கோபத்தின் உச்சத்தில் புலம்பும் விஜயா, வேதனையில் மனோஜ் செய்த வேலை – சிறகடிக்க ஆசை

0
120
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, இவர் மலேசியா மாமாவே கிடையாது, சென்னை மணி. எல்லாம் பார்லர் அம்மா பண்ண வேலை. எல்லாமே பித்தலாட்டம். மலேசியா, ஜெயில், அப்பா இறந்தது என்று சொன்னது எல்லாமே பொய் என்று சொன்னவுடன் மொத்த பெருமே ஷாக் ஆகி இருந்தார்கள். பின் மணி, என்னை எல்லோரும் மன்னித்து விடுங்கள். ரோகிணி வாழ்க்கையில் பிரச்சனை இருக்கிறது. அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று அவருடைய தோழி வித்தியா கேட்டுக்கொண்டார்.

-விளம்பரம்-

அதனால் தான் நான் நடித்தேன். உங்களை எல்லாம் ஏமாற்றனும் என்று இல்லை என்று சொல்லி, ரோகினி இடம் உன் வீட்டிற்கு உண்மையாக இரு. பொய் என்றும் மறைக்க முடியாது என்று சொன்னார். விஜயா கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார். ஆத்திரம் தாங்க முடியாமல் அண்ணாமலை, ரோகினியை திட்டி விட்டார். அதற்குப்பின் விஜயாவும், ரோகினியை அடித்து விட்டு எவ்வளவு பொய். உன்னால் நான் அசிங்கப்பட்டு நிற்கிறேன். நீ பொய்யின் உருவமாக இருக்கிறாய் என்று மோசமாக திட்டி இருந்தார். மனோஜால் எதுவுமே பேச முடியவில்லை.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் ரோகினி எவ்வளவோ எடுத்துச் சொல்லி புரிய வைக்கப் பார்த்தார். ஆனால், விஜயா கேட்கவே இல்லை. மனோஜிடமும் ரோகினி கெஞ்சி இருந்தார். ஆனால், அவர் கண்டு கொள்ளவே இல்லை. தன்னுடைய அம்மா சொல்வதை தான் கேட்டுக் கொண்டிருந்தார். கடைசியில் விஜயா, ரோகினியின் கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்டு இந்த வீட்டின் பக்கம் வரவே கூடாது என்று திட்டி விட்டார். அண்ணாமலை, மீனா தடுத்துமே விஜயா கேட்கவில்லை. அழுது கொண்டே வித்யாவின் வீட்டிற்கு சென்ற ரோகினி, நடந்ததை சொன்னார்.

நேற்று எபிசோட்:

வித்யா, உண்மை தெரிந்தால் இதுதான் நடக்கும் என்று உனக்கே தெரியும். உனக்கு குழந்தை இருக்கும் விஷயம் தெரிந்தால் என்ன நடக்குமோ? என்று இன்னும் பயமுறுத்தி இருந்தார். உடனே ரோகினி, எது நடந்தாலும் எப்படி சமாளிக்கணும் என்று எனக்கு தெரியும், நான் பார்த்துக்கொள்கிறேன் என்று தைரியத்துடன் இருந்தார். இன்னொரு பக்கம் வீட்டில் மனோஜ் கவலையில் இருந்தார். முத்து, அண்ணாமலை இருவருமே ரோகினியை வீட்டிற்கு அழைத்து வருவதை பற்றி பேசி இருந்தார்கள். ஆனால், மனோஜ் மறுத்தார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அண்ணாமலை, ரோகினியை வீட்டிற்கு அழைத்து வரச் சொல்லி மனோஜிடம் கேட்கிறார். ஆனால், மனோஜ் முடியாது என்று மறுத்து விடுகிறார். விஜயாவிடமும் அண்ணாமலை எடுத்து சொல்லி புரிய வைக்கிறார். ஆனால், அவரும் கேட்கவில்லை. பின் கோபத்தில் விஜயா, பார்வதி வீட்டுக்கு சென்று விடுகிறார். அங்கு விஜயா, உன்னால் தான் எனக்கு இந்த நிலைமை? நீ சொன்னதால் தான் நான் ரோகினியை திருமணம் செய்தேன். அவள் மோசக்காரி, துரோகி என்றெல்லாம் ஆவேசமாக கத்துகிறார். உடனே பார்வதி, நீ பணத்திற்காக ஆசைப்பட்டு அவளை கொண்டு வந்தாய். அதற்கு நான் என்ன செய்வது? விசாரிக்க வேணாமா? என்று பார்வதி, விஜயா பக்கமே திருப்புகிறார்.

சீரியல் ட்ராக்:

இருந்தாலுமே விஜயாவிற்கு ஆத்திரம் அடங்கவே இல்லை. பின் முத்து-மீனா இருவருமே ஸ்ருதி, ரவியிடம் வீட்டில் நடந்ததை பற்றி சொல்ல, அவர்கள் ஷாக் ஆகிறார்கள். சுருதி, நாங்கள் உடனே கிளம்பி வீட்டிற்கு வருகிறோம் என்கிறார்கள். இன்னொரு பக்கம் சோகத்தில் மனோஜ், பாரில் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருக்கிறார். நிலை தெரியாத அளவிற்கு குடித்து தன் மனைவி செய்த துரோகத்தை நினைத்து புலம்பி கொண்டிருக்கிறார். அதன் பின் மீனாவிற்கு போன் செய்த பார்வதி, விஜயா பற்றி சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement