முத்து – மீனா வளர்ச்சியை எண்ணி பொறாமை பட்ட மனோஜ் – பணத்தை எடுத்து சென்ற ஜீவாவை கண்டுபிடிக்க ரோகினி கொடுத்த ஐடியா.

0
66
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் கதை. முத்து வீட்டில் அவருடைய தாய் எப்போதும் முதல் மற்றும் இளைய மகனுக்கு தான் சப்போர்ட் செய்கிறார். முத்துவை கண்டால் அவருக்கு பிடிக்காது. காரணம், முத்து தன் தந்தைக்கு ஆதரவாக நிற்பதாலும், உண்மையாக இருப்பதாலும் அவருக்கு பிடிக்கவில்லை. உண்மையில் முத்து தன்னுடைய தாயின் பாசத்திற்காக ஏங்குகிறார்.

-விளம்பரம்-

இன்னொரு பக்கம் கதாநாயகி மீனா பூக்கடை வியாபாரம் செய்கிறார்.இப்படி ஒரு நிலையில் விஜயாவின் சதியால் மீனா நடத்தி வந்த தள்ளுவண்டி கடையை அதிகாரிகள் வந்து கொண்டு சென்றுவிட்டனர். மீனா எவ்வளவோ கெஞ்சியும் அவரது கடையை அதிகாரிகள் வேனில் ஏற்றி கொண்டு சென்றுவிட்டனர். இதனால் மனமுடைந்து போன மீனா, இனி வீட்டில் இருக்கும் வேலைகளை செய்துகொண்டு வீட்டிலேயே இருக்கிறேன் என்று கண்ணீருடன் புலம்புகிறார்.

- Advertisement -

இதனை கண்டு விஜயாவும் ரோகினியும் ஆனந்தம் கொள்கின்றனர். இன்றைய எபிசோடில் ரோகினியும் விஜயாவும் மீனாவை அழைத்து டீ போட சொல்கிறார். இதனால் கிட்சனுக்குள் சென்று கண்ணீர்விட்டு அழுகிறார் மீனா. கடை போனதால் மீனா கலங்கி நின்றுகொண்டு இருக்க, முத்து ஒரு புதிய பைக்கை வாங்கி வந்து மீனாவை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார். மேலும், இனி வண்டியிலேயே மீனா பூ விற்கலாம் என்று மீனாவை வண்டியில் அழைத்து செல்கிறார் முத்து. அதுவும் மீனாவிற்கு பிடித்த சாம்பல் நிற கலரில் வண்டியை வாங்கி வந்து மீனாவின் முன் வந்து நிற்கிறார் முத்து. இனி இதனால் மீண்டும் மீனா தன்னம்பிக்கையை பெறுகிறார்.

முத்து, மீனாவிற்க்கு பைக் வாங்கி கொடுத்ததை பார்த்து விஜயா, மனோஜ், ரோகிணி ஆகிய அனைவரும் வயிற்றெரிச்ச்சள் படுகின்றனர். இதுவும் மனோஜ், ரோகிணியிடம் அவங்க ரெண்டு பேரும் என்னை விட படிக்காதவர்கள் அவங்களுக்கு எல்லாம் நடக்குது. எனக்கு மட்டும் நடக்க மாட்டுது என்று புலம்புகிறார். இதற்கு ரோகிணி, அவங்க ரெண்டு பேரும் வேலை செய்கிறார்கள் அதான் எல்லாம் நடக்குது என்று கூறுகிறார்.

-விளம்பரம்-

இதனால் கோபமடைந்த மனோஜ், அப்போ நான் வேலைக்கு போகவில்லை என்று குத்திக்காட்றியா என்று கோபம் கொள்கிறார். இதனால் மனோஜை, ரோகிணி சமாதானம் செய்கிறார். உடனே மனோஜ், உங்க அப்பா எப்போ ஜெயிலில் இருந்து வருவார் என்று கேட்கிறார். அதற்கு ‘என் அப்பாவை பற்றி கேக்காதே, அப்புறம் அதையே நினைச்சு நான் பீல் பண்ணுவேன்’ என்று சொல்கிறார். இதனால் மனோஜ் ‘ என்னால் எதுவும் செய்ய முடிவில்லை என்ற ஆதங்கத்தில் பேசிட்டேன். இனி கேட்கல’ என்று கூறுகிறார்.

பின்னர் ரோகினி, இதெற்கெல்லாம் ஒரே வழி நீ தொலைத்த 27 லட்சம் நமக்கு கிடைக்க வேண்டும் என்று கூறுகிறார். ஜீவாவை கண்டுபிடித்து எப்படியாவது அவள் கொண்டு சென்ற பணத்தை வாங்க வேண்டும் என்று கூறுகிறார். முதலில் அவள் கனடாவில் எங்கு இருக்கிறாள் என்று அவளை அனுப்பி வைத்த ஏஜென்சியிடம் சென்று விசாரிக்கலாம்’ என்று மனோஜிற்கு யோசனை கூறுகிறார். இனி வரும் நாட்களில் ஜீவாவை மனோஜ் கண்டுபிடிப்பாரா என்பதை பார்க்கலாம்

Advertisement