சிஐடி வேலையில் குதித்த முத்து- மீனா, ரோகினியின் சுயரூபம் வெளிவருமா? விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

0
189
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மூன்று ஜோடிகளுக்கு இடையே வாக்குவாதம் அதிகமாகி சண்டை வந்தது. இதனால் மூன்று ஜோடிகளும் பேசி கொள்ளவில்லை. பின் பொங்கல் கொண்டாட்டம் ஆரம்பித்தார்கள். முதல் போட்டியில் மீனா வெற்றி பெற்றார். கணவர்களுக்கான போட்டியில் முத்து வெற்றி பெற்றார். இதனால் விஜயாவிற்கு பயங்கர கோபம் வந்தது. அதற்குப்பின் ஜோடியாக நடக்கும் போட்டியில் இருவருமே கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவித்திருந்தார்கள். மூன்று ஜோடியுமே கோபத்தில் இருப்பதால் போட்டியில் சரியாக விளையாடவே இல்லை.

-விளம்பரம்-

இரண்டு போட்டிகளிலுமே தோற்று விட்டார்கள். கடைசி போட்டியில் வெற்றி பெறனும் என்று தங்களின் சண்டைகளை மறந்து பேசிக் கொண்டார்கள். இதனால் மூன்று ஜோடியுமே வெற்றியும் பெற்றார்கள். ஒருவழியாக அவர்களுக்குள் இருந்த பஞ்சாயத்து முடிந்து விட்டது. பின் பாட்டி, தொட்டிலை வீட்டிற்கு வரவைத்தார். உடனே ஸ்ருதி, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ளும் ஐடியா சொன்னவுடன் அண்ணாமலை குடும்பமே ஷாக் ஆனது. விஜயா பயங்கரமாக கோபப்பட்டார். ஆனால், ஸ்ருதி அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

மீனா அந்த நடிகரின் வீட்டின் விசேஷத்திற்கு டெக்கரேஷன் வேலை எல்லாம் செய்தார். இதை எப்படியாவது கெடுக்க வேண்டும் என்று சிந்தாமணி, மீனாவின் டெக்கரேஷனை அடித்து நொறுக்குவது போல கனவு கண்டு ரொம்ப சந்தோஷப்பட்டார். அதற்கான ஏற்பாடுகளும் நிஜத்திலும் செய்தார். ஆனால், அது நடக்கவில்லை. பின் அந்த நடிகர் மீனாவின் வேலையை பார்த்து பாராட்டி கூடுதலாக சம்பளம் தந்தார். ஆனால், சிந்தாமணி வேலை சரியாக செய்யவில்லை என்று அவளை திட்டி அவருடைய சம்பளத்தையும் குறைத்து விட்டார். இதனால் சிந்தாமணிக்கு மீனாவின் மேல் கோபம் அதிகமானது.

இன்றைய எபிசோட்:

இன்னொரு பக்கம் மனோஜ்- ரோகினி இருவரும் போலீஸ் மூலம் கதிர் வீடியோவை எடுக்க கோயிலுக்கு போனார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் போலீஸ் மூலம் மனோஜ்-ரோகினி இருவரும் கதிர் வீடியோவை வாங்கின விஷயத்தை மீனாவிடம் சொல்கிறார் சீதா. பின் கோவிலில் கதிர் வீடியோவை சீதா வாங்கி கொள்கிறார். பின் முத்து, மலேசியாவில் வந்தவர்கள் நல்லபடியாக ஊருக்கு திரும்பி விட்டார்கள். ரொம்ப சந்தோஷமாக இருக்கு. மலேசியா ஜெயிலில் அவருக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் மூலம் ரோகிணி அப்பாவை காப்பாற்றி விடலாம் என்று மனோஜிடம் சொல்கிறார்.

-விளம்பரம்-

முத்து-மீனா செய்த சிஐடி வேலை:

உடனே ரோகினி பதட்டமாகி, எங்கள் விஷயத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். தேவையில்லாமல் தலை இடாதீர்கள் என்று கோபப்பட்டு திட்டி விடுகிறார். இதனால் முத்து-மீனா இருவருக்கும் ரோகினியின் மீது சந்தேகம் இருக்கிறது. பின் மறுநாள் காலையில் பார்வதியிடம் ரோகினியை பற்றி இருவரும் விசாரிக்கிறார்கள். ஆனால், அவருக்கு பெரிதாக அவரைப் பற்றி எதுவுமே தெரியவில்லை. அதன் பின் ரோகினியின் தோழி வித்யா வீட்டிற்கு சென்று மீனா விசாரிக்கிறார். வித்யா, மீனாவின் கேள்விக்கு மாத்தி மாத்தி பதில் சொன்னதால் மீனாவிற்கு இன்னும் சந்தேகம் அதிகமானது.

சீரியல் ட்ராக்:

பின் இதைப் பற்றி முத்துவிடம் மீனா சொல்கிறார். அதன் பின் மீனா வேலைக்கு சென்று கொண்டிருக்கும்போது சிந்தாமணி ஆட்கள் அவருடைய பூ பெட்டியை எடுத்துக்கொண்டு சென்று விடுகிறார்கள். அவர்களை துரத்திக் கொண்டே மீனா, சிந்தாமணி வீட்டிற்கு போகிறார். அப்போது சிந்தாமணி, நீ என்னிடம் வேலை செய். உனக்கு தேவையானதை செய்கிறேன் என்று சொன்னவுடன் மீனா முடியாது என்று அவரிடம் சவாலிட்டு வருகிறார். அதன் பின் வீட்டிற்கு வந்த முத்து, நாம் எல்லோரும் மலேசியா செல்லலாம். எல்லா செலவையும் ரோகினி அப்பா பார்த்துக் கொள்வார் என்று சொன்னவுடன் விஜயா ரொம்ப சந்தோஷப்படுகிறார். முதலில் அண்ணாமலை மறுத்தாலும் எல்லாருடைய கட்டாயத்தினால் ஒத்துக்கொள்கிறார். ஆனால் ரோகினி உள்ளுக்குள் ரொம்பவே பயப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement