டிவி மற்றும் விஜய் சேனல்களாக திகழ்கிறது. எப்போதும் இந்த இரு சேனல்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது.

- Advertisement -

சின்னத்திரை சீரியல்கள்:

அதோடு டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சேனல்களின் இடையில் தான் மாற்றி மாற்றி இடம் பிடிக்கிறது. அதுமட்டுமில்லாமல் வாரம் வாரம் மக்களை அதிகம் கவரும் சீரியல் என்று டிஆர்பி பட்டியல் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த 2024 ஆம் வருடத்தின் பிப்ரவரி மாதத்தின் மூன்றாம் வாரத்தில் வெளியாகி டாப் 5 இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது.

எதிர்நீச்சல்:

பல வாரங்களுக்கு பின் இந்த சீரியல் முதல் இடத்தை பிடித்து இருக்கிறது. இயக்குனர் திருச்செல்வம் தான் நீண்ட இடைவெளிக்கு பிறகு எதிர்நீச்சல் தொடரை இயக்கி வருகிறார். பெண் உரிமைக்காக போராடும் இயக்கி இருக்கிறது. இந்த தொடர் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிக அளவு ஆதரவு பெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாகவே டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்நீச்சல் சீரியல் பின்னுக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. தற்போது சீரியலில் தர்ஷினியை மர்ம நபர்கள் கடத்தி வைத்திருக்கிறார்கள். தர்ஷினியை காப்பாற்ற மொத்த குடும்பமும் போராடிக் கொண்டிருக்கின்றது. தர்ஷினி காப்பாற்றப்படுவாரா? என அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

சிங்க பெண்ணே சீரியல்:

இந்த முறை சிங்க பெண்ணே சீரியல் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது. குடும்ப சூழ்நிலைக்காக கிராமத்திலிருந்து சென்னைக்கு பிடித்திருக்கிறது. கார்மெண்ட்ஸ்சில் வேலைக்கு செல்கிறார் ஆனந்தி. இவருடன் சில பெண்களும் வேலை செய்கிறார்கள். அங்கு அவர்கள் தைரியமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து தான் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது சீரியலில் ஆனந்தி, அன்பு தான் தன்னை காதலிக்கிறார் என்பதை புரிந்து கொண்டு அன்புவை காதலிப்பாரா? அவரை திருமணம் செய்து கொள்வாரா? இல்லை மகேஷை திருமணம் செய்து கொள்வாரா? போன்ற பரபரப்பான கட்டங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

சிறடிக்க ஆசை:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் மூன்றாவது இடத்தை பிடித்து இருக்கிறது. விஜய் டிவியில் இந்த சீரியல் தான் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருக்கிறது. தற்போது சீரியலில் மீனா தம்பி-முத்துவுக்கு இடையே பிரச்சனை சென்று கொண்டு இருக்கிறது. இதனால் மொத்த குடும்பமும் முத்துவுக்கு எதிராக இருக்கிறார்கள். ஆனால், முத்து மீது எந்த தவறும் இல்லை என்று மீனா புரிந்து கொள்வாரா? மீனா தம்பியின் சுயரூபம் தெரிய வருமா? என்று விறுவிறுப்பாக சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

கயல்:

கயல் சீரியல் எதிர்பார்க்காத வகையில் நான்காம் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த தொடர் 2021 ஆம் ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. சைத்ரா ரெட்டி தான் இந்த வருகிறது. கதாநாயகியாக நடித்து வருகிறார். கதாநாயகனாக சஞ்சீவ் நடித்து வருகிறார். தன் குடும்பத்திற்காக எல்லா சந்தோசம் எல்லாத்தையும் இழந்து போராடும் ஒரு பெண்ணின் கதை கயல் சீரியல்.

வானத்தைப்போல:

இந்த சீரியல் ஐந்தாம் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியல் 2020 ஆம் ஆண்டு முதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது முழுக்க முழுக்க அண்ணன்- தங்கை பாச கதை. இந்த தொடரில் ஸ்ரீகுமார், மான்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். தற்போது சீரியலில் துளசி மீது பொன்னி அதிகமான வெறுப்பை காண்பித்து வருகிறார். துளசி இறந்தது போல் காண்பித்து பிழைத்து விடுகிறார். இனி பொன்னி-துளசி இடையே சண்டை என்று சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement