அப்பா கதை கேட்டு ஆசீர்வதித்த படம், விட்ட படத்தை மீண்டும் துவங்கும் ஷண்முகபாண்டியன். என்ன படம் தெரியுமா?

0
173
Shanmugapandian
- Advertisement -

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனின் படைத்தலைவன் படம் குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. கேப்டன் விஜயகாந்தின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது. கேப்டனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருக்கின்றார்கள். மேலும், விஜயகாந்த் மறைவு அவரின் குடும்பத்தை அதிகம் பாதித்து இருக்கிறது. அதோடு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரு மகன்கள் விஜயகாந்த்க்கு உள்ளனர்.

-விளம்பரம்-

விஜய பிரபாகரன், தாயார் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மாமா எல் கே சதீஷ் ஆகியோரை பின்பற்றி தேமுதிக-வில் செயல்பட்டு வருகிறார். மேலும், இளையவரான சண்முக பாண்டியன் தனது தந்தையின் வழியை பின்பற்றி சினிமாவில் நடித்து உள்ளார். இவர் விஜயகாந்த் உடன் சேர்ந்து நடித்து 2015 ஆம் ஆண்டு வெளியான படம் சகாப்தம். இந்த படத்தில் தான் விஜயகாந்த் கடைசியாக நடித்திருந்தார். இதனை அடுத்து சண்முக பாண்டியன் மதுர வீரன் என்ற படத்தில் நடித்து இருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை.

- Advertisement -

சண்முக பாண்டியன் திரைப்பயணம்:

பின் சில வருடங்களுக்கு முன் விஜயகாந்த் அவர்கள் தன்னுடைய மகன் சண்முக பாண்டியன் உடன் சேர்ந்து தமிழன் என்று சொல் என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தார். இந்த படம் வரலாறு கதையை மையாக வைத்து எடுக்கப்பட இருந்ததால் விஜயகாந்த் மன்னன் வேடத்தில் நடிப்பதாக இருந்தார். இந்த படத்திற்கான வேலைகள் எல்லாம் தொடங்கினார்கள். ஆனால், விஜயகாந்த்தினுடைய உடல்நிலை சரியில்லாமல் போனதாலும், தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தில் இருந்து விலகியாதல் இந்த படம் அப்படியே நின்று விட்டது.

படைத்தலைவன் படம்:

மீண்டும் இந்த படம் எடுக்குவதாகவும் கூறப்படுகிறது. சிறிய இடைவெளிக்கு பின் தற்போது சண்முகபாண்டியன் அவர்கள் படைத்தலைவன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கும்கி படம் போல யானை சம்மந்தப்பட்ட படமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் படத்தை வால்டர், ரேக்ளா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அன்பு இயக்குகிறார். இந்த படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

இந்த படத்தை டைரக்டர் சினிமாஸ் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் சம்பவத்தை கதைக்களமாக வைத்து இயக்குனர் கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சத்தம் இல்லாமல் கிட்டத்தட்ட முடித்திருக்கிறார்கள். இன்னும் ஒரு வாரத்தில் இந்த படத்தினுடைய மொத்த படபிடிப்பு முடிந்து விடும் என்று கூறப்படுகிறது. படத்தில் மொத்தம் ஐந்து சண்டை காட்சிகள் இருக்கிறது. விஜயகாந்தை மிஞ்சும் அளவிற்கு அவருடைய மகன் சண்டை காட்சிகளில் பின்னி பெடல் எடுத்திருப்பதாக படக்குழுவினர் கூறுகிறார்கள்.

படம் குறித்த அப்டேட்:

இவர் இனிமேல் சினிமாவில் முழுக்க முழுக்க கவனம் செலுத்தி தன்னுடைய அப்பாவின் இடத்தை நோக்கி பயணம் செய்ய இருப்பதாகவும் கூறியிருக்கிறார். முதலில் இந்தப் படைத்தலைவன் கதையை விஜயகாந்த் தான் கேட்டிருக்கிறார். அவர்தான் படைத்தலைவன் படத்தை எடுங்கள் நன்றாக இருக்கும் என்றெல்லாம் ஆசீர்வாதம் பண்ணி அனுப்பி வைத்தாராம். தன்னுடைய அப்பாவின் ஆசைக்காகவே இந்த படத்தை ஆக்ரோஷமாக சண்முக பாண்டியன் நடித்திருக்கிறார். இந்த படத்தை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிடப்பட குழு திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால், இன்னும் கிராபிக்ஸ் வேலையெல்லாம் முடியாததால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

Advertisement