விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் பார்வதி வீட்டிற்கு போன முத்து உண்மையை கண்டுபிடித்தார். பின் இதை பற்றி முத்து, அண்ணாமலையிடம் சொன்னவுடன் அவர் அதிர்ச்சி அடைந்து விஜயாவை திட்டி மீனாவிடம் மன்னிப்பு கேட்க சொன்னார். ஆனால், விஜயா முடியாது என்றார். உடனே அண்ணாமலை, மொத்த பணத்தையும் நீதான் கொடுக்க வேண்டும் என்று சொன்னதற்கு விஜயா முடியாது என்று மறுத்தார். இதனால் அண்ணாமலை அந்த பணத்தை தான் தருவதாக வாக்குறுதி கொடுத்தார். பின் விஜயா, மனோஜ்- ரோகினி இடம் பணத்தை கேட்க, ரோகினி தருகிறேன் என்றார். சமாளித்தார்கள்.
பின் பார்வதி வீட்டிற்கு சென்ற ரோகினி, வீட்டில் நடந்ததை பற்றி சொல்லி இருந்தார். நேற்று எபிசோட்டில் ரோகினி, பணம் காணாமல் போனதால் மீனா மீது தான் திருட்டுபழி வந்தது. நான் என்னுடைய தாலியை அடமானம் வைத்து ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை ரெடி பண்ணி இருக்கிறேன். இந்த இரண்டு லட்சம் வீட்டிலேயே தான் இருக்கிறது என்று அத்தையிடம் சொல்லுங்கள். பாவம் மீனா கஷ்டப்பட வேண்டாம் என்று நல்லவர் போல பேசி இருந்தார். அதை பார்வதி நம்பி விட்டார். பின் வீட்டிற்கு வந்த ரோகினி பணத்தை மனோஜிடம் கொடுத்தார்.
சிறகடிக்க ஆசை:
அதை அவர் விஜயாவிடம் கொடுக்க, அவரும் அண்ணாமலையிடம் கொடுத்துவிட்டு, இனிமேல் யாரும் என் மீது குறை சொல்ல வேண்டாம் என்றார். அப்போது விஜயாவிற்கு போன் செய்த பார்வதி, பணம் வீட்டில் தான் இருக்கு என்று சொன்னார். இதை அறிந்த அண்ணாமலை, முத்து எல்லோருக்குமே கோபம் வந்தது. உடனே அண்ணாமலை, விஜயாவை திட்டிவிட்டு அறிவுரை சொன்னார். அதோடு மீனாவிற்கு அப்பா இல்லை. ஆனால், அந்த இடத்தில் இருந்து நான் எதுவாக இருந்தாலும் செய்வேன் என்று சொன்னவுடன் மீனா அவருடைய காலில் விழுந்து அழுதார்.
நேற்று எபிசோட்:
பின் எல்லோரும் கிளம்பி விட்டார்கள். கடைசியில் முத்து-மீனா இருவருமே கணக்கு போட்டு இருந்தார்கள். அப்போது அந்த மூன்று லட்சம் ரூபாயை மீனாவின் அம்மா வீட்டில் கொடுக்க சொன்னார் முத்து. முதலில் மீனா மறுத்தாலும் பின் வாங்கி கொண்டார். அதை தொடர்ந்து மீதி இருக்கும் பணத்தை வைத்து கார் டீவு, வீடு கட்டுவது பற்றி எல்லாம் பிளான் போட்டார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ரோகினி, தன்னுடைய அம்மா, மகனையும் சென்னைக்கு அழைத்து வந்து வாடகை வீட்டில் தங்க வைக்கிறார்.
இன்றைய எபிசோட்:
இருந்தாலும், யாராவது பார்த்து விடுவார்களா? என்ற பதட்டத்திலேயே ரோகினி இருக்கிறார். பின் புது வீட்டில் பால் காய்ச்சி சாமி கும்பிட்டார்கள். அதற்கு பின் ரோகினி, யாரிடம் பேசாதே, எங்கும் போகாதே, எங்கேயும் விளையாடதே , சீக்கிரமாகவே லைட் ஆப் பண்ணி தூங்கி விடுங்கள் என்று பல கண்டிஷன்களை போட்டார். இதனால் கடுப்பாக்கி அவருடைய அம்மா, இதற்கு எங்களை ஜெயிலில் போட்டிருக்கலாம் என்று சொல்கிறா.ர் அந்த சமயம் பார்த்து முத்து, போன் செய்ய, எங்களை பார்க்க வராதே. போன் பண்ணாதே என்று முகத்தில் அடித்தது போல் பேசி விடுகிறார் ரோகினி அம்மா.
சீரியல் ட்ராக்:
இதனால் முத்து ரொம்ப வருத்தப்பட்டார். அதற்குப்பின் கிரிஸை ஸ்கூல் சேர்த்த போகிறார்கள். அந்த பள்ளியில் அண்ணாமலை வேலை கேட்டு வருகிறார். ஆனால், ரோகினி -அண்ணாமலை இருவருமே சந்திக்கவில்லை. இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த முத்து, கிரிஷ் பாட்டி பேசியதை பற்றி சொல்லி புலம்புகிறார். அப்போது மீனா, அவர்கள் இப்படி பேசும் நபரே கிடையாது. கிரிஷை பற்றி ஏதோ ஒரு ரகசியத்தை மறைக்க பார்க்கிறார்கள் என்று சொல்கிறார். இதையெல்லாம் கேட்ட ரோகினி ஷாக் ஆகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.