தென்னிந்திய சினிமா திரை உலகில் கவர்ச்சி நாயகியாகவும், முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவருடைய இயற்பெயர் விஜயலஷ்மி ஆகும். இவர் சினிமா துறையில் 1970களில் ஒப்பனைக் கலைஞராக தான் வாழ்க்கையை தொடங்கினார்.பின் தமிழ் நடிகர் வினுசக்கரவர்த்தியின் ‘வண்டிச்சக்கரம்’ என்ற படத்தில் அறிமுகமானார். மேலும், இந்த படத்தில் சில்க் என்கிற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் நடித்தார்.
இதனால் இவருடைய பெயர் சில்க் ஸ்மிதா என்று அழைத்தார்கள். சினிமா திரை உலகில் 17 வருடம் பயணம் செய்தார். அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.சினிமாத்துறையில் பிரபலமாகவும், மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த சில்க் ஸ்மிதா திடீரென்று தற்கொலை செய்து கொண்டார்.மேலும், இவர் இந்த உலகை விட்டு மறைந்தாலும் அவருடைய படங்கள் வந்தால் போதும் அவரைப் பற்றிப் பேசாதவர்கள் யாருமில்லை.
இன்று வரை அவரைப் பற்றி தான் பேசிக் கொண்டு இருக்கின்றார்கள். தற்போது சில்க் ஸ்மிதாவை கண்ணாடியில் பார்த்தால் எப்படி இருக்குமோ அதே மாதிரி அச்சு அசலாக தோற்றமளிக்கும் பெண்ணின் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் ரசிகர்கள் இணையங்களில் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும் கூட அந்த பெண் பற்றிய விவரங்கள் ஏதும் தெரியவில்லை.
ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகை சில்க் ஸ்மிதா 80, 90களில் இவருடைய நடனம் இல்லாத தமிழ் திரைப் படங்களைப் பார்க்கவே முடியாது. அந்த அளவிற்கு சினிமா துறையில் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றார்.மேலும், இவர் காதல் தோல்விகளாலும் , குடி பழக்கத்தினாலும் மன அழுத்தத்திற்கு ஆளானார். பின்னர் தற்கொலையும் செய்து கொண்டார்.தற்போது சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையை படமாக எடுக்க போகிறார்கள் என தகவல் வெளிவந்தது.