விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ், புது பங்களா மீது லோன் போட்டு ரெண்டு கோடி ரூபாய் வரை கடன் வாங்குகிறார். இன்னும் 70 லட்சம் பணம் தேவை என்பதால் தன்னுடைய அப்பாவிடம் வீட்டை விற்று பணம் கொடுக்க சொன்னார். இதனால் முத்து-ரவி கோபப்பட்டு சண்டை போட்டார்கள். விஜயா, எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். அதற்குப்பின் முத்து, ரோகினி உடைய அப்பாவிடம் பணம் வாங்கி இந்த வீட்டை வாங்கு என்று சொன்னவுடன் எல்லோருமே ரோகினி பக்கம் திரும்பி இருந்தார்கள். ரோகினி, தன் மாமாவிடம் பேசுவது போல் வித்யாவிற்கு ஃபோன் செய்து பணம் கேட்டு நடித்தார்.
இது எல்லாம் கவனித்த மீனாவிற்கு சந்தேகம் வந்து முத்துவிடம் சொன்னார். இன்னொரு பக்கம் ரோகினி- மனோஜ் இருவருமே ஸ்ருதி அப்பாவிடம் பணம் கேட்க சொல்லி ரவியை கட்டாயப்படுத்தி இருந்தார்கள். அதற்கு ரவி, சுருதி இருவருமே முடியாது என்று மறுத்து விடுவதால் மனோஜ் கோபப்பட்டார். பின் எப்படியாவது இந்த வீட்டை வாங்க வேண்டும் என்று ரோகினி, மனோஜை உஷ்பேத்தி இருந்தார். அதற்கு பின் சவாரிக்கு முத்து, மனோஜினுடைய முன்னாள் காதலி ஜீவாவை அழைத்துக் கொண்டு போனார். நேற்று எபிசோட்டில் ஜீவா, ஒரு இடம் வாங்குகிறேன். ரெஜிஸ்ட்ரேஷன் ஆபீஸ் போகணும். போன முறை ஒரு பிராடு என்னிடம் 30 லட்சம் ரூபாய் ஏமாற்றிவிட்டது என்று சொன்னார்.
சிறகடிக்க ஆசை:
பின் ரெஜிஸ்ட்ரேஷன் ஆபீஸில் ஜீவா, இடம் வாங்குவது பற்றிக்கான விவரத்தை கேட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து ரோகினி- மனோஜ் அங்கு வந்தார்கள். அவர்களை பார்த்தவுடன் ஜீவா கோபப்பட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார். பின் முத்துவிடம் நான் யாரை பார்க்க கூடாது என்று நினைத்தேனோ அவர்களே பார்க்கும்படி ஆகிவிட்டது என்று சொன்னார். அதற்குப்பின் ஜீவா, முத்துவுக்கும் அவருடைய மனைவிக்கும் பரிசு ஒன்றைக் கொடுத்தார். இன்னொரு பக்கம் வீட்டில் எல்லோருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பங்களாவுடைய உண்மையான ஓனர் வந்தார்.
நேற்று எபிசோட்:
அப்போது அவர், யார் நீங்கள்? எதற்காக இங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு மனோஜ், நான்தான் இந்த பங்களாவின் ஓனர் என்று சொல்ல, உண்மையான ஓனர் நான் தான். அவர்கள் இங்கு வாடைக்கு இருந்தவர்கள் என்று சொன்னவுடன் எல்லோருமே அதிர்ச்சி ஆனார்கள். பின் மனோஜ் அந்த போலி ஓனருக்கு போன் செய்து பார்த்தார். ஆனால், போன் ஸ்விச் ஆப். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் போலி ஓனர் போன் எடுக்கவில்லை என்றவுடன் மனோஜ் பதறுகிறார். ஒரிஜினல் ஓனர், அவன் எனக்கே ரெண்டு மாச வாடகை கொடுக்காமல் ஏமாற்றிக் கொண்டிருந்தான். உங்களையும் ஏமாற்றி பணத்தை வாங்கி விட்டான் என்று சொன்னதை கேட்டவுடன் ரோகினி மயக்கம் போட்டு விழுந்து விட்டார்.
இன்றைய எபிசோட்:
விஜயா, மனோஜ்க்கு பயங்கர ஷாக். முத்து, அவனைப் பார்த்ததும் ஏமாற்றுக்காரன் என்று தெரிந்தது. யாரு என் பேச்சை கேட்கவில்லை என்று திட்டினார். பின் அனிதா ஓனர், இங்கிருந்து காலி செய்ய சொன்னார். அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம் இருந்தது. பின் அங்கு வந்த போலீஸ் செய்யவில்லை என்றால் போலீஸ், அவர்களிடம் கம்பிளைன்ட் வாங்கி வீட்டை காலி செய்ய சொன்னார்கள். வேறு வழியில்லாமல் எல்லோரும் தங்களுடைய வீட்டிற்கு வந்து விட்டார்கள்.
சீரியல் ட்ராக்:
எல்லோருமே மனோஜை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். ரோகினி- விஜயா இருவரும் மனோஜ்க்கு சப்போர்ட் செய்து பேச, அண்ணாமலைக்கு கோபம் வந்து விஜயாவை திட்டிவிட்டார். பின் அந்த போலி ஓனரை கண்டுபிடிக்க வேண்டும் என்று முத்துவிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார். முத்து, மனோஜிற்கு வீடு வாங்க சொன்னா அவருடைய நண்பரை விசாரிக்கிறார். அவர், எனக்கு ஒரு மாதம் தான் பழக்கம். அவரைப் பற்றி தெரியாது என்று சொன்னவுடன் முத்துக்கு ஷாக் ஆகிறது, இத்துடன் சீரியல் முடிகிறது.