தனக்குத்தானே ஆப்பு வைத்துக்கொண்ட ரோகினி, பிரச்சனையில் மீண்டும் சிக்கிய முத்து – சிறகடிக்க ஆசை

0
180
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, தன்னுடைய போனை யார் எடுத்திருப்பார் என்று தீவிரமாக யோசித்தார். மீனாவும் தனக்கு தோன்றிய விஷயத்தை சொன்னார். அப்போது முத்து, இது ரோகினி செய்த வேலையாக இருக்கும் என்று எனக்கு சந்தேகம் அதிகமானது. ரோகினி-வித்யா இருவரின் போட்டோவை தாத்தாவிடம் காண்பித்து யார் என்று கேட்டுக்கொள்ளலாம் என்று சொன்னவுடன் மீனாவும் சரி என்றார். பின் மறுநாள் காலையில் வித்யாவின் வீட்டுக்கு சென்ற மீனா, அவரிடம் ஏதேதோ பேசி அவரின் போட்டோவை எடுத்து விட்டார். பின் இதை முத்துவிடம் கொடுத்து விட்டார் மீனா.

-விளம்பரம்-

அவரும் தாத்தா உறவினர் ஒருவருக்கு போட்டோவை அனுப்பி வைத்தார். அதன் பின் முத்து, சத்யாவிற்கு ஃபோன் செய்து சிட்டியை பற்றி விசாரிக்க, பெரிதாக எந்த குழுவும் கிடைக்கவில்லை என்றார் சத்யா. சீக்கிரமாகவே ரோகினி சுயரூபம் வெளியே வந்துவிடும், கண்டுபிடிக்கிறேன் என்று முத்து தீவிரமாக இறங்குகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் ரோகினி, மனோஜை தேடி இருந்தார். அப்போது மீனா பேய் போல் வேஷம் போட்டு நிற்க, அதை பார்த்தவுடன் ரோகினி பயங்கரமாக ஷாக் ஆகி கத்தி இருந்தார். நேற்று எபிசோட்டில் பேய் ரூபத்தில் மீனா பயமுறுத்த, ரோகினி ரொம்பவே பயந்து அலறி இருந்தார். ஆனால், அதெல்லாம் ரோகினி கண்ட கனவு.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

இருந்தாலுமே, ரோகினி கனவில் இருந்து வெளிவராமல் கத்தி உருண்டு புரளுகிறார். இதையெல்லாம் பார்த்து மனோஜ்க்கு பயமாகி தன்னுடைய அம்மாவிற்கு ஃபோன் செய்து ரூமுக்கு வர வைத்தார். அப்போதுமே ரோகினி பேய் மாதிரி தான் கத்திக் கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்து விஜயாவிற்கு சந்தேகம் வந்தது. பின் அவர் ரோகினியை நார்மல் நிலைக்கு கொண்டு வந்து அவளை தூங்க வைத்தார். மனோஜ் பயந்து கொண்டே தான் தூங்கினார். மறுநாள் காலையில் ஸ்ருதி, ரவியிடம் வேண்டுமென்றே வாக்குவாதம் செய்து சண்டை வாங்கினார்.

நேற்று எபிசோட்:

ரவி, ஐயோ சாமி என்று வீட்டை விட்டு வெளியே ஓடிவிட்டார். இதை பார்த்த மீனா, முத்துவிடம் வம்பிழுக்க, அவருக்கு ஒண்ணுமே புரியவில்லை. பின் நடந்ததை மீனா, முத்துவிடம் சொன்னார். இன்னொரு பக்கம் வீட்டில் நடந்ததை பார்வதியிடம் விஜயா சொன்னார். அப்போது வந்த ரோகினியை பார்த்தவுடன் பார்வதி மிரளுகிறார். ரோகினி அப்பாவுடைய ஆத்மா தான் வந்திருக்கும் என்று சொல்லி சாமியாரை வீட்டிற்கு வர வைத்தார்கள். அவர், விஜயாவை பார்த்தவுடன் மொத்த கெட்ட ஆத்மா இவருடைய உடம்பில் தான் இருக்கிறது என்று சொன்னவுடன் எல்லோருமே ஷாக் ஆகி இருந்தார்கள்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜயா, ரோகினிக்குதான் பேய் பிடித்திருக்கிறது என்று சொன்னவுடன் சாமியார், பூஜைக்கு தேவையான எல்லா ஏற்பாட்டையும் செய்து ரோகினியை ஒரு வட்டத்திற்கு உட்கார வைக்கிறார். இவர் போலி சாமியார் என்று ரோகினி கண்டுபிடித்து விடுகிறார். ஆனால், வெளியில் உண்மை சொல்ல முடியாமல் தவிக்கிறார். பின் அந்த சாமியார் பேய் ஓட்டுகிறேன் என்று ரோகினியை குச்சியால் அடிக்கிறார். அவரும் வலி தாங்க முடியாமல் கத்திக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து இப்படியே மூன்று நாள் குச்சியால் அடிக்க வேண்டும் என்று மனோஜிடம் சொல்கிறார். அவருமே சரி என்கிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் முத்து, சவாரிக்கு ஒரு நபரை அழைத்துக் கொண்டு வருகிறார். அவருக்கு ரொம்ப அவசரம் என்பதால் ட்ராபிக் வீதியை மீறி முத்து வண்டியை ஒட்டி செல்கிறார். இதை பார்த்த அந்த ட்ராபிக் போலீஸ் முத்துவை பழிவாங்க வேண்டும் என்று முத்துவை துரத்தி சென்று சண்டை வாங்குகிறார். பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகி முத்துவின் வண்டி சாவியை பிடுங்கி விடுகிறார். இதைப் பற்றி முத்து, மீனாவிடம் சொல்லி புலம்புகிறார். மீனா, நீங்கள் செய்தது சரி என்றாலும் விதியை மீறியது தவறுதான் என்று சட்டம் பேசுகிறார். இதனால் முத்துவிற்கு கோபம் வந்து மீனாவிடம் சண்டை போட்டு சென்று விடுகிறார். அதற்குப்பின் மீனா, அந்த டிராபிக் போலீஸ் வீட்டிற்கு சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement