விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் தன் தந்தை இறந்து விட்டார் என்று ரோகினி ட்ராமா செய்தார். இதை மொத்த குடும்பமும் நம்பி விட்டது. ஆனால், முத்துவிற்கு சந்தேகம் தான் வந்தது.
ரோகினி, தன்னுடைய அப்பாவின் போட்டோவை எடுத்து வர சொல்லி இருந்தார். அவர் அம்மாவும் போட்டோவை கொடுத்து எதற்கு என்று கேட்க, வீட்டில் நடந்த விஷயத்தை எல்லாம் ரோகினி சொன்னார். இன்னொரு பக்கம் முத்து, மீனாவிற்கு தெரிந்த வயதான தாத்தா, பாட்டி இருக்கும் கடையை காலி செய்ய சொல்லி டிராபிக் போலீஸ் மிரட்டி இருந்தார்கள். அவர்கள் கெஞ்சி கதறி அழுதும் ஒரு போலீஸ் அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து அந்த வயதான பாட்டியை கீழே தள்ளி விட்டார்.

இதனால் அவருக்கு தலையில் அடிபட்டு விட்டது. உடனே கோபத்தில் முத்து, அந்த போலீசின் சட்டையை பிடித்து சண்டை போட்டார். பின் அங்கிருந்தவர்கள் அதை தடுத்து நிறுத்தி இருந்தார்கள். பின் முத்து அந்த அடிப்பட்ட பாட்டியை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று உதவி செய்தார். இன்னொரு பக்கம் வீட்டில் ரோகினி, தன்னுடைய அப்பாவின் புகைப்படத்தை காண்பித்து அழுதார். எல்லோருமே அவருடைய படத்தை பார்த்து எமோஷனலாக பேசி ரோகினிக்கு ஆறுதல் சொன்னார்கள். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்த போலீஸ், முத்துவை கைது செய்தது.
சிறகடிக்க ஆசை:
வழக்கம்போல் விஜயா நக்கலாக முத்துவை திட்ட, நடந்ததை எல்லாம் மீனா சொன்னார். ஆனாலும், விஜயா முத்துவை தான் திட்டி பேசிக் கொண்டிருந்தார். பின் போலீஸ் ஸ்டேஷனுக்கு முத்து-மீனா இருவருமே சென்றுவிட்டார்கள். அங்கு வந்த ரோகினி- மனோஜ் இருவரும் முத்துவை பார்த்து கிண்டல் செய்துவிட்டு போலீஸிடம் கதிர் வீடியோவை கேட்டார்கள். அவர்கள் முடியாது என்று அனுப்பி விட்டார்கள். அதற்குப் பின் வந்த இன்ஸ்பெக்டர், முத்துவிடம் நடந்ததை விசாரித்தார். பின் அவர், முத்து மீது தவறு இல்லை என்று அந்த டிராபிக் போலீசை திட்டி இருந்தார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் போலீஸ் ஸ்டேஷனில் மனோஜ், போலீஸிடம் ரகசியமாக ஒரு விஷயம் சொன்னார் . இதை கேட்டவுடன் எல்லா போலீஸ்களும் அவரை அறைந்தார்கள். பின் இதைப் பற்றி முத்து கேட்ட உடன் பயங்கரமாக கூப்பிட்டார். ஆனால், என்ன விஷயம் என்று மட்டும் சொல்லவில்லை. இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் தாத்தா, பாட்டியின் உறவினர் ஒருவர் வந்தார் அவர், மன்னிப்பு கேட்டு அவர்களை அழைத்து சென்றார். இதை அறிந்த முத்து சந்தோஷப்பட்டார். பின் அந்த தாத்தா, ஒரு கவரை முத்துவிடம் கொடுத்தார்.

சீரியல் ட்ராக்:
பின் வீட்டிற்கு வந்த முத்து, ஹாஸ்பிடல் நடந்ததை சொன்னவுடன் அண்ணாமலை சந்தோஷப்பட்டார். பின் அந்த தாத்தா தந்த கவரை முத்து பிரித்து பார்த்தார். அதில் அவருடைய போன் இருந்தது. அதை பார்த்தவுடன் ஷாக் ஆகி தன்னுடைய தந்தையிடம் முத்து சொன்னார். இதையெல்லாம் ரோகினி ஒழிந்து நின்று கேட்டு ஷாக் ஆகி இருந்தார். பின் இதை பற்றி தன்னுடைய தோழி வித்யாவிடம் ரோகினி கேட்க, அவர் ஆரம்பத்தில் சமாளித்தார். பின் உண்மையை சொன்னார். இருவருக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் நடந்தது. ஒரு கட்டத்தில் வித்யா, ரோகினியை எதிர்த்து பேசி திட்டி விட்டார்.
https://www.youtube.com/watch?v=5w62hRBpJY0
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மொபைல் கிடைத்துவிட்டது என்று முத்து-மீனா இருவருக்குமே சந்தேகமாக இருக்கிறார்கள். ஆனால், அந்த போன் கொடுத்த பெண்ணை பற்றி யோசிக்கிறார்கள். அப்போது முத்து, தாத்தா சொன்ன அந்த பெண் ரோகினி-வித்யாவாக இருக்குமா? என்று சந்தேகப்படுகிறார். அதற்குப்பின் மீனா தன்னிடம் இருக்கும் வித்தியா- ரோகினி போட்டோவை தாத்தா, பாட்டிக்கு அனுப்பி வைக்கிறார். அவர்களுமே வித்யா தான் என்று உண்மையை சொல்கிறார்கள். இதனால் கோபப்பட்ட முத்து, வித்யாவின் வீட்டிற்கு செல்கிறார். முத்துவை பார்த்து அதிர்ச்சி ஆகிறார் வித்யா.






