தென்னிந்திய சினிமா திரை உலகில் சர்ச்சை நாயகன் என்றால் அது ‘லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு’ தான். . இருப்பினும் சினிமாத்துறையில் அவரை குறித்து பல விமர்சனங்கள் எழுந்து கொண்டிருந்தன. எப்படியிருந்தாலும் சிம்புவுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டுதான் வருகிறது.நடுவில் சில தோல்வி படங்கள் வந்த நிலையிலும் ரசிகர்கள் அவரை கை கொடுத்து தூக்கி விட்டனர்.செக்கசிவந்தவானம், வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படங்கள் மூலம் மீண்டும் சினிமா களத்தில் இறங்கினர்.
இந்த படங்களை தொடர்ந்து சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைப்பததற்கு வெளிநாடு சென்று தீவிர கவனம் செலுத்தி வந்த சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வந்தார். பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்னர், மாநாடு படம் மீண்டும் துவங்கியது. பின்னர் கொரோனா பிரச்சனை காரணமாக மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் துவங்கியது. டிசம்பர் 24-ம் தேதி வரை இந்தப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி ,மனோஜ் பாரதிராஜா, டேனியல் என்று பல்வேறு நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.இன்று (நவம்பர் 21) காலை 10:44 மணிக்கு ‘மாநாடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகமானார்கள். அதன்படி சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாநாடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் நெத்தியில் புல்லட்டுடன், தலையில் ரத்த காயங்களுடன், மங்காத்தா அஜித் போல ஒரு செயின் மற்றும் டாலர் என்று நமாஸ் செய்து கொண்டிருக்கிறார் சிம்பு. பர்ஸ்ட் லுக், தரமான சம்பவமா இருக்கு என்றும், பழைய முகத்தைப் பார்க்க சிறப்பா இருக்கும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதையடுத்து #MaanaaduFirstLook என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி ருகிறது.