மீண்டும் சிட்டியிடம் வசமாக சிக்கிய ரோகினி, முத்து உண்மையை கண்டுபிடிப்பாரா? சிறகடிக்க ஆசை

0
187
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அண்ணாமலை, கதிர் விஷயம் பற்றி கேட்க, மீனா செய்யும் சிஐடி வேலை பற்றி முத்து சொன்னார். உடனே மனோஜ், பணம் கிடைத்தவுடன் என்னிடம் கொடு என்றவுடன் முத்து, மனோஜை திட்டி விட்டார். இதனால் விஜயா, நீ பணத்தை ரெடி பண்ணும் வரை இந்த வீட்டில் இவ்வளவுதான் நம்மளுக்கு மரியாதை. சீக்கிரம் ரெடி பண்ணு என்று ரோகினியை திட்டி இருந்தார். பின் ரோகினி சமைத்த சாப்பாட்டை வாயில் வைக்க முடியாமல் விஜயா-மனோஜ் எழுந்து சென்று விட்டார்கள். இதனால் ரோகினிக்கு பயங்கர கோபம் வந்தது. அப்போது மீனா, சிட்டியிடம் நீங்கள் ஏன் கடன் வாங்கி இருக்கிறீர்கள்? என்று சொன்னவுடன் ரோகினிக்கு முகமே மாறி வியர்த்து போய்விட்டது.

-விளம்பரம்-

இன்னொரு பக்கம் முத்து, சிட்டியிடம் ரோகினி பணம் வாங்கி இருக்கும் விஷயத்தை மனோஜிடம் கேட்டார். ஆனால், மனோஜ் அதை பற்றி பெரிதாக கண்டுகொள்ளாமல் திட்டி விட்டு போனார். பின் இதைப் பற்றி மனோஜ், ரோகினி இடம் கேட்க அவரால் எதுவுமே பதில் சொல்ல முடியவில்லை. நேற்று எபிசோட்டில் ரோகினி, நீ வேலையில்லாமல் இருந்தபோது வீட்டு செலவிற்கெல்லாம் பணம் கொடுக்கணும். அதனால்தான் நான் கடன் வாங்கி கொடுத்தேன் என்றார். உடனே மனோஜ், அவனிடம் வைத்துக் கொள்ளாதே, உனக்கு எவ்வளவு கடன் இருக்கிறது சொல் என்றார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

அதற்கு ரோகினி, எல்லாவற்றையும் நீ அடைத்து விடுவாயாக என்று கோபமாக கேட்க, மனோஜால் எதுவும் பேச முடியவில்லை. இன்னொரு பக்கம் மீனா, ரோகினி மீது சந்தேகமாக இருக்கிறது. அவர் என் கேள்விக்கு ஒழுங்காக பதில் சொல்லாமல் கிளம்பிவிட்டார் என்றவுடன் முத்து, சத்யா வீடியோ விஷயத்திற்கும் ரோகினிக்கும் எதாவது சம்பந்தம் இருக்கும் என்றார். பின் கதிரை கண்டுபிடிப்பதற்காக நடிகரின் வீட்டிற்கு முத்து-மீனா இருவருமே போனார்கள். அப்போது முத்து, பங்களா விஷயத்தை பேசிய உடன் அந்த நடிகர், கதிர் பற்றி சொன்னார்.

நேற்று எபிசோட்:

பின் முத்து, தன்னுடைய அண்ணன் ஏமாந்த உண்மையை எல்லாம் சொல்ல, அவர் ஆறுதல் சொல்லி கதிர் பற்றி தனக்கு தெரிந்த விஷயத்தை சொன்னார். அந்த சமயம் பார்த்து சிந்தாமணி வந்தார். உடனே அந்த நடிகர், மீனா-சிந்தாமணிக்கு வேலையை பிரித்து கொடுத்தார். இதனால் கோபத்தில் சிந்தாமணி, மீனாவுக்கு சவால் விட, பதிலுக்கு பதில் முத்துவும் சவால் விட்டார். இன்னொரு பக்கம் வீட்டில் மீனா, கதிர் விஷயமாக தான் நாங்கள் போயிருந்தோம். கூடிய விரைவில் கண்டுபிடிப்போம் என்று சொன்னவுடன் ரோகினி,இனி நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் அதை விடுங்கள் என்று சொன்னார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா, எதற்கு வேண்டாம் என்று சொல்கிறீர்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொன்னவுடன் ரோகினி, இனிமேல் கதிரை நாங்கள் கண்டுபிடித்துக் கொள்கிறோம். முத்து கண்டுபிடித்தாலுமே மனோஜை மட்டம் தட்டி பேசுவார் என்று சொன்னவுடன் முத்து சண்டை போடுகிறார். உடனே அண்ணாமலை, மனோஜ் பார்த்துக் கொள்ளட்டும். உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள் என்று அந்த பஞ்சாயத்தை முடித்து வைக்கிறார். அதற்குப்பின் முத்து- மீனா இருவருமே ரோகினி சொன்னதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

முத்து-மீனா இருவரும் சத்யாவை சந்தித்து ரோகினி கடன் வாங்கிய விஷயத்தை பற்றி விசாரிக்க சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் வித்யாவின் வீட்டிற்கு சென்ற ரோகினி, சிட்டியிடம் கடன் வாங்கிய விஷயம் முத்துவிற்கு தெரிந்து விட்டது. இனிமேல் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லி சிட்டியை தனியாக பேச அழைக்கிறார். அப்போது ரோகினி, கதிர் விசயத்தை சொல்கிறார். இது தான் சந்தர்ப்பம் என்று சிட்டி நினைக்கிறார். பின் ரோகினி, கோயிலில் அவனுடைய வீடியோ ரெக்கார்டு ஆகி இருக்கும். அவனை அடையாளம் காண்பிக்கிறேன் கண்டுபிடிங்கள் என்று சொல்கிறார். சிட்டியும் சரி என்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement