ரோகினியின் பார்லருக்கு வந்த ஜீவா, அடுத்து நடந்தது என்ன தெரியுமா? பரப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை சீரியல்.

0
113
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் கதை. தற்போது சென்றுகொண்டு இருக்கும் கதையின் படி சிறையில் இருக்கும் ரோகினியின் தந்தை வெளியில் வர நேர்த்திக்கடன் செய்ய வேண்டும் 48 நாள் தரையில பாய போட்டு படுக்கனும், ஒரு நேரம் சாப்பிட வேண்டும் விஜயா கூறுகிறார்.

-விளம்பரம்-

இதனால் கோவிலுக்கு அழைத்து சென்று அங்கே அவருக்கு காப்பு கட்டி அங்கப் பிரவேசம் செய்ய வைத்து நேர்த்தி கடனை துவங்கி வைத்தார் விஜயா. இது ஒருபுறம் இருக்க கனடாவில் இருந்து சென்னை வந்துள்ள ஜீவா முத்துவின் காரிலேயே பயணித்து கொண்டு இருக்கிறார். அப்போது முத்து ஜீவாவிடம் ஒரு பத்து நிமிஷம் தான் போற வழியில கோயிலுக்கு போயிட்டு வரவா என கேட்க, சென்னையில் உங்க கார்ல தான் நான் வரப்போகிறேன்.

- Advertisement -

அதனால நீங்க போயிட்டு வாங்க என ஜீவா  சொல்லுகிறார்.இதனை தொடர்ந்து ரோகிணி புடவை கட்டி அவருக்கு தலையில் தண்ணீர் ஊற்றி மாலை போட்டு பரிகாரம் செய்ய ஆரம்பிக்கின்றார்கள். இப்படி ஒரு நிலையில் ஜீவாவுடன் கோவிலுக்கு செல்கிறார் முத்து. அப்போது ஜீவா காரிலேயே இருக்கிறார். பின்னர் மனோஜ் போன் வர, கோவிலுக்கு வெளியில் வந்து போன் பேசிக்கொண்டு இருக்கிறார்.

அப்போது முத்துவின் காரில் அருகே வந்து மனோஜ் போன் பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது அவரை கண்ட ஜீவா, அதிர்ச்சியடைந்து தனது முகத்தை மூடிக்கொண்டு மறைகிறார். ஆனாலும் கடைசி வரை மனோஜ், ஜீவாவை பார்க்கவில்லை. இறுதியில் முத்து வந்ததும் காரை எடுக்க சொல்லி அங்கிருந்து கிளம்பிவிட்டார் ஜீவா. இதனை தொடர்ந்து மீண்டும் ரோகினியை பரிகாரம் என்ற பெயரில் டார்ச்சர் செய்கிறார் விஜயா.

-விளம்பரம்-

அதுவும் மற்றவர்கள் சாப்பிடும் உணவை உன்னக் கூடாது, மற்றவர்கள் சமைத்ததை சாப்பிட கூடாது என்று ரூல்ஸ் மேல் ரூல்ஸ் போட்டு விஜயாவை ஏற்றிவிட்டு வேடிக்கை பார்க்கிறார் முத்து. ரோகினியை மட்டுமல்லாமல் மாமனாருக்காக நீயும் பரிகாரம் செய் அப்போது தான் அவர் சீக்கிரம் வெளியில் வருவார் என்று ரோகினி சாப்பிடும் அதே உணவை கொடுப்பது கோலம் போட வைப்பது என்று மனோஜையும் வச்சி செய்து கொண்டு இருக்கிறார் முத்து.

இப்படி பரிகாரத்தால் நொந்து போய் இருக்கும் நிலையில் மனோஜின் மனைவி ரோகினியின் பார்லர் என்று தெரியாமல் ஜீவா சென்று இருக்கிறார். அவரை கண்ட ரோகினி உடனே மனோஜிற்கு போன் செய்கிறார். இதனை கேட்ட மனோஜ் ஒருகணம் அதிர்ச்சி அடைந்து உடனே பார்லருக்கு புறப்படுகிறார். அங்கே சென்று ஜீவாவின் பின்னால் சென்று நின்றது அவரை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார் ஜீவா.

Advertisement