விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் போலீஸ் இடம் சத்யா மீது விஜயா கம்பளைண்ட் கொடுத்தார். மீனா வீட்டை விட்டு வெளியே போகணும் என்று விஜயா சொன்னதற்கு அண்ணாமலை முடியாது என்றார். உடனே கோபத்தில் விஜயா வீட்டை விட்டு வெளியே வந்து பார்வதி வீட்டில் தங்கி இருக்கிறார். இன்னொரு பக்கம் சிட்டி, பிஏ இருவரும் ரோகினி இடம் பணத்தை பறிக்க திட்டம் போடுகிறார்கள். இந்த வாரம் முத்து, வக்கீலை பார்த்து நடந்ததை சொன்னார். அவர், கம்ப்ளைன்ட் கொடுத்தவர் வாபஸ் வாங்கிவிட்டால் பிரச்சனை இல்லை என்று சொன்னார்.
மீனா-முத்து இருவருமே வீட்டிற்கு வந்து அண்ணாமலையிடம் சொன்னார்கள். அவரும் விஜயாவிடம் பேச போனார். பின் கேஸை வாபஸ் வாங்க சொல்லி விஜயாவிடம் எடுத்துச் சொல்லி புரிய வைத்தார். ஆனால், விஜயா முடியாது என்று மறுத்தார். பின் விஜயா, முத்து- மீனா வீட்டை விட்டு வெளியே போனால் நான் கேசை வாபஸ் வாங்குவேன் என்று சொன்னவுடன் அண்ணாமலை அதிர்ச்சியாகி வந்துவிட்டார். பின் வீட்டிற்கு வந்த அண்ணாமலை, விஜயா சொன்ன விஷயத்தை சொல்ல, முத்துவால் எதுவுமே பேச முடியவில்லை இருவருமே அமைதியாகி விட்டார்கள்.
சிறகடிக்க ஆசை:
இதனால் வக்கீல், இது ரொம்ப கஷ்டமான கேஸ். சத்யாவை வெளியே எடுப்பது ரொம்ப கஷ்டம். சீக்கிரம் பணத்தை ஏற்பாடு செய்யுங்கள் என்று சொன்னார். அந்த சமயம் பார்த்து சீதாவிற்கு மாப்பிள்ளை பார்த்த வீட்டில் இருந்து போன் வந்தது. அவர்களுக்கு சத்யா வீடியோவை பற்றி தெரிந்ததால் கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்றார்கள். இதனால் மீனா அம்மா ரொம்ப வருத்தப்பட்டார். நேற்று எபிசோடில் வக்கில், 5 லட்ச ரூபாய் பணத்தை ரெடி பண்ண வேண்டும் என்று சொன்னதால் முத்து மும்முரமாக அலைந்து கொண்டிருந்தார்.
நேற்று எபிசோட்:
பின் முத்து, வட்டிக்கு தன்னால் முடிந்தவரை பணத்தை ஏற்பாடு செய்து இருந்தார். இன்னொரு பக்கம் மீனாவின் அம்மாவும் தன்னுடைய கரும்பு மெஷினை விற்க பார்த்தார். உடனே அதை முத்து தடுத்து விட்டார். அண்ணாமலையும் தன்னுடைய பங்கிற்கு பணத்தை கொடுத்தார். இதையெல்லாம் வக்கீலிடம் கொடுத்து சத்யாவை காப்பாற்ற சொல்லி கெஞ்சுகிறார்கள் முத்து-மீனா. பின் வக்கீல், விஜயாவை சந்தித்து பேசும்போது அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. கடைசியில் அவர் பணம் தருகிறோம். சத்யா ஜெயிலுக்கு போவதால் உங்களுக்கு ஒரு லாபம் இல்லை என்று சொன்னவுடன் விஜயா அமைதியாகி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில், நீங்கள் எவ்வளவு எதிர்பார்க்கிறீர்கள் என்று வக்கீல் கேட்டதற்கு, 2 லட்சம் என்று விஜயா சொன்னார். உடனே வக்கீல் ஒத்துக் கொண்டதால், கேசை வாபஸ் வாங்க விஜயா சம்மதித்தார். பின் இதைப் பற்றி வக்கீல் சொல்ல, முத்துவும் சந்தோஷத்தில் வீட்டில் எல்லோரிடம் சொன்னார். எல்லோரும் சந்தோசப்பட, ரோகினி மட்டும் வருத்தப்படுகிறார். விஜயா எப்படி வாபஸ் வாங்கினார் என்று சந்தேகத்தில் ரோகினி இருக்கிறார். பின் முத்து, அம்மாவை வீட்டிற்கு வர சொல்லுங்கள் என்கிறார். ஆனால், அண்ணாமலை அமைதியாக இருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
மேலும், கேஸ் வாபஸ் வாங்கின விஷயம் தெரிந்த மீனா அம்மா ரொம்ப சந்தோஷப்பட்டு இருந்தார். பின் வீட்டிற்கு சத்யா வந்ததால் முத்துவும் அவருக்கு ஆறுதலாக பேசி படித்து முன்னேற வேண்டும் என்று அறிவுரை எல்லாம் சொல்லி இருந்தார். இன்னொரு பக்கம் இந்த விஷயம் சிட்டி, கோபப்பட்டு எப்படியாவது சத்யாவை மீண்டும் பிரச்சனையில் மாட்டி விட வேண்டும் என்று யோசிக்கிறார். அப்போது பிஏ வெளியே போக பார்க்கும்போது, ரோகினி இடம் பணத்தை வாங்கும் வரை உள்ளே இரு என்று சிட்டி திட்டி அனுப்பிக்கிறார். பின் ரோகினிக்கு சிட்டி போன் செய்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.