ஸ்ருதி- ரவி இடையே நடந்த மோதல், மீனாவிற்கு தெரிய வந்த உண்மை- விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

0
172
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனாவிற்கு புது ஆர்டர் கிடைத்ததால் சந்தோஷத்தில் எல்லோரும் பிரியாணி சமைத்து சாப்பிட்டார்கள். ஆனால், விரதம் என்பதால் மனோஜ்-விஜயா சாப்பிடவில்லை. இருவரும் பிரியாணி வாசனை தாங்க முடியாமல் புலம்பி கொண்டு இருந்தார். இன்னொரு பக்கம் ரோகினி தன்னுடைய தோழி வீட்டிற்கு போனார். அப்போது வந்த மலேசியா மாமா, மீனா என்னுடைய கடைக்கு தான் கறி வாங்க வந்திருந்தார் என்று சொன்னவுடன் ரோகினி அதிர்ச்சி ஆனார்.

-விளம்பரம்-

அதற்கு அவர், மீனா என்னை பார்க்க வில்லை. ஒவ்வொரு நாளும் நான் தப்பிக்க முடியாது. ஒருவேளை நான் மாட்டிக்கொண்டால் உங்கள் பெயரையும் சொல்லிடுவேன். அதனால் உண்மையை நீங்களே சொல்லிவிடுங்கள் என்று எச்சரித்து விட்டு போனார். இதை கேட்டு ரோகினி ரொம்பவே பயந்து விட்டார். நேற்று எபிசோட்டில் கோவிலில் விஜயா- மனோஜ் இருவரும் பரிகாரம் செய்ய போனார்கள். அப்போது மனோஜ் வேப்பிலை ஆடையை அணிந்து கொண்டு காமெடி செய்து கொண்டிருந்தார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

இன்னொரு பக்கம் விஜயா மாலையெல்லாம் போட்டு அம்மனுக்கு தீ சட்டி எடுத்தார். மனோஜ் சூடு தாங்க முடியாமல் வேகமாக கோயிலை சுத்தினார். ஒருவழியாக இருவருமே தீ சட்டி எடுத்து கோயிலை சுத்தி இருந்தார்கள். அந்த சமயம் கோயிலுக்கு வந்த முத்து-மீனா இதை பார்த்து மொபைலில் வீடியோவாக எடுத்து தன்னுடைய அப்பாவிடம் காண்பித்தார்கள். அப்போது அங்கு எல்லோரும் வந்ததால் முத்து, குறும்படமாக வீடியோவை போட்டு காண்பித்தார். இதனால் மொத்த குடும்பமே விழுந்து விழுந்து சிரித்தது.

நேற்று எபிசோட்:

அண்ணாமலை, யாரோ எதாவது விளையாட்டுத்தனமாக செய்ததை கூட இப்படியா நம்புவது என்றார். ஆனால், அதை மனோஜ் கேட்கவில்லை. என் வளர்ச்சியின் பொறாமையால் செய்தது என்று சமாளிதார். அந்த சமயம் பார்த்து ஷோரூமில் வேலை செய்யும் நபர், கடை சாவியை கேட்டார். அப்போது அவர், கடையில் முட்டை வைத்தது யார் என்று தெரிந்தது. பக்கத்து கடைக்காரர் தான் முட்டை வாங்கிக் கொண்டு வந்தார். மழையில் ஒதுங்கியதால் நம் கடையில் வைத்து விட்டு சென்று விட்டார் என்று சொன்னவுடன் மொத்த குடும்பமே மனோஜை பார்த்து முறைத்தது.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் உண்மை தெரிந்த உடன் மொத்த குடும்பமுமே மனோஜை பார்த்து சிரித்தது. விஜயா- ரோகினி இருவரும் மனோஜ் மீது பயங்கரமாக கோபப்பட்டார்கள். இன்னொரு பக்கம் மீனா, பூ வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார். அப்போது அவரை காதலிக்கும் நபர் ஃபாலோ செய்து வருகிறார். பின் அவர், நான் உங்களிடம் பெயர் கேட்க மாட்டேன். இனிமேல் உங்களுடைய பெயர் அன்பு என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். உடனே மீனா, முத்துவிடம் போன் செய்து நடந்ததை சொன்னார். இன்னொரு பக்கம் ஸ்ருதி, தனக்கு நெருக்கமானவரின் பிறந்த நாள் பார்ட்டிக்கு செல்ல ரவியை அழைக்கிறார். அவரும் முதலில் ஒத்துக்கொண்டார்.

சீரியல் ட்ராக்:

அந்த சமயம் பார்த்து ரவியின் பாஸ் போன் செய்து வேலை இருக்கிறது என்று சொன்னதால் ரவி, பார்ட்டிக்கு வர முடியாது என்று கிளம்பி விடுகிறார். இதனால் சுருதிக்கு பயங்கர கோபம் வருகிறது. இருந்தாலுமே பார்ட்டிக்கு சுருதி தனியாகவே போகிறார். அந்த சமயம் பார்த்து அந்த பார்ட்டிக்கு தான் ரவி, தன்னுடைய ஆர்டர் எடுத்துக்கொண்டு வந்தார். இதை பார்த்தவுடன் ஸ்ருதிக்கு பயங்கர கோபம் வந்து சண்டை போட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகி இருந்தது. இன்னொரு பக்கம் மீனா, பார்வதி வீட்டிற்கு பூ கொடுக்க போனார். அப்போது பார்வதி, ரோகினி தான் 2 லட்சம் பணத்தை ஏற்பாடு செய்து தந்தார் என்று சொல்லும் போது மீனாவிற்கு ஷாக் ஆகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement