ஸ்ருதியிடம் சண்டைக்கு போன ரோகினி, ஆக்ரோசத்தில் விஜயா செய்த வேலை – விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

0
242
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, மனோஜ் செய்த தில்லாலங்கடி வேலையை பற்றி சொல்ல, மொத்த பேருமே அதிர்ச்சியானார்கள். உடனே ரோகினி, ஆதாரம் இல்லாமல் எதுவும் பேச வேண்டாம் என்றவுடன் ஜீவா உள்ளே வந்தார். பின் அவர், வீட்டில் உள்ள எல்லோரிடம் மன்னிப்பு கேட்டு நடந்ததை சொல்ல, விஜயாவிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது. கோபத்தில் விஜயா, மனோஜின் சட்டையை பிடித்து கேட்க, ரோகினி சொல்லி தான் நான் செய்தேன் என்று மனோஜ் சொன்னார். இதனால் ஆத்திரத்தில் விஜயா, ரோகினியை பளார் என்று அடித்தார்.

-விளம்பரம்-

கடைசியில் வேறு வழி இல்லாமல் ரோகினி, உண்மையை ஒத்து கொண்டார். பின் அவர், அம்மாவாக அவனுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? அவன் ரொம்ப சோம்பேறி என்றெல்லாம் மனோஜை தரக்குறைவாக பேச, ஆத்திரம் தாங்க முடியாமல் விஜயா இன்னும் ரோகினியை அடித்தார். பின் ரவி – சுருதி, முத்து-மீனா நான்கு பேருமே ரோகினி- மனோஜ் செய்த வேலையை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் கேட்ட மனோஜ்க்கு ரொம்ப அவமானமாக இருந்தது. பின் இதை பற்றி அவர் ரோகினி இடம் கேட்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமானது.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

உடனே கோபத்தில் ரோகினி, மனோஜை திட்டி வீட்டை விட்டு கிளம்பி விட்டார். பின் இதைப் பற்றி மனோஜ், தன்னுடைய அம்மாவிடம் சொல்ல, அவர் இன்னும் கோபமாக ரோகினியை திட்டி இருந்தார். அதற்கு அண்ணாமலை, நீ ரோகினியை அடித்து இருக்கக்கூடாது. உன் மகன் செய்ததும் தவறு தான் என்று சொல்ல, ரொம்ப ஆக்ரோஷமாக விஜயா பேசினார். இன்னொரு பக்கம் தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்ற ரோகினி, நடந்த விஷயத்தை தன்னுடைய அம்மாவிடம் சொல்லி அழுதார்.

கடந்த வாரம் எபிசோட்:

அதற்கு அவர், ரோஹினிக்கு ஆறுதல் செய்து அறிவுரை செய்தார். இதனால் ரோகினி அங்கிருந்து கிளம்பி விட்டார். பின் வீட்டிற்கு வந்த ரோகினியை பார்த்தவுடன் தான் மனோஜ்க்கு நிம்மதி ஆனது. ஆனால், விஜயா மட்டும் கோபத்திலேயே இருந்தார். அதோடு அந்த கோபத்தை எல்லாம் மீனா மீது காண்பித்துக் கொண்டிருந்தார். அதோடு மனோஜ் – ரோகினி இருவரையும் பேச விடாமல் விஜயா தடுத்தார். பின் ரோகினி, மன்னிப்பு கேட்டு விஜயாவிடம் பேச வந்தார். ஆனால், விஜயா இன்னும் ஆக்ரோஷத்தில் ரோகினியை திட்டி
இருந்தார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோடில் ரோகினிக்கு போன் செய்த ஸ்ருதியின் அம்மா, வீட்டில் நடந்ததை பற்றி விசாரிக்கிறார். உடனே கோபத்தில் ரோகினி, எங்கள் வீட்டு விஷயத்தை பற்றி நீங்கள் பேச வேண்டாம் என்று போனை வைத்து விடுகிறார். பின் அவர், விஜயாவுக்கு போன் செய்து ரோகினி சொன்னதை சொல்லி விடுகிறார். இதனால் கொந்தளித்த விஜயா, ரோகினியை திட்ட, அவருக்கு இன்னும் கோபம் அதிகமாகிறது. உடனே ரோகினி, சுருதியிடம் சண்டை போடுகிறார். மீனா தடுத்துமே கேட்கவில்லை. கடைசியில் ரோகினி, என்னுடைய விஷயத்தில் யாரும் தலையிடாதீர்கள் என்று திட்டி விட்டு செல்கிறார்.

சீரியல் ட்ராக்:

பின் மனோஜ்க்கு ரோகினி போன் செய்கிறார். ஆனால், அவர் எடுக்கவே இல்லை. உடனே மனோஜ், தன்னுடைய அம்மாவிற்கு ஃபோன் செய்து நடந்ததை சொன்னார். அதற்கு விஜயா, போனை எடுத்துப் பேசு. ஆனால், வீட்டிற்கு வராதே என்று சொல்லி விடுகிறார். பின் போனில் மனோஜ், அம்மா எப்படி இருக்கிறார்? கடையில் வேலை இருக்கு. நான் வரமாட்டேன் என்று சொல்ல, ரோகினியால் எதுவுமே பேச முடியவில்லை. இன்னொரு பக்கம் முத்துவிடம் மீனா வீட்டில் நடப்பதை சொல்ல, என் அம்மா பண்ணுவது தவறு. கணவன்- மனைவியை பிரித்து பேச விடாமல் தடுப்பது ரொம்ப தப்பு என்றெல்லாம் பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

Advertisement