மீனாவின் புது அவதாரத்தால் மிரண்டு போன ரோகினி, டிடக்ட்டிவ் வேலையில் முத்து – சிறகடிக்க ஆசை

0
174
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, மீனாவிற்கு தெரிந்த வயதான தாத்தா, பாட்டியிடம் போலீஸ் தகராறு செய்ததால் பாட்டி தலையில் அடிபட்டு விட்டது. உடனே கோபத்தில் முத்து, அந்த போலீசின் சட்டையை பிடித்து சண்டை போட்டு விட்டு, அடிப்பட்ட பாட்டியை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று உதவி செய்தார். இன்னொரு பக்கம் வீட்டில் ரோகினி, தன்னுடைய அப்பாவின் புகைப்படத்தை காண்பித்து அழுதார். எல்லோருமே அவருடைய படத்தை பார்த்து எமோஷனலாக பேசி ரோகினிக்கு ஆறுதல் சொன்னார்கள். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்த போலீஸ், முத்துவை கைது செய்தது.

-விளம்பரம்-

வழக்கம்போல் விஜயா நக்கலாக முத்துவை திட்ட, நடந்ததை எல்லாம் மீனா சொன்னார். ஆனாலும், விஜயா முத்துவை தான் திட்டி பேசிக் கொண்டிருந்தார். பின் போலீஸ் ஸ்டேஷனுக்கு முத்து-மீனா இருவருமே சென்றுவிட்டார்கள். அங்கு வந்த ரோகினி- மனோஜ் இருவரும் முத்துவை பார்த்து கிண்டல் செய்துவிட்டு போலீஸிடம் கதிர் வீடியோவை கேட்டார்கள். அவர்கள் முடியாது என்று அனுப்பி விட்டார்கள். அதற்குப் பின் வந்த இன்ஸ்பெக்டர், முத்துவிடம் நடந்ததை விசாரித்தார். பின் அவர், முத்து மீது தவறு இல்லை என்று அந்த டிராபிக் போலீசை திட்டி இருந்தார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

மேலும், போலீஸ் ஸ்டேஷனில் மனோஜ், போலீஸிடம் ரகசியமாக ஒரு விஷயம் சொன்னார் . இதை கேட்டவுடன் எல்லா போலீஸ்களும் அவரை அறைந்தார்கள். பின் இதைப் பற்றி முத்து கேட்ட உடன் பயங்கரமாக கூப்பிட்டார். ஆனால், என்ன விஷயம் என்று மட்டும் சொல்லவில்லை. இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் தாத்தா, பாட்டியின் உறவினர் ஒருவர் வந்தார் அவர், மன்னிப்பு கேட்டு அவர்களை அழைத்து சென்றார். இதை அறிந்த முத்து சந்தோஷப்பட்டார். பின் அந்த தாத்தா, ஒரு கவரை முத்துவிடம் கொடுத்தார்.

கடந்த வாரம் எபிசோட்:

பின் வீட்டிற்கு வந்த முத்து, ஹாஸ்பிடல் நடந்ததை சொன்னவுடன் அண்ணாமலை சந்தோஷப்பட்டார். பின் அந்த தாத்தா தந்த கவரை முத்து பிரித்து பார்த்தார். அதில் அவருடைய போன் இருந்தது. அதை பார்த்தவுடன் ஷாக் ஆகி தன்னுடைய தந்தையிடம் முத்து சொன்னார். இதையெல்லாம் ரோகினி ஒழிந்து நின்று கேட்டு ஷாக் ஆகி இருந்தார். பின் இதை பற்றி தன்னுடைய தோழி வித்யாவிடம் ரோகினி கேட்க, அவர் ஆரம்பத்தில் சமாளித்தார். பின் உண்மையை சொன்னார். இருவருக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் நடந்தது. ஒரு கட்டத்தில் வித்யா, ரோகினியை எதிர்த்து பேசி திட்டி விட்டார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோபத்தில் ரோகினி, வித்யாவை திட்டி விட்டு கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் முத்து, தன்னுடைய போனை யார் எடுத்திருப்பார் என்று தீவிரமாக யோசிக்கிறார். மீனாவும் தனக்கு தோன்றிய விஷயத்தை சொல்கிறார். அப்போது முத்து, இது ரோகினி செய்த வேலையாக இருக்கும் என்று எனக்கு சந்தேகம் அதிகமாகிறது. ரோகினி-வித்யா இருவரின் போட்டோவை தாத்தாவிடம் காண்பித்து யார் என்று கேட்டுக்கொள்ளலாம் என்று சொன்னவுடன் மீனாவும் சரி என்கிறார்.

சீரியல் ட்ராக்:

பின் மறுநாள் காலையில் வித்யாவின் வீட்டுக்கு சென்ற மீனா, அவரிடம் ஏதேதோ பேசி அவரின் போட்டோவை எடுத்து விடுகிறார். பின் இதை முத்துவிடம் கொடுத்து விட்டார். அவரும் தாத்தா உறவினர் ஒருவருக்கு அனுப்பி வைக்கிறார். பின் முத்து, சத்யாவிற்கு ஃபோன் செய்து சிட்டியை பற்றி விசாரிக்கிறார். ஆனால், பெரிதாக எந்த குழுவும் கிடைக்கவில்லை. சீக்கிரமாகவே ரோகினி சுயரூபம் வெளியே வந்துவிடும், கண்டுபிடிக்கிறேன் என்று முத்து தீவிரமாக இறங்குகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் ரோகினி, மனோஜை தேடுகிறார். அப்போது மீனா பேய் போல் வேஷம் போட்டு நிற்கிறார். அதை பார்த்தவுடன் ரோகினி பயங்கரமாக ஷாக் ஆகி கத்துகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement