திருமண ஏற்பாடுகள் ஒருபுறம்... பழிவாங்கும் திட்டம் மறுபுறம்!
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் சத்யாவின் திருமணத்தை மையமாகக் கொண்டு விறுவிறுப்பான சம்பவங்கள் அரங்கேறுகின்றன. ஒருபுறம் திருமண வேலைகள் பரபரப்பாக நடைபெற, மறுபுறம் சிந்தாமணியை பழிவாங்க விஜயா தீட்டும் திட்டம் கதையை மேலும் பரபரப்பாக்குகிறது.
சத்யாவின் திருமணத்திற்காக குடும்பத்தினர் அனைவரும் தீவிரமாக தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில், சிந்தாமணியை பழிவாங்க இதுவே சரியான சந்தர்ப்பம் என்று விஜயா முடிவு செய்கிறார். இதைக் கவனித்த பார்வதி காரணம் கேட்க, சிந்தாமணி தன்னை ஏமாற்றியதையும், அவரது மகளின் திருமணத்தை பார்த்து அவர் தவிக்க வேண்டும் என்பதையும் விஜயா வெளிப்படையாக கூறுகிறார்.

அண்ணாமலையின் கவலை... முத்துவின் நம்பிக்கை
இதற்கிடையில், முத்து, அண்ணாமலை உள்ளிட்டோர் திருமண ஏற்பாடுகளில் முழு கவனத்துடன் ஈடுபட்டுள்ளனர். அப்போது, சிந்தாமணியின் ஆட்கள் வீட்டை நோட்டமிட்டு சென்றதாக அண்ணாமலை கவலை தெரிவிக்கிறார். ஆனால், திருமண விஷயம் வெளியே யாருக்கும் தெரியாது என்பதால் எந்த பிரச்சனையும் வராது என்று முத்து அவருக்கு நம்பிக்கை அளிக்கிறார்.
சிந்தாமணியை அதிர்ச்சியடைய வைத்த விஜயா
திருமண ஏற்பாடுகளை வீடியோவாக பதிவு செய்த விஜயா, அதை நேரடியாக சிந்தாமணிக்கு அனுப்புகிறார். அதுமட்டுமல்லாமல், ரேகாவின் திருமணம் நடைபெற இருப்பதாக போனிலும் தெரிவிக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிந்தாமணி, உடனடியாக திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற முடிவுடன் காரில் புறப்படுகிறார்.

ரேகாவின் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்ய வைத்த விஜயா
பயணத்தின் போது மகள் ரேகாவை தொடர்புகொள்ள சிந்தாமணி பலமுறை முயற்சிக்கிறார். ஒரு கட்டத்தில் ரேகா போனை எடுக்க முயற்சிக்கும்போது, விஜயா அதை தடுத்து, "இப்போது போன் எடுத்தால் திருமணத்தை நிறுத்திவிடுவார். எந்த காரணத்திற்கும் போன் எடுக்காதே" என்று கூறி, மொபைலையே ஸ்விட்ச் ஆஃப் செய்ய வைக்கிறார்.
திருமணம் நடக்குமா? சிந்தாமணி தடுத்து நிறுத்துவாரா?
இதனால், சத்யா - ரேகா திருமணம் திட்டமிட்டபடி நடைபெறுமா? அல்லது கடைசி நேரத்தில் சிந்தாமணி வந்து திருமணத்தை தடுத்து நிறுத்துவாரா? என்ற எதிர்பார்ப்பில் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோடு ரசிகர்களை அடுத்த கட்ட திருப்பத்துக்காக காத்திருக்க வைத்துள்ளது.






