விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ஆர்டரின் மூலம் தனக்கு கிடைத்த லாபத்தை நினைத்து மீனா சந்தோஷப்பட்டார். அப்போது அந்த மண்டபத்தின் மேனேஜர், இங்கு சிந்தாமணி என்பவருக்கு தான் எப்போதுமே ஆர்டர் கிடைக்கும் என்று பயங்கமராக பில்டப் விட்டார். அந்த சமயம் பார்த்து மண்டபத்திற்கு வந்த சிந்தாமணி, ஆர்டர் கொடுக்காததால் மேனேஜரிடம் சண்டை வாங்கி இருந்தார்.
இன்னொரு பக்கம் மீனா, உங்களை விட நான் தான் அதிகமாக சம்பாதிக்கிறேன் என்று சொன்னவுடன் முத்துவின் முகமே மாறி இருந்தது.
நேற்று எபிசோட்டில் மீனா, காலையில் எழும்போது இருந்தே முத்து காணவில்லை. அவர் தன்னிடம் சொல்லாமல் சென்றது நினைத்து கவலைப்பட்டார். இதை பற்றி மீனா, அண்ணாமலை இடம் கேட்க, அவருமே நான் முத்துவை பார்க்கவில்லை என்றார். அதற்குப்பின் மீனா, முத்து வேலை செய்யும் இடத்திற்கு சென்று விசாரித்தார். இன்னொரு பக்கம் பார்வதி வீட்டிற்கு சென்ற விஜயா, மனோஜ் வாங்கும் புது பங்களா பற்றி பேசி சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் மீனா, தன்னுடைய தம்பி சத்யாவிற்கு ஃபோன் செய்து முத்துவை பற்றி சொல்ல, இருவருமே முத்து போகும் இடங்களுக்கு எல்லாம் சென்று விசாரித்தார்கள்.
சிறகடிக்க ஆசை:
சத்யா- மீனா இருவருமே எல்லா இடத்திலும் முத்துவை தேடி பார்த்தும் கிடைக்கவே இல்லை. இதனால் ரொம்பவே மனமுடைந்து மீனா வருத்தப்பட்டார். பின் வீட்டிற்கு வந்த மீனாவிடம் அண்ணாமலை விசாரிக்க, அவர் எங்கேயுமே இல்லை என்று சொன்னார். அதன் பின் வீட்டு வேலையெல்லாம் முடித்துவிட்டு முத்துவிற்காக மீனா காத்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் வந்த முத்துவை பார்த்து அண்ணாமலை திட்டி இருந்தார். பின் முத்து-மீனா இருவரும் பேசி கொண்டு இருந்தார்கள்.
நேற்று எபிசோட்:
அப்போது மீனா, ஏன் சொல்லாமல் போனீர்கள்? என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். உடனே முத்து, உன்னை விட அதிகமாக சம்பாதிக்க வேண்டும். அதற்காகத்தான் சவாரிப் போயிருந்தேன் என்று சொன்னவுடன் மீனா ரொம்பவே வருத்தப்பட்டார். பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. அதன் பின் மீனா கோபத்தில் சாப்பிடாமல் தூங்க போய் விட்டார். கடைசியில் முத்து, மீனாவிடம் மன்னிப்பு கேட்டு அவருக்கு சாப்பாடு ஊட்டி விட்டார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மனோஜ், வீட்டில் பயங்கரமாக பூஜை செய்து கொண்டிருக்கிறார்.
இன்றைய எபிசோட்:
இதை பார்த்து எல்லோருக்குமே ஆச்சரியமாக இருந்தது. மனோஜ், புதிதாக வாங்கும் பங்களாவிற்கு பணம் 3 கோடி ரூபாய்க்கு பேசி முடித்து இருக்கிறேன். முன்பணம் கொடுக்கப் போகிறேன் என்று சொன்னவுடன் ரவி, முத்துவிற்கு சந்தேகம் வருகிறது. எப்படி இவ்வளவு குறைந்த விலைக்கு தருகிறார்கள்? என்று கேட்கிறார்கள். அதற்கு ரோகினி, விஜயா இருவரும் ஏதேதோ காரணம் சொல்லி சமாளிக்கிறார்கள். அதற்குப்பின் மனோஜ், புது பங்களாவை சுற்றிப் பார்க்கலாம் என்று சொல்ல, சுருதி- ரவி இருவருமே முடியாது, வேலை இருக்கிறது என்கிறார்கள். அதற்கு பின் மீனா- முத்து சமாதானம் செய்து அவர்களையும் புது பங்களாவை பார்க்க சம்மதிக்க வைக்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் கோவிலில் மீனா, தன்னுடைய அம்மாவிற்கு பணம் கொடுத்துவிட்டு முத்து செய்த வேலையை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து மனோஜ்- ரோகினி இருவருமே கோயிலுக்கு வருகிறார்கள். அப்போது அவர் செல்லும் போது ரோகினி, கால் தடுத்து நிறைகுடம் கீழே விழுந்து விடுகிறது. இதை அபசகுணமாக மீனா அம்மா நினைக்கிறார். இதை மீனா, ரோகினிடம் சொல்ல , மனோஜ் வேண்டாம் என்றார். உடனே அந்த போலி ஓனர், ஒன்னுக்கு ரெண்டுக்காக ஏத்தி விட்டார். பின் ரோகினி, பணத்தை கொடுக்கலாம் என்று சொல்லி அந்த போலி ஓனரிடம் கொடுக்க சீரியல் முடிகிறது