வெறும் 200 ரூபாய் கொடுத்தால் வீடியோ கால். லாக்டவுன் நேரத்தில் அதிரடி காட்டிய ரஜினி, விஜய் பட நடிகை.

0
1523
shriya
- Advertisement -

உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

-விளம்பரம்-

‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. கொரோனா நிவாரண பணிகளுக்காக பல திரையுலக பிரபலங்கள் நிதியுதவி கொடுத்து உதவி வருகின்றனர். இந்த லாக் டவுன் டைமில் பல திரையுலக பிரபலங்கள் ஷூட்டிங் எதுவும் இல்லாததால், வீட்டில் தங்களது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவு செய்து பாதுகாப்பாக இருந்து வருகின்றனர்.

- Advertisement -

திரையுலக பிரபலங்கள் சமூக வலைத்தளமான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பல விதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை ஷேர் செய்த வண்ணமுள்ளனர். அதில் பாட்டு பாடுவது, சமைத்து கொண்டிருப்பது, ஜிம்மில் வொர்க்கவுட் செய்வது, பாடலுக்கு நடனமாடுவது, டிக் டாக் செய்வது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகம் வெளியாகி வருகின்றது.

இந்நிலையில், பிரபல நடிகை ஸ்ரேயா சரண் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். அந்த பதிவில் “சென்னை டாஸ்க் ஃபோர்ஸ் மற்றும் தி கைண்ட்நெஸ் ஃ பவுண்டேஷனுடன் இணைந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டர்வர்கள், இந்த லாக் டவுன் டைமில் பாதிக்கப்பட்ட ஆதரவற்றோர்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு பணம் கொடுத்து உதவுவதற்காக நிதியுதவி திரட்ட திட்டமிட்டுள்ளோம்.

-விளம்பரம்-

இந்த தொண்டு நிறுவனத்துக்கு நீங்கள் ரூ.200 நிதியுதவி செய்ததோடு, அந்த ரெசிப்ட்டை ‘[email protected]’ என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதிலிருந்து தேர்ந்து எடுக்கப்படும் இரண்டு லக்கி வின்னர்களுடன் நான் வீடியோ கால் மூலம் உங்களுடன் உரையாடுவேன்” என்று நடிகை ஸ்ரேயா சரண் தெரிவித்திருக்கிறார். இப்போது ‘நரகாசூரன்’ மற்றும் ‘சண்டக்காரி’ என இரண்டு தமிழ் படங்கள் மட்டுமே கைவசம் வைத்திருக்கிறார் நடிகை ஸ்ரேயா சரண்.

Advertisement