விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடையில் மந்திரித்த முட்டை வைத்து இருந்ததால் மனோஜ் ரொம்ப பயந்து விட்டார். பின் மனோஜ், ரோகினி இருவரும் மந்திரம் தந்திரம் செய்பவரை சந்தித்து நடந்ததை சொன்னார்கள். அவர் பணத்தை பறிக்க இன்னும் பயமுறுத்தி பரிகாரம் செய்ய சொன்னார். பின் இதை பற்றி விஜயாவிடம் சொல்ல, அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின் உங்களுக்கும் தான் பிரச்சனை இருக்கு, நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து தான் பரிகாரம் பண்ணனும் என்றார் மனோஜ். ஆனால், விஜயா முடியாது என்று மறுத்தார்.
அப்போது வெளியே வரும்போது பேன் கீழே விழ, விஜயா பயந்து விட்டார். பின் வீட்டில் மோட்டர் வேலை செய்யாததால் தண்ணீர் இல்லை. இதனால் மொத்த குடும்பமே குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்தார்கள். அப்போது பிளம்பர், ஸ்விட்ச்சை ஆன் பண்ணாதீர்கள் என்றார். ஆனால், மனோஜ் இதை கவனிக்காமல் ஸ்விட்ச்சை போட்டு விட்டார். அந்த சமயம் பார்த்து விஜயா ஸ்விட்ச்சில் கை வைத்ததால் ஷாக் அடித்தது. ஒவ்வொருவருமே விஜயாவை தொடத்தொட எல்லோருக்குமே ஷாக் அடித்தது. இதை பார்த்து மீனா ஷாக்கில் நின்று விட்டார்.
சிறகடிக்க ஆசை:
உடனே மீனா பூரிக்கட்டை வைத்து அடிக்க, எல்லோருமே கீழே விழுந்தார்கள். ஒருவழியாக யாருக்கும் ஒன்னும் ஆகவில்லை. இருந்தாலும், மீனாவை தான் விஜயா திட்டி இருந்தார். பின் மண்டபத்தில் டெக்ரேசன் செய்யும் புதிய ஆர்டர் கிடைத்தவுடன் வீட்டில் எல்லோரிடமும் மீனா சொல்லி சந்தோஷப்பட்டார். ஆனால், வழக்கம் போல் விஜயா கிண்டல் அடிக்க, அண்ணாமலை திட்டி இருந்தார். இந்த சந்தோஷத்தில் எல்லோருக்குமே பிரியாணி சமைப்பதற்காக தன்னுடைய தோழியிடம் கறி வாங்க சென்று இருந்தார் மீனா.
நேற்று எபிசோட்:
அங்கு மலேசியா மாமா தான் கறி வெட்டி இருந்தார். மீனாவை பார்த்தவுடன் அவர் முகத்தில் துணியை போட்டு மறைத்துக் கொண்டார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முகத்தை மூடிக்கொண்டு மலேசியா மாமா கறியை வெட்டி கொடுக்கிறார். ஆனால், மீனாவிற்கு அவர் யார் என்பது தெரியவில்லை. இன்னொரு பக்கம் வீட்டில் விரதம் என்பதால் மனோஜ் – விஜயா எதுவும் சாப்பிடாமல் அமைதியாக இருக்கிறார்கள். உடனே விஜயா, பிரியாணி வீட்டில் சமைக்கக்கூடாது என்று திட்டி விடுகிறார். இதனால் வெளியே வைத்து எல்லோருமே சமைக்கிறார்கள்.
இன்றைய எபிசோட்:
சாப்பாடு வாசனையை மனோஜால் தாங்க முடியவில்லை. விரதத்தை மாற்றி வைத்துக் கொள்ளலாமா என்றெல்லாம் விஜயா யோசிக்கிறார். ஆனால், மனோஜ் முடியாது என்று தடுக்கிறார். ஒரு வழியாக பிரியாணியை சூப்பராக சமைத்து சாப்பிடுகிறார்கள். மனோஜ்-விஜயா மட்டும் புலம்பி கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் ரோகினி தன்னுடைய தோழி வீட்டிற்கு போனார். அப்போது வந்த மலேசியா மாமா, மீனா என்னுடைய கடைக்கு தான் கறி வாங்க வந்திருந்தார் என்று சொன்னவுடன் ரோகினி அதிர்ச்சி ஆகிறார்.
சீரியல் ட்ராக்:
உடனே அவர், மீனா என்னை பார்க்க வில்லை. ஆனால், ஒவ்வொரு நாளும் நான் தப்பிக்க முடியாது. ஒருவேளை நான் மாட்டிக்கொண்டால் உங்கள் பேரையும் சொல்லிவிடுவேன். உண்மையை நீங்களே சொல்லிவிடுங்கள் என்று எச்சரித்து விட்டு போகிறார். இதனால் ரோகினி ரொம்பவே பயந்து விடுகிறார். இன்னொரு பக்கம் முத்து- மீனா இருவரும் காரில் சென்று கொண்டிருக்கின்றார்கள். அப்போது மீனா செய்யும் புது பிஸினஸுக்காக விசிட்டிங் கார்டை ரெடி பண்ணி கொடுக்கிறார் முத்து. இதை பார்த்து மீனா ரொம்ப சந்தோஷப்பட்டு அழுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.