முத்து செய்த வேலையால் மீனாவுக்கு வந்த சோதனை, மனோஜ் சொன்ன வார்த்தை – விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

0
158
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கோவிலில் விஜயா- மனோஜ் செய்த பரிகாரத்தை வீடியோவாக எடுத்து தன்னுடைய அப்பாவிடம் காண்பித்தார் முத்து. இதனால் மொத்த குடும்பமே விழுந்து விழுந்து சிரித்தது. இன்னொரு பக்கம் மீனா, பார்வதி வீட்டிற்கு பூ கொடுக்க போனார். அப்போது பார்வதி, ரோகினி தான் 2 லட்சம் பணத்தை ஏற்பாடு செய்து தந்தார் என்று சொன்னதும் மீனா ஷாக் ஆனார். இதை முத்துவிடம் மீனா சொல்ல, அவர் ரோகினி மீது சந்தேகப்பட்டார். மறுநாள் ரோகினி இடம் மீனா, இதை பற்றி கேட்க, அவர் ஏதேதோ சொல்லி சமாளித்தார். இதனால் மீனா-சுருதி இருவருக்குமே சந்தேகம் வந்தது.

-விளம்பரம்-

இதைப்பற்றி மீனா, முத்துவிடம் சொல்ல, அவர் ரோகினி பின்னால் மறைந்திருக்கும் ரகசியத்தை கண்டுபிடிக்கலாம் என்றார். பின் மனோஜ் கடையில் திருஷ்டி பொம்மை என்று விஜயாவின் போட்டோவை விற்றார்கள். அதை நம்பி மனோஜ் அந்த புகைப்படத்தை வாங்கி இருந்தார். நேற்று எபிசோடில் அந்த திருஷ்டி புகைப்படத்தை வீட்டிற்கு மனோஜ் கொண்டு வந்தார். அதை பார்த்து விஜயா பயங்கரமாக கோபப்பட்டு கத்தினார். ஆனால், மற்றவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். கோபத்தில் விஜயா, இதெல்லாம் மீனா செய்த வேலை தான் என்று வழக்கம் போல அவரே திட்டி இருந்தார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

உடனே சுருதி, நான் தான் இந்த போட்டோவை சோசியல் மீடியாவில் போட்டேன். அதை யாரோ இப்படி செய்திருக்கிறார்கள் என்று சொல்லியுமே விஜயா, மீனாவை தான் திட்டி இருந்தார். அதன் பின் மீனாவை காதலிக்கும் முருகன், முத்துவிடம் ஐடியா கேட்க. அவர், மீனாவின் வீட்டிற்கு நேரடியாக சென்று பெண் கேட்க சொன்னார். பின் ஷோரூமில் வேலை செய்பவர், விஜயாவின் புகைப்படத்துக்கு மாலை போட்டு பூஜை செய்தார். மனோஜ், அதை திட்டி எடுத்து வைத்தார். அந்த சமயம் பார்த்து மனோஜின் ஓனர் ஃபோன் செய்து, நல்ல பிராஃபிட் கிடைத்திருக்கிறது என்று சொன்னவுடன் ரொம்ப சந்தோஷப்பட்டார்.

நேற்று எபிசோட்:

அப்போது வந்த மனோஜின் நண்பர், புது பங்களா விலைக்கு வருகிறது. வாங்கி போட்டு என்று சொல்ல மனோஜும் சரி என்றார். இந்த நிலையில் இன்றைய எபிசோடில், மீனாவை காதலிக்கும் முருகன், நேரடியாகவே முத்து வீட்டுக்கு சென்று அண்ணாமலை இடம் பெண் கேட்கிறார். இதனால் எல்லோருமே அதிர்ச்சியாகி இருக்கிறார்கள். அப்போது வந்த முத்து, இது எங்கள் வீடு. யாரை பார்க்க வந்தாய் என்று சொன்னவுடன், நான் இந்த பெண்ணை தான் காதலிக்கிறேன் என்று மீனாவை காண்பிக்கிறார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இதை கேட்டவுடன் எல்லோருமே அதிர்ச்சி ஆகிறார்கள். உடனே மீனா, இவர்தான் என்னை பாலோ செய்கிறார் என்று முத்துவிடம் சொல்கிறார். அதற்கு முருகன், எங்க அண்ணன் சொன்ன ஐடியா தான் பாலோ செய்தேன் என்று சொன்னவுடன் மீனாவிற்கு கோபம் அதிகமாகிறது. உடனே அண்ணாமலை, இதற்கு நாங்கள் முடிவெடுக்க வேண்டியதில்லை. உங்கள் அண்ணா முடிவு தான் என்கிறார். கடைசியில் முத்து, அவளுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. அவள் என் பொண்டாட்டிடா என்று சொன்னவுடன் முருகன் அதிர்ச்சியானார்.

சீரியல் ட்ராக்:

உடனே அவர், முத்து காலில் விழுந்து மன்னித்துவிடு அண்ணா. எனக்கு தெரியாது என்று எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டார். கோபத்தில் மீனா, முத்துவிடம் சண்டை போடுகிறார். பின் கடையில் பிராஃபிட் வந்ததை வீட்டில் எல்லோருக்கும் ஸ்வீட் கொடுத்து மனோஜ் சொல்ல, விஜயா ரொம்ப சந்தோஷப்பட்டு பெருமையாக பேசுகிறார். உடனே முத்து கிண்டல் அடிக்க, ரோகினி நக்கலாக பதிலளிக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement