பார்லர் விவகாரத்தில் வசமாக சிக்கிய ரோகினி, விஜயா எடுக்கும் முடிவு என்ன? பறபறக்கும் சிறகடிக்க ஆசை

0
284
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் கதை. முத்து வீட்டில் அவருடைய தாய் எப்போதும் முதல் மற்றும் இளைய மகனுக்கு தான் சப்போர்ட் செய்கிறார். காரணம், முத்து படிக்கவில்லை, அவன் ஓவராக பேசுகிறான், தன்னுடைய தந்தைக்கு ஆதரவாக நிற்கிறான் என்பதால் சிறு வயதில் இருந்தே அவருடைய தாய்க்கு முத்து மீது கோபம் இருக்கிறது. உண்மையில் முத்து தன்னுடைய தாயின் பாசத்திற்காக ஏங்குகிறார்.

-விளம்பரம்-

இன்னொரு பக்கம் கதாநாயகி மீனா பூக்கடை வியாபாரம் செய்கிறார். ஒரு விபத்தில் அவருடைய தந்தை இறந்து விடுகிறார். பின் அண்ணாமலை பேச்சால் அவரை முத்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால், அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். முதலில் இரு வீட்டார் சம்மதிக்கவில்லை என்றாலும் பணக்கார பெண் என்பதால் விஜயா ஒரு வழியாக ஏற்று கொண்டார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியல்:

வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. வீட்டின் இரண்டு மருமகள்களும் பணக்கார பெண்கள் என்பதாலும், வேலைக்கு செல்வதாலும் மீனாவை அதிகமாக வேலை வாங்குகிறார் விஜயா. இதை பார்த்து முத்து, மீனாவிற்கு பூக்கடை போட்டு தருகிறார். இதனால் விஜயாவுக்கு கோபம் தாங்க முடியவில்லை. மனோஜ் வேலை இல்லாமல் சுற்றி கொண்டு இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் மீனாவின் தம்பி சத்யா கல்லூரியில் படித்து வேலை செய்வதாக வீட்டில் பொய் சொல்லி சிட்டி உடன் தேவையில்லாத சவகாசம் வைத்துக்கொண்டு இருக்கிறார்.

சீரியல் கதை:

இது முத்துவிற்கு தெரிய வருகிறது. ஆனால், சத்யா திமிராக முத்துவிடம் பேசுகிறான். இதனால் சிட்டி- முத்து இடையே ப்ரச்சனை ஏற்படுகிறது. நண்பர்களுக்காக முத்து தன் காரை விற்று ஆட்டோ ஓட்டுகிறார். இந்த உண்மை வீட்டுக்கு தெரிகிறது. ஆனால், முத்து எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இந்த உண்மையை மீனா அறிந்து கொள்கிறார். பின் இந்த வாரம் எபிசோடில் முத்துவிற்கு பெரிய மாலை ஆர்டர் கிடைக்கிறது. இதை முத்து மீனாவிடம் சொல்கிறார். பின் வீட்டில் எல்லோருமே மாலையை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மீனாவுக்கு கிடைத்த ஆர்டர்:

வழக்கம்போல் விஜயா, ரோகினி, மனோஜ்க்கு இது பிடிக்கவில்லை. மூவரும் சேர்ந்து கொண்டு மற்றவர்களை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவழியாக வெற்றிகரமாக மீனா 500 மாலை ஆர்டரை செய்து கொடுக்கிறார். அதை முத்து தன்னுடைய நண்பர் ஒருவர் மூலம் வண்டியில் ஏற்றி ஆரம்பிக்கிறார். ஆனால், முத்துவை பழிவாங்க சிட்டி வண்டியை கடத்துகிறார். பல போராட்டங்களுக்குப் பிறகு முத்து வண்டியை கண்டுபிடித்து சரியான நேரத்தில் ஆர்டரை ஒப்படைக்கிறார். இதனால் முத்து-மீனா இருவருமே சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

சீரியல் ப்ரோமோ:

மேலும், மீனா தன்னுடைய கணவருக்கு எப்படியாவது கார் வாங்கி தர வேண்டும் என்று நினைக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் நாளை எபிசோடு காண ப்ரோமோவில், ரோகினி பார்லருக்கு மனோஜ் வருகிறார். தன்னுடைய அம்மாவின் பெயர் பார்லரில் இல்லை என்பதை மனோஜ் கேட்கிறார். பின் இந்த விவகாரம் விஜயாவிற்கு தெரிகிறது. அப்போது விஜயா, ரோகினியை தனியாக ரூமில் அழைத்து மிரட்டி சண்டை போடுகிறார். ரோகிணி என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக நிற்கிறார். Qஇனிவரும் நாட்களில் ரோகினியின் உண்மை சுயரூபம் தெரியுமா? விஜயா ரோகினியை ஏற்றுக் கொள்வாரா? மீனா கார் வாங்குவாரா? போன்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement