ஒரு பொய்ய மறைக்க ஒன்பது பொய் – பலித்த விஜயா,ரோகினியின் திட்டம். மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்

0
188
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் கதை. முத்து வீட்டில் அவருடைய தாய் எப்போதும் முதல் மற்றும் இளைய மகனுக்கு தான் சப்போர்ட் செய்கிறார். முத்துவை கண்டால் அவருக்கு பிடிக்காது. காரணம், முத்து தன் தந்தைக்கு ஆதரவாக நிற்பதாலும், உண்மையாக இருப்பதாலும் அவருக்கு பிடிக்கவில்லை. உண்மையில் முத்து தன்னுடைய தாயின் பாசத்திற்காக ஏங்குகிறார்.

-விளம்பரம்-

இன்னொரு பக்கம் கதாநாயகி மீனா பூக்கடை வியாபாரம் செய்கிறார். ஒரு விபத்தில் அவருடைய தந்தை இறந்து விடுகிறார். பின் அண்ணாமலை பேச்சால் அவரை முத்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார் விஜயா. ஆனால், அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். முதலில் இரு வீட்டார் சம்மதிக்கவில்லை என்றாலும் பணக்கார பெண் என்பதால் விஜயா ஏற்று கொண்டார். வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது.

- Advertisement -

தற்போதைய கதை :

இந்த வார எபிசோடில் பணப் பிரச்சனையில் சிக்கிய மனோஜ், பணம் வேண்டும் என்று தன்னுடைய பார்க் நண்பரிடம் கேட்கிறார். அவர் ஒரு சாமியாரிடம் கூட்டிட்டு கொண்டு அறிவுரை சொல்கிறார். இதையடுத்து மனோஜ் கோவிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது கோவிலுக்கு வந்த மீனா மனோஜை பார்த்து விடுகிறார். பின் முத்துவிற்கு ஃபோன் செய்து கோயிலுக்கு வர வைக்கிறார் மீனா. கோயிலுக்கு வந்த முத்து, மனோஜை திட்டி வீட்டிற்கு அழைத்து வருகிறார். மனோஜின் நிலையை பார்த்து அவருடைய அப்பா – அம்மா இருவருமே அதிர்ச்சியாகி நிற்கிறார்கள்.

பறிபோன கடை :

இப்படி ஒரு நிலையில் விஜயாவின் சதியால் மீனா நடத்தி வந்த தள்ளுவண்டி கடையை அதிகாரிகள் வந்து கொண்டு சென்றுவிட்டனர். மீனா எவ்வளவோ கெஞ்சியும் அவரது கடையை அதிகாரிகள் வேனில் ஏற்றி கொண்டு சென்றுவிட்டனர். இதனால் மனமுடைந்து போன மீனா, இனி வீட்டில் இருக்கும் வேலைகளை செய்துகொண்டு வீட்டிலேயே இருக்கிறேன் என்று கண்ணீருடன் புலம்புகிறார். இதனை கண்டு விஜயாவும் ரோகினியும் ஆனந்தம் கொள்கின்றனர்.

-விளம்பரம்-

முத்து கொடுத்த இன்ப அதிர்ச்சி :

கடை போனதால் மீனா கலங்கி நின்றுகொண்டு இருக்க, முத்து ஒரு புதிய பைக்கை வாங்கி வந்து மீனாவை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார். மேலும், இனி வண்டியிலேயே மீனா பூ விற்கலாம் என்று மீனாவை வண்டியில் அழைத்து செல்கிறார் முத்து. அதுவும் மீனாவிற்கு பிடித்த சாம்பல் நிற கலரில் வண்டியை வாங்கி வந்து மீனாவின் முன் வந்து நிற்கிறார் முத்து. இனி இதனால் மீண்டும் மீனா தன்னம்பிக்கையை பெறுகிறார்.

Advertisement