புது பங்களாவில் துள்ளி குதிக்கும் விஜயா, சந்தேகத்தில் முத்து, மனோஜ் நிலைமை? சிறகடிக்க ஆசை

0
201
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா, முத்து காணவில்லை என்று எல்லா இடத்திலும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. பின் இரவு வீட்டுக்கு வந்த முத்துவை பார்த்து மீனா சந்தோஷப்பட்டார். அப்போது முத்து, உன்னை விட அதிகமாக சம்பாதிக்க போனேன் என்று சொன்னதும் மீனா வருத்தப்பட்டார். பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. அதன் பின் முத்து, மன்னிப்பும் கேட்டும் விட்டார். மனோஜ், புதிதாக வாங்கும் பங்களாவை பற்றி வீட்டில் சொன்னார். எல்லோரும் அங்கு சென்று தங்க சம்மதித்தார்கள்.

-விளம்பரம்-

அதற்குப்பின் கோவிலில் மீனா, தன்னுடைய அம்மாவிற்கு பணம் கொடுத்துவிட்டு முத்து செய்ததை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து மனோஜ்- ரோகினி இருவருமே கோயிலுக்கு வந்தார்கள். அப்போது ரோகினி கால் தடுத்து நிறைகுடம் கீழே விழுந்து விட்டது. இதை அபசகுணம் என்று மீனா அம்மா சொன்னார். உடனே இதை மீனா, ரோகினிடம் சொல்ல , மனோஜ் வேண்டாம் என்றார். பின் அந்த போலி ஓனர், ஒன்னுக்கு ரெண்டுக்காக ஏத்தி விட்டார். மீனா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ரோகினி, பணத்தை அந்த போலி ஓனரிடம் கொடுத்தார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் மீனாவிற்கு வேறொரு புதிய ஆர்டர் கிடைத்தது. அந்த ஆர்டர் கொடுத்தவர்களை சந்தித்து பேச மீனா சென்று இருந்தார். அப்போது மண்டபத்தின் மேனேஜர், இங்கு எப்போதுமே வழக்கமாக செய்பவர்கள் தான் டெக்கரேஷன் செய்யணும் என்றார். உடனே அங்கு வந்த சிந்தாமணி, நாங்கள் இருவரும் இந்த மண்டபத்தின் டெக்கரேஷனுக்கு தேவையான கொட்டேஷன் கொடுக்கிறோம். அதில் யாருடையது பிடித்திருக்கிறதோ அதை செய்யுங்கள் என்றார்.

நேற்று எபிசோட்:

மீனாவும், ஒத்துக்கொண்டு மும்முரமாக விலை, அளவுகள் எல்லாம் கேட்டு எழுதி கொண்டிருந்தார். ஆனால், சிந்தாமணி பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். கடைசியில் மீனா கொடுத்ததை விட பாதி விலை தான் சிந்தாமணி கொடுத்தார். இதனால் அவர்களும் அந்த ஆர்டரை சிந்தாமணிக்கு கொடுத்து விட்டார்கள். கவலையில் மீனா அங்கிருந்து வந்து விட்டார். இன்னொரு பக்கம் புது பங்களாவை பார்க்க போவதற்காக விஜயா அலப்பறை செய்து இருந்தார். ரோகினியும் தன்னுடைய கணவருடன் சேர்ந்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் எல்லோரும் மனோஜின் புது பங்களா வீட்டிற்கு போகிறார்கள். ஆனால், முத்து- மீனா மட்டும் வரவில்லை. வீட்டிற்குள் நுழைந்த உடனே விஜயா சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார். அப்போது அந்த வீட்டினுடைய போலி ஓனர்கள், மனோஜிடம் மீதி பணத்தை வாங்கிக் கொண்டு அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆகிறார்கள். அந்த சமயம் முத்துவின் கார் உள்ளே வந்தவுடன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. ஆனால், ஏதேதோ சொல்லி அந்த போலி ஓனர் தப்பித்து விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

அப்போது மனோஜ், இவர்தான் இந்த பங்களாவின் ஓனர் என்று சொன்னவுடன் முத்துவிற்கு சந்தேகம் வருகிறது. உடனே அவர், இவ்வளவு பெரிய பங்களாக்கு ஓனராக இருந்து, ஒரு வாடகை காரில் வருவானா? என்று நக்கலாக கேட்கிறார். ஆனால், விஜயா ஏதோ ஒன்று சொல்லி சமாளித்தார். இருந்தாலுமே முத்துவிற்கு அந்த ஓனர் மீதும், பங்களா மீதும் நிறைய சந்தேகம் எழுகிறது. பின் எல்லோருமே பங்களாவை சுத்திப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வழக்கம் போல் விஜயா, மனோஜை உயர்வாக பேச, முத்து கிண்டல் அடிக்கிறார். அதற்கு ஸ்ருதி பதிலடி கொடுக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement