பணப்பெட்டி டாஸ்க்கில் டீவ்ஸ்ட் : யாரும் எதிர்பாராமல் வெளியேறிய பெண் போட்டியாளர் – யார் தெரியுமா?

0
145
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பணப்பெட்டி டாஸ்க்கில் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 101 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா, ரஞ்சித், ஜெப்ரி, அன்ஷிதா, ராணவ்,மஞ்சரி ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் 8:

பின் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் ராயன் தான் வெற்றி பெற்றார். நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்குவதால் போட்டியாளர்கள் மத்தியில் போட்டி, சண்டை, சச்சரவு எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது. கடந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து ஏற்கனவே வெளியே போயிருந்த போட்டியாளர்களில் எட்டு பேர் உள்ளே சென்று இருந்தார்கள். பிக் பாஸ் வீடே ரணகளமாக இருந்தது. அதன் பின் கடந்த வாரம் அருண் பிரசாத், தீபக் வெளியேறி இருந்தார்கள். இவர்களுடைய எவிக்சன் பலருக்குமே அதிர்ச்சி தான்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

இப்படி நிகழ்ச்சியில் நன்றாக விளையாடிய போட்டியாளர்கள் வெளியேறியது பலருக்குமே அதிர்ச்சி தான்.
தற்போது நிகழ்ச்சியில் 6 போட்டியாளர்கள் தான் இருக்கிறார்கள். இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக பிக் பாஸ் கொடுத்து இருக்கிறது. அதாவது, பிக் பாஸ் வீட்டுக்குள் வெளியே வைக்கப்பட்டிருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள்
வந்து விட்டால் அந்த பணத்துடனே அவர்கள் நிகழ்ச்சியில் மீண்டும் தொடரலாம்.

-விளம்பரம்-

வெளியேறிய நபர்:

அப்படி இல்லாதவர்கள் நிகழ்ச்சியை விட்டு வெளியேற வேண்டும். இதுதான் விதி. அந்த வகையில்
இந்த டாஸ்க்கில் ராயன், முத்துக்குமரன் பணப்பெட்டி டாஸ்க்கை விளையாடி வெற்றி பெற்று விட்டார்கள். பெண்கள் அணியில் பவித்ராவும் வெற்றி பெற்றுவிட்டார். ஆனால், ஜாக்குலின் தான் இந்த டாஸ்க்கில் தோல்வி அடைந்திருக்கிறார். இதனால் இவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது.

பைனல் ஷூட்:

இது பலருக்கும் ஷாக் தான். அதோடு நாளை மறுதினம் பைனலுக்கான சூட்டிங் நடைபெற இருக்கிறது. இதில் மீதி இருக்கும் சௌந்தர்யா, பவித்ரா, முத்துக்குமரன், ராயன், விஷால் ஆகிய 5 பேர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதில் யார் டைட்டில் வெற்றி பெறுவார்கள்? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Advertisement