Cringe பட்டத்தை பெற்ற பிரபல சீரியலின் இரண்டாம் பாகத்தில் அர்ஜுன் சாரா ? அறிவிப்பை கேட்டு அலறிய ரசிகர்கள்.

0
752
sibbu
- Advertisement -

சமீப காலமாகவே மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக சின்னத்திரை தொடர்கள் இருக்கிறது. கொரோனா லாக் டவுனில் இருந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சீரியலை விரும்பி பார்த்து வருகிறார்கள். அதில் எப்போதும் சன் டிவி முதலிடத்தை பிடித்து விடும் என்பதில் அய்யமில்லை. டிஆர்பி ரேட்டிங்கிலும் சன் டிவி முதல் இடம் பிடித்து வருகிறது. அந்த வகையில் சில வருடமாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி போட்ட தொடர்களில் ‘ரோஜா’ சீரியலும் ஒன்று. இந்த சீரியல் டிஆர்பியிலும், மக்கள் மனதிலும் முதல் இடத்தைப் பிடித்துஇருந்தது.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல்களில் இந்த சீரியல் தான் டாப் இடத்தை பிடித்து இருந்தது. இதனால் ரோஜா சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியது. மேலும், 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக சென்றது. ரோஜா சீரியலில் ஹீரோவாக சிபு சூர்யனும், ஹீரோயினாக பிரியங்கா நல்காரியும் நடித்தனர்.

- Advertisement -

சீரியலில் விலகிய சிபு சூர்யன்:

இந்தநிலையில் ரோஜா சீரியல் இருந்து சிபு சூர்யன் திடீரென விகுவதாக தன் சமூக வலைத்தளத்தில் அறிவித்து இருந்தார். சிபு சூரியன் விலகுவதாக அறிவித்து இருப்பது ரசிகர்களுக்கு ஷாக்கை கொடுத்திருந்தது. இவரின் இந்த பதிவை கண்டு அதிர்ச்சியான ரசிகர்கள் பலர் சீரியலை தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தனது ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் சீரியலில் தொடருவதாக அறிவித்தார் சிபு .

நிறைவு பெற்ற ரோஜா தொடர் :

இப்படி ஒரு நிலையில் கடந்த நவம்பர் மாதம் இந்த தொடர் நிறைவடைந்தது. இந்த தொடரின் கடைசி நாள் எபிசோடில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருந்த சிபு அர்ஜுன் சாராக எனது கடைசி நாள். எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பு நிறுவனம், இயக்குனருக்கு நன்றி. அதோடு எனது ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி, விரைவில் உங்களை வேறு ஒரு தொடர் மூலம் சந்திக்கிறேன் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இவர் பாரதி கண்ணம்மா தொடரின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் வைரலானதை தொடர்ந்து சிபுவின் ரசிகர்கள் பலரும் இந்த தொடரில் நடிக்க வேண்டாம் என்று சிபுவை டேக் செய்து வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் பாரதி கண்ணம்மா தொடர் trp லிஸ்டில் இருந்தது.

பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருந்த பாரதி கண்ணம்மா சீரியல் முடிவடைய இருக்கிறது என்று கடந்த சில மாதங்களாகவே தகவல் வெளியான வண்ணம் இருந்தது. ரசிகர்களும் இப்போது முடிந்துவிடும் அப்போது முடிந்துவிடும் என்று காத்து காத்து 3 மாதங்களாக சென்று விட்டது. மேலும் இந்த சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னட் எதிர்பாராததை எதிர்ப்பாருங்கள் என்று பலவிதமான ட்விட்களையும் இந்த சீரியலில் கொடுத்து கதையை நகர்த்தி வந்தார்.

இந்நிலையில் பரபராப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் உண்மையிலேயே முடிவை நெருங்கி உள்ளது. இப்படி பட்ட நிலையில் தான் பாரதி கண்ணம்மா இயக்குனர் பிரவீன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மங்களான ஒரு புகைப்படத்தை பகிர்ந்து யார் இவர்கள்? என்று பாரதி கண்ணம்மா சீசன் 2 என பதிவிட்டுள்ளார். ஒரு வேலை அது சிபுவாக இருக்குமோ என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement