பிக் பாஸ விட இந்த சீரியல் பரபரப்பா போகுது – TRPயில் எகிறி சிறகடிக்க ஆசை சீரியலின் எபிசோட்.

0
202
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் டிஆர்பியில் முன்னிலையில் இருக்கிறது. அந்த வரிசையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. சீரியலில் கதாநாயகன் முத்து வீட்டில் அவருடைய தாய், அவருடைய முதல் மற்றும் இளைய மகனுக்கு மட்டும் தான் சப்போர்ட்செய்கிறார்.

-விளம்பரம்-

முத்து படிக்கவில்லை என்றும் அவன் ஓவராக பேசுகிறான் என்றும், தன்னுடைய தந்தைக்கு ஆதரவாக நிற்கிறான். இதனாலே சிறு வயதில் இருந்தே அவருடைய தாய்க்கு முத்து மீது வெறுப்பு கோபம் இருக்கிறது. தன்னுடைய தாயின் பாசத்திற்காக முத்து ஏங்குகிறார். இன்னொரு பக்கம் கதாநாயகி பூக்கடை வியாபாரம் செய்கிறார். ஒரு விபத்தில் அவருடைய தந்தை இறந்து விடுகிறார். பின் அண்ணாமலை பேச்சால் அவரை முத்து திருமணம் செய்து கொள்கிறார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியல்:

பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என்று ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால், அவர் பணக்கார குடும்பமே இல்லை. வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் சீரியலில் முத்துவின் தம்பி ரவி காதலித்த பணக்கார பெண் ஸ்ருதியை திருமணம் செய்து கொள்கிறார். ஏற்கனவே அந்த பணக்கார பெண்ணின் அப்பாவிற்கும் அண்ணாமலைக்கு இடையே பல பிரச்சினைகள் இருக்கிறது. ரவி-சுருதி திருமணத்தால் பல கலவரங்கள் வருகிறது. தற்போது சீரியலில் ரவி- ஸ்ருதி இருவரையும் மீனா வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறார்.

சீரியல் கதை:

முதலில் ரூம் பிரச்சினை வருகிறது. எப்படியோ அந்த பஞ்சாயத்து தீர்ந்து விடுகிறது. பின் வீட்டின் இரண்டு மருமகள்களும் பணக்கார பெண்கள் என்பதாலும், வேலைக்கு செல்வதாலும் மீனாவை அதிகமாக வேலை வாங்குகிறார் விஜயா. காலையில் முதல் இரவு தூங்கும் வரை வேலை வாங்கிக் கொண்டு இருக்கிறார். மீனாவும் எதுவும் பேச முடியாமல் மனதிற்குள் அழுது கொண்டு செய்து கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் மீனா செய்யும் வேலைக்கு சுருதி பணம் கொடுக்கிறார். இதை பார்த்து மீனா அழுது விடுகிறார். பின் அதை தன்னுடைய கணவன் முத்துவிடம் சொல்கிறார் மீனா.

-விளம்பரம்-

சீரியல் ப்ரோமோ:

முத்து எதுவும் பேசாமல் அடுத்த நாள் காலையில் மீனாவிற்கு பூக்கடை போட்டு தருகிறார். இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே அதிர்ச்சி அடைகிறார்கள். சொல்ல போனால், விஜயாவிற்கு கோபம் தாங்க முடியவில்லை. மீனா இனிமேல் நீ கடையே தான் பார்த்துக் கொள்ள வேண்டும். நீ கடை முதலாளி, வீட்டு வேலையெல்லாம் செய்ய தேவையில்லை என்று முத்து சொல்லி விடுகிறார். விஜயா என்ன செய்வது என்று புரியாமல் புலம்புகிறார். இந்த நிலையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில், மனோஜ் வீட்டில் வேலை பார்க்கிறேன் என்று பொய் சொல்லிக்கொண்டு பார்க்கில் சாப்பிட்டு, விளையாடிக் கொண்டு தூங்குவதை முத்து பார்த்து விடுகிறார்.

சீரியல் ரேட்டிங்க்:

அதை முத்து வீடியோ எடுத்து வீட்டில் போடுகிறார். இதை பார்த்த வீட்டில் உள்ள எல்லோருமே அதிர்ச்சியாகி நிற்கிறார்கள். அந்த சமயம் மனோஜ் வீட்டிற்கு வந்து நான், விஜய் கஸ்டமர்ராக வந்தார் என்றெல்லாம் கூறுகிறார். ரோகிணி எதுவும் பேச முடியாமல் அமைதியாக நிற்கிறார். இனி ரோகினி என்ன செய்யப் போகிறார்? மனோஜின் நிலைமை என்ன? ரோகிணியின் உண்மை முகம் தெரிய வருமா? போன்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் செல்கிறது. இந்த சீரியல் ஆரம்பித்த சில வாரங்களில் டிஆர்பி ரேட்டிங் 3.40 இருந்தது.தற்போது இந்த சீரியல் டேட்டிங் 8.27 ஆக உயர்ந்து இருக்கிறது.

Advertisement