ஏன் இப்படி முட்டு கொடுக்குரீங்க, பெண்கள் பாதுகாப்ப விட உங்க ஜாதி தான் முக்கியமா ? காலஷேத்ரா விவாகரத்தை கிழித்தெடுத்த ஷர்மிளா.

0
643
Sharmila
- Advertisement -

கலாஷேத்ரா விவகாரம் குறித்து நடிகை அபிராமி கூறி இருப்பது ஆதங்கம் இல்லை, ஆணவம் என்று டாக்டரும், நடிகையுமான ஷர்மிளா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னை அடுத்த திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் ருக்மணி தேவி கலை கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பரதநாட்டியம் உள்ளிட்ட பல கலைகள் பயிற்றுவிக்கப்படுகிறது. மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி முறையில் இந்த கல்லூரி செயல்படுகிறது.

-விளம்பரம்-

இந்த நிலையில் இங்கு பல பிரிவினைகளும், ஏற்றத்தாழ்வுகளும் இருப்பதாக அடிக்கடி புகார்கள் எழுந்திருக்கின்றது. இதனால் கலாஷேத்ரா அறக்கட்டையின் கீழ் இயங்கும் இந்த கல்லூரியில் உள்ள பேராசிரியர்கள் மீது ஏராளமான மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்திருக்கின்றனர். பின் கலாஷேத்ரா சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் நடிக்க வேண்டும் என்றால் ஆசிரியரின் விருப்பங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பேராசிரியர்கள் தெரிவித்தும், அத்துமீறி மிரட்டியும் நடந்ததாகவும் மாணவிகள் புகார் அளித்து இருந்தார்கள்.

- Advertisement -

கலாஷேத்ரா குறித்த சர்ச்சை:

மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் மீது மகளிர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் கைது செய்யப்பட்டார். ஹரிபத்மனை கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஏப்ரல் 13-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவை அடுத்து அவரை புழல் சிறையில் காவல்துறையினர் அடைத்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் கலாஷேத்ராவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து இருக்கிறார் அபிராமி.

கலாஷேத்ரா குறித்து அபிராமி சொன்னது:

இதுகுறித்து பேசிய அவர் “நானும் கலாஷேத்ரா கல்லூரியில் படித்தவள் தான். அந்த கல்லூரியின் முன்னாள் மாணவி நான். பொதுவாக எந்தவொரு வன்கொடுமைகள் நடந்தாலும் யாரும் சொல்லாமலே குரல் கொடுப்பேன். கலாஷேத்ரா பற்றி சமூக வலைதளத்தில் பரவும் தகவல்களால் வேதனையடைந்தேன். கலாஷேத்ரா ஆசிரியர் நிர்மலா என்பவர் என்னை தொடர்பு கொண்டு ஹரிபத்மனுக்கு எதிராக பேசுமாறு கூறினார். பேராசிரியர் ஹரி எங்களுக்கு வகுப்பெடுத்த வரை எந்தவித தொல்லையும் அளிக்கவில்லை. ஒரு பக்கமாக நின்று பேசாமல் இருதரப்பும் விசாரித்து முடிவெடுத்தால் நன்றாக இருக்கும்.

-விளம்பரம்-

நடிகை ஷர்மிளா அளித்த பேட்டி:

இந்த விவகாரத்தில் கலாஷேத்ரா மாணவிகள் பலி ஆடுகளாக ஆக்கப்படுகிறனர். ஹரிபத்மன் மிகவும் சிறந்த ஆசிரியர். நான் இருந்த வரை எனக்கு எந்த தொந்தரவும் நிகழ்ந்தது இல்லை என்று கூறி இருக்கிறார். இந்த நிலையில் அபிராமியின் கருத்துக்கு நடிகை சர்மிளா பேட்டியில் கூறி இருந்தது. கலாஷேத்ராவில் தொடர்ந்து பத்து ஆண்டுகள் பாலியல் தொல்லை நீடித்து வருவதாக மாணவிகள் கூறி போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள். அதற்கு பின்னல் தான் சமூக ஆர்வலர்கள் கையில் எடுத்தனர். இதனால் பேராசிரியர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. மாணவிகள் போராட்டம் நடத்தவில்லை என்றால் இந்த விவகாரம் வெளியிலேயே தெரிந்திருக்காது.

அபிராமி குறித்து சொன்னது:

மேலும், கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஹரி பத்மநாபன் அப்படிப்பட்டவர் இல்லை. இதில் ஏதோ அரசியல் நடக்கிறது. கலாஷேத்ரா என்ற பெயர் வாயில் நுழையாதவர்கள் எல்லாம் அதைப் பற்றி குற்றச்சாட்டு வைக்கிறார்கள். இந்த பெயர் யார் வாயிலும் நுழையாது என்றால் இது எங்களுக்கான விஷயம். எங்கள் சமூகத்திற்கான விஷயம். இதில் கேள்வி கேட்க நீங்கள் யார் என்று சொல்லாமல் அபிராமி சொல்கிறார். இவருடைய பேச்சில் ஆதங்கம் இல்லை ஆணவமாக தெரிகிறது. மத்திய அரசின் நிதியில் செயல்பட்டு வரும் இந்த கல்வி நிறுவனம் நம் கட்டும் வரியில் தான் செயல்படுகிறது. இந்த பிரச்சினையில் யார் வேண்டுமானாலும் கேட்கலாம். கேள்வி கேட்கக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்குமே உரிமை இல்லை. எங்களுக்கு கோபம் வரக்கூடாதா? மக்கள் வரிப்பணத்தில் செயல்படும் ஒரு கல்வி நிறுவனத்தில் இப்படி ஒரு கொடுமை நடக்கலாமா? நம் சமுதாயத்தை சேர்ந்த பெண்களுக்கு தான் குரல் கொடுக்கிறோம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

Advertisement