ரோகினியால் வழி மாறி செல்லும் மனோஜ், அண்ணாமலை எடுக்கும் முடிவு என்ன? சிறகடிக்க ஆசை

0
111
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் வித்யா, உண்மை தெரிந்தால் இதுதான் நடக்கும் என்று உனக்கே தெரியும். உனக்கு குழந்தை இருக்கும் விஷயம் தெரிந்தால் என்ன நடக்குமோ? என்று இன்னும் பயமுறுத்தி இருந்தார். உடனே ரோகினி, எது நடந்தாலும் எப்படி சமாளிக்கணும் என்று எனக்கு தெரியும், நான் பார்த்துக்கொள்கிறேன் என்று தைரியத்துடன் இருந்தார். இன்னொரு பக்கம் வீட்டில் மனோஜ் கவலையில் இருந்தார். முத்து, அண்ணாமலை இருவருமே ரோகினியை வீட்டிற்கு அழைத்து வருவதை பற்றி பேசி இருந்தார்கள். ஆனால், மனோஜ் மறுத்தார்.

-விளம்பரம்-

அண்ணாமலை, ரோகினியை வீட்டிற்கு அழைத்து வரச் சொல்லி மனோஜிடம் கேட்டார். ஆனால், மனோஜ் முடியாது என்று மறுத்து விட்டார். விஜயாவிடமும் அண்ணாமலை எடுத்து சொல்லி புரிய வைத்தார். ஆனால், அவரும் கேட்கவில்லை. பின் கோபத்தில் விஜயா, பார்வதி வீட்டுக்கு சென்று விட்டார். அங்கு விஜயா, உன்னால் தான் எனக்கு இந்த நிலைமை? நீ சொன்னதால் தான் நான் ரோகினியை திருமணம் செய்தேன். அவள் மோசக்காரி, துரோகி என்றெல்லாம் ஆவேசமாக கத்தி இருந்தார். உடனே பார்வதி, நீ பணத்திற்காக ஆசைப்பட்டு அவளை கொண்டு வந்தாய். விசாரிக்க வேணாமா? என்று பார்வதி, விஜயா பக்கமே திருப்பி இருந்தார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

இருந்தாலுமே விஜயாவிற்கு ஆத்திரம் அடங்கவே இல்லை. பின் முத்து-மீனா இருவருமே ஸ்ருதி, ரவியிடம் வீட்டில் நடந்ததை பற்றி சொல்ல, அவர்கள் ஷாக் ஆனார்கள். சுருதி, நாங்கள் உடனே கிளம்பி வீட்டிற்கு வருகிறோம் என்றார்கள். இன்னொரு பக்கம் சோகத்தில் மனோஜ், பாரில் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்தார். நிலை தெரியாத அளவிற்கு குடித்து தன் மனைவி செய்த துரோகத்தை நினைத்து புலம்பி கொண்டிருந்தார். அதன் பின் மீனாவிற்கு போன் செய்த பார்வதி, விஜயா பற்றி சொல்லி இருந்தார்.

இன்றைய எபிசோட்:

மேலும், இன்றைய எபிசோட்டில் மனோஜ், நிறைய குடித்துவிட்டு நிலை தெரியாத அளவிற்கு தடுமாறிக் கொண்டிருக்கிறார். அவருடைய நண்பர் தான் மனோஜை பைக்கில் வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டிருக்கிறார். வரும் வழியில் டிராபிக் போலீஸ் தடுத்து நிறுத்தி இருவரையுமே செக் பண்ணுகிறார்கள். ஆனால், மனோஜ் போதையில் போலீஸ் இடமே தகராறு செய்து கொண்டிருக்கிறார். மனோஜின் நண்பர் குடிக்கவில்லை என்றாலும் போலீஸ் அவரை ஊத சொல்லி கேட்கிறார்கள். இதனால் கோபப்பட்ட மனோஜ் போலீஸிடம் சண்டை போகிறார். பின் போலீஸ், மனோஜை கைது செய்து விடுகிறார்கள்.

-விளம்பரம்-

சீரியல் ட்ராக்:

போலீஸ் ஸ்டேஷனிலுமே மனோஜ் அமைதியாக இருக்காமல் போலீஸிடம் மன்னிப்பு கேட்க சொல்லி வம்பு இழுத்துக் கொண்டிருக்கிறார். உடனே அவர்கள் கோபத்தில் மனோஜின் சட்டையை கழட்டி ஓரமாக உட்கார வைத்து விடுகிறார்கள். ஆனாலுமே மனோஜ் அடங்காமல், என் தம்பி யார் தெரியுமா? அவன் வந்தால் ரகளையே நடக்கும் என்றெல்லாம் அலப்பறை செய்து கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் மனோஜ் வீட்டிற்கு வரவில்லை என்று முத்து, அண்ணாமலை இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் ரோகினி, மனோஜை நினைத்து வித்யாவிடம் புலம்பி கொண்டிருக்கிறார்.

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மனோஜ், ரோகினி செய்த துரோகத்தை நினைத்து நிலை தெரியாத அளவிற்கு குடித்துவிட்டு போலீஸிடம் தகராறு செய்திருக்கிறார். இதனால் போலீஸ் மனோஜை கைது செய்து விடுகிறார்கள். பின் இந்த தகவலை அறிந்தவுடன் அண்ணாமலை- முத்து இருவருமே போலீஸ் ஸ்டேஷன் வருகிறார்கள். அங்கு சட்டை இல்லாமல் ஒரு ஓரமாக மனோஜ் உட்கார்ந்திருப்பதை பார்த்து அண்ணாமலை ரொம்பவே வேதனைப்பட்டு அழுகிறார். பின் போலீஸ், எஃப் ஐ ஆர் போடவில்லை அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்கிறார். பின் வீட்டிற்கு வந்த அண்ணாமலை, இப்படியே போனால் இந்த குடும்பம் சீரழிந்து விடும். இந்த பிரச்சனைக்கு நான் முடிவு கட்டுகிறேன் என்று கிளம்புகிறார். இனி அடுத்து என்ன? என்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement