லிவிங் ரிலேஷன்ஷிப், பப்லுவுடனான பிரிவு குறித்து முதன் முறையாக மனம் திறந்த காதலி சீத்தல்

0
135
- Advertisement -

பப்லுவுடனான பிரிவு குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார் ஷீத்தல். தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகளாக மிக பிரபலமான நடிகராக இருப்பவர் பிரித்திவிராஜ். இவர் சினிமா உலகிற்கு வந்து நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கிறது. அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 200 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். பின் இவர் சின்னத்திரையில் மர்மதேசம், அரசி, வாணி ராணி போன்ற பல்வேறு தொடர்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இதனிடையே இவர் பீனா என்பவரை திருமணம் செய்து இருந்தார். இவர்களுக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு மகன் உள்ளார்.பின் இவர் தன்னுடைய முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து இருக்கிறார்கள். இந்த சமயத்தில் தான் பப்லுக்கு மலேசியாவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு இருக்கிறது. இவரின் பெயர் ஷீத்தல். முதலில் இந்த பெண் பப்லுக்கு தொழில் ரீதியாக தான் உதவியாளராக இருந்தார்.

- Advertisement -

பின் கடந்த 2022ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியானது. இருவருக்கும் 30 வயது வித்தியாசம் இருக்கிறது.பலர் இவருடைய திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் இவர்கள் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தங்களுடைய வேலையை செய்திருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில மாதமாக இருவரும் பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி இருந்தது.

அதோடு சீத்தல் மற்றும் பிரிதிவிராஜ் இருவருமே தங்களுடைய சோசியல் மீடியாவில் தாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்டு புகைப்படங்களை டெலிட் செய்து இருக்கிறார்கள். து மட்டும் இல்லாமல் சமீபத்தில் பிரித்திவிராஜ் தன்னுடைய பிறந்தநாளை தனியாக கொண்டாடி இருக்கிறார். இதை பார்த்த பலரும் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்களா? சண்டையா? என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். பின் ரசிகர் ஒருவர், நீங்கள் பிரிந்து விட்டீர்களா? என்று கேட்டதற்கு சீத்தல் லைக்ஸ் கொடுத்து இருந்தார்.

-விளம்பரம்-

பப்லுவே, சீத்தலுடனான பிரிவு குறித்து வெளிப்டுயாக இன்னும் பேசாத நிலையில் பப்லுவுடனான பிரிவு குறித்து முதல் முறையாக தனது இன்ஸ்டா ஸ்டோரி மூலம் தெரிவித்து இருக்கிறார் ஷீத்தல். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் ‘என் கடந்த கால வாழ்க்கைப் பற்றி பலரும் என்னிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்கின்றனர். பலரும் என் சூழ்நிலையைப் புரிந்துகொள்ளாமல் நடந்தவற்றைத் தெரிந்துகொள்ளாமல் என்னைத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்.

பிருத்வியும் (பப்லு) நானும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளுங்கள். நாங்கள் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில்தான் இருந்தோம். எங்கள் உறவு நாங்கள் நினைத்தபடி இருக்கவில்லை. அதனால், இருவரும் இப்போது பிரிந்திருக்கிறோம். இருவரும் சேர்ந்திருந்தது மிகவும் மகிழ்ச்சியான தருணங்கள். ஆனால், இது இருவரும் பிரிவதற்கான நேரம். எங்களின் இந்த முடிவை அனைவரும் மதித்து, எங்களுக்கான நேரத்தை எங்களுக்குக் கொடுக்கவும்’ என்று கூறியுள்ளார்.

Advertisement