விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ்- ரோகினி இருவருமே கோயிலுக்கு வந்தார்கள். அப்போது ரோகினி கால் தடுத்து நிறைகுடம் கீழே விழுந்து விட்டது. இதை அபசகுணம் என்று மீனா அம்மா சொன்னார். உடனே இதை மீனா சொல்லியும் கேட்காமல் ரோகினி கேட்காமல் பணத்தை அந்த போலி ஓனரிடம் கொடுத்தார். பின் மீனாவிற்கு வேறொரு புதிய ஆர்டர் கிடைத்தது. அந்த ஆர்டர் கொடுத்தவர்களை சந்தித்து பேசி இருந்தார் மீனா. அப்போது எந்த மண்டபத்தின் மேனேஜர், மீனாவுக்கு ஆர்டர் கொடுக்க ஒத்து கொள்ளவில்லை.
உடனே அங்கு வந்த சிந்தாமணி, நாங்கள் இருவரும் இந்த மண்டபத்தின் டெக்கரேஷனுக்கு தேவையான கொட்டேஷன் கொடுக்கிறோம். அதில் யாருடையது பிடித்திருக்கிறதோ அதை செய்யுங்கள் என்றார்.
மீனாவும், ஒத்துக்கொண்டு மும்முரமாக விலை, அளவுகள் எல்லாம் கேட்டு எழுதி கொண்டிருந்தார். பின் மீனா கொடுத்ததை விட பாதி விலை தான் சிந்தாமணி கொடுத்தார். இதனால் ஆர்டரை சிந்தாமணிக்கு கொடுத்து விட்டார்கள். கவலையில் மீனா அங்கிருந்து வந்து விட்டார். இன்னொரு பக்கம் புது பங்களாவை பார்க்க போவதற்காக விஜயா அலப்பறை செய்து இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் எல்லோரும் மனோஜின் புது பங்களா வீட்டிற்கு போனார்கள். வீட்டிற்குள் நுழைந்த உடனே விஜயா சந்தோஷத்தில் துள்ளி குதித்தார். அப்போது அந்த வீட்டினுடைய போலி ஓனர்கள், மனோஜிடம் மீதி பணத்தை வாங்கிக் கொண்டு அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆனார்கள். அந்த சமயம் முத்துவின் கார் உள்ளே வந்தவுடன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆனால், ஏதேதோ சொல்லி அந்த போலி ஓனர் தப்பித்து விட்டார். அப்போது மனோஜ், இவர்தான் இந்த பங்களாவின் ஓனர் என்று சொன்னவுடன் முத்துவிற்கு சந்தேகம் வந்தது.
நேற்று எபிசோட்:
அப்போது அவர், இவ்வளவு பெரிய பங்களாவுக்கு ஓனராக இருந்து ஒரு வாடகை காரில் வருவானா? என்று நக்கலாக கேட்க, ஏதோ ஒன்று சொல்லி சமாளித்தார் விஜயா. இருந்தாலுமே முத்துவிற்கு அந்த ஓனர் மீதும், பங்களா மீதும் நிறைய சந்தேகம் எழுந்தது. பின் எல்லோருமே பங்களாவை சுத்திப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வழக்கம் போல் விஜயா, மனோஜை உயர்வாக பேச, முத்து கிண்டல் அடிக்க, ஸ்ருதியும் பதிலடி கொடுத்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில் வீட்டிற்கு பெயர் வைக்க நியூமராலஜிஸ்ட்டை வரவைக்கிறார்கள். இதை பார்த்து முத்து, ரவி கிண்டல் செய்தார்கள். பின் அந்த நபர் விஜயாவிற்கு ஐஸ் வைத்துவிட்டு எல்லோருடைய பெயரைக் கேட்டு விட்டு, ரோஜா இல்லம் என்று சொல்கிறார். அதற்கு முத்து, மீனா உனக்கேற்ற பெயர்தான் என்று சொன்னவுடன் மனோஜ்- விஜயாவும் வேணாம் என்கிறார்கள். அதற்கு பின் மனோஜ்-ம,ரோகினி-ரோ,விஜயா-யா எழுத்து எடுத்து பெயர் வையுங்கள். ‘ரோமயா’ அருமையாக இருக்கும் என்று சொன்னவுடன் அண்ணாமலை, முத்து சிரிக்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
சந்தோஷத்தில் விஜயா, ரோமயா என்று கத்துகிறார். அதே பெயரை வீட்டிற்கு வைக்கலாம் என்று முடிவு செய்கிறார்கள். அதற்கு பின் பார்வதி அங்கு வருகிறார். அவர் வீட்டை பார்த்து விட்டு புகழ்ந்து பேசி இருந்தார். பின் வீட்டில் பேய் இருக்கிறதா என்று சோதனை செய்ய வேறொரு பெண் மந்திரவாதி ஒருவரை வர வைக்கிறார்கள். இதெல்லாம் பார்த்து முத்து கிண்டல் செய்தார். அந்தப் பெண் மந்திரவாதி வீட்டிற்குள் வருகிறார். அவருடைய கெட்டப் எல்லாம் பார்த்து விஜயா பயந்து விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.