நான் ஒன்னும் பப்லிஸிட்டிக்காக பண்ணல, என் நிலைமைல இருந்தா புரியும் – விவாகரத்து போட்டோ ஷூட் சர்ச்சை குறித்து ஷாலினி.

0
697
Shalini
- Advertisement -

சின்னத்திரை சீரியல் நடிகை ஷாலினி நடத்தி இருக்கும் விவாகரத்து போட்டோ சூட் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷாலினி. இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் என்ற சீரியலில் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதற்குப்பின் இவர் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். மேலும், இவர் சிறந்த டான்ஸரும் ஆவார்.

-விளம்பரம்-

சமீபத்தில் கூட ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியில் இவர் தன்னுடைய மகள் ரியாவுடன் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் இவரும் இவருடைய மகளும் செய்து சேட்டைகள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் நடிகை ஷாலினிக்கு விவாகரத்து ஆகியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வருகிறது. ஏற்கனவே ஷாலினிக்கு மேட்ரிமனி மூலம் வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்திருந்தார்கள்.

- Advertisement -

ஆனால், திருமணம் ஆன ஒரு சில மாதங்களிலேயே இருவருக்கும் சண்டை ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து விட்டார்கள். அதற்குப் பிறகுதான் ரியாஸ் என்பவருடன் ஷாலினிக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. விவாகரத்துக்கு பிறகு ஷாலினி தனியாக வாழ்ந்திருந்தார். அப்போது தான் ரசிகர் என்ற பெயரில் ரியாஸ் ஷாலினியிடம் நெருங்கி பழகியிருக்கிறார். மேலும், இருவரும் காதலிக்கும் செய்தியை வெளிப்படையாக அறிவித்திருந்தார்கள்.

அப்போதே ரியாஸ் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் மனைவியை விட்டு பிரிந்து இருக்கிறார் என்றும் ஷாலினி கூறியிருந்தார். பின் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். அதன் பின் ஷாலினி கர்ப்பமாக இருந்தார். இதனை அடுத்து இவர்களுக்கு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால், ரியாஸ் தன்னை பலமுறை அடித்து துன்புறுத்தியதாக ஷாலினி கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் ரியாசுக்கு வேறு சில பெண்களோடு தொடர்பில் இருந்ததாகவும் சில மாதங்களுக்கு முன்பு ஷாலினி பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

-விளம்பரம்-

பின் நடிகை ஷாலினிக்கு ரியாசுடன் விவாகரத்து ஏற்பட்டுவிட்டது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஷாலினி தனது விவகாரத்தை கொண்டாடும் விதமாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருந்தார். தற்போது உள்ள காலகட்டத்தில் வெட்டிங் போட்டோ ஷூட் தான் பலரும் பார்த்து இருப்பார்கள் ஆனால், முதல் முறையாக இவர் நடித்திய விவாகரத்து போட்டோ ஷூட்டை கண்டு பலரும் பாராட்டினாலும் அதற்கும் விமர்சனங்களும் குவிந்தது.

மேலும், இதையே ஒரு ஆண் செய்து இருந்தால் என்னென்னெ பேசி இருப்பார்கள் இதை எல்லாம் இவர் விளமப்ரத்துக்காக செய்கிறார் என்றும் விமர்சனங்கள் குவிந்தது. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷாலினி தான் இதை பப்லிசிக்காக செய்யவில்லை என்றும் திருமண வாழ்வில் தான் அனுபவித்த பல கொடுமைகளையும் கூறியுள்ளார். மேலும், தான் திருமணத்திற்கு பின்னர் நடிப்பை கூட விட்டுவிட்டேன்.

ஒரு சினிமா பார்க்கும் போது காமெடி காட்சிகளில் சிரித்தால் கூட எங்க குடும்ப பெண்கள் இப்படி எல்லாம் சிரிக்க மாட்டார்கள் என்று சொல்வார். அதில் இருந்து நான் சிரிப்பதையே மறந்துவிட்டேன் என்று வேதனையுடன் கூறியுள்ளார். என்னை அடித்தால் கூட பார்க்கிங்கில் வந்து தூங்குவேன். 4 வருடங்களாக நான் வாங்கிய அடியை அந்த ஒரு நாள் திருப்பி கொடுத்தேன். என்னை விமர்சிக்கும் முன்னர் என் இடத்தில் இருந்து பார்த்தால் தான் தெரியும் என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.

Advertisement