மகனுக்காக துணி வாங்கி விஜயாவிடம் வசமாக சிக்கிய ரோகினி, மீனாவிடம் மன்னிப்பு கேட்கும் முத்து- விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

0
486
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ், பணத்தை ஏமாந்ததால் மீனாவின் நகையை யாருக்கும் தெரியாமல் விற்று கவரிங் நகையை மாற்றி இருந்ததால் வீட்டில் பெரிய கலவரம் வெடித்தது. இதை செய்தது மனோஜ் மற்றும் விஜயா தான் என்பதை முத்து கண்டுபிடித்து விட்டார். இதனால் அண்ணாமலை, இனி என்னிடம் பேசாதே என்று விஜயாவிடம் கோபித்து இருந்தார். இறுதியில் அந்த 4 லட்சத்திற்கு ரோகிணி பொறுப்பு ஏற்று 2 லட்ச ரூபாய் முத்துவிடம் கொடுத்து விட்டார். மீதி பணத்தை சீக்கிரம் தருகிறேன் என்று சொல்லி இருந்தார்.

-விளம்பரம்-

வழக்கம் போல் விஜயா, எல்லாத்திற்கும் காரணம் மீனா தான் என்று திட்டுகிறார். இதை பார்த்த சுருதி, விஜயாவை வெளுத்து வாங்குகி இருந்தார். இதனால் விஜயாவிற்கு சுருதி மேல் பயங்கர கோபம். கடந்த வாரம் இந்த பிரச்சனையை முடிக்க முத்து பாட்டியை வரவழைத்து இருந்தார். பாட்டி வந்ததும் அண்ணாமலையை சமாதானப்படுத்தி விஜயாவிடம் பேச வைத்தார். விஜயாவும் அண்ணாமலையிடம் மன்னிப்பு கேட்டார். கடைசியில் முத்து, 29 லட்சத்தை மனோஜ் மாதம் மாதம் கொடுத்தால் போதும் என்று சொல்கிறார். பாட்டியும் இது நல்ல யோசனை, மாதம் மாதம் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மனோஜியிடமிருந்து வாங்கிக் கொடுப்பது விஜயாவின் பொறுப்பு என்றும் சொல்லிவிடுகிறார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

கடைசியில் விஜயா ரோகினிடம், உன் அப்பாவிடம் இருந்து பணத்தை வாங்கி கொடுத்து விடு என்று கூறுகிறார். ரோகினி என்ன செய்வது என்று புரியாமல் இருக்கிறார். பின் முத்து புது காரை வாங்கி வீட்டிற்கு வருகிறார். அதைப் பார்த்து விஜயா நக்கல் அடித்து இருந்தார். இன்னொரு பக்கம், மனோஜ்க்கு யாரோ ஒருவர் மொட்டை கடிதம் எழுதி அனுப்பி இருந்தார். அதைப் பார்த்து பயந்த மனோஜிடம், இது யாரோ பிராங்க் பண்றாங்க, நீ பயப்படாதே என்று ரோகிணி ஆறுதல் சொன்னார். இருந்தும் மனோஜ் பயந்து சாமியாரை பார்த்து இருந்தார். அவர் சொன்ன பரிகாரங்களை மனோஜ் செய்கிறார். இதை பார்த்து வீட்டில் உள்ள எல்லோரும் கேள்வி கேட்க மனோஜ் பதில் சொல்லவில்லை.

சீரியல் கதை:

நேற்று எபிசோடில், முத்து வாங்கிய புதிய காரை ஓட்டுவதற்காக முத்துவின் நண்பர் வீட்டுக்கு வந்தார்.
அண்ணாமலை, கார் சாவியை ஆசிர்வாதம் பண்ணி அந்த பையனிடம் கொடுத்தார். மீனா பூக்கட்டும் நண்பர்களுடன் பேசும் போது சமையலைப் பற்றி பேசுகிறார்கள். உடனே, மீனா என்னுடைய கணவர் நான் எது சமைத்துக் கொடுத்தாலும் சாப்பிட்டு பாராட்டுவார் என்று பந்தயம் வைக்கிறார். பின் மீனா, பச்சைப்பயிறு வைத்து வித்தியாசமான உணவை சமைத்துக் கொடுக்க எல்லோருமே சாப்பிட்டு புகழ்ந்து பேசி இருந்தார்கள். ஆனால், முத்து மட்டும் போன் பேசிக்கொண்டு அதை கண்டுகொள்ளாமல் சென்று விட்டதால் மீனா வருத்தப்படுகிறார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இன்னொரு பக்கம், ரோகினி தன் மகனின் பிறந்த நாளுக்காக துணி வாங்க கடைக்கு போகிறார்.
இந்நிலையில் இன்றைய எபிசோடில் விஜயா, தன்னுடைய மருமகள் எல்லோருமே சம்பாதிக்கிறார்கள். அதனால் சம்பாதிக்கிற திமிரில் இருக்கிறார்கள் என்று நினைத்து புலம்புகிறார். அதற்கு பார்வதி, நீயும் ஏதாவது ஆஃபர் போடு உன்னுடைய வகுப்பிற்கு எல்லாரும் வருவார்கள் என்று சொல்ல, வகுப்பிற்கு வரும் மாணவர்களுக்கு துணி வாங்கிக் கொடுக்கலாம் என்று நினைக்கிறார்கள். பின் இருவருமே கடைக்கு செல்கிறார்கள். இன்னொரு பக்கம் ரோகினியும் தன் மகனுக்காக துணி எடுத்து இருக்கிறார். ரோகினியை பார்த்த விஜயா, இங்கே என்ன? என்று கேட்கிறார்.

விஜயாவிடம் தப்பித்த ரோகினி:

அப்போது கடைக்காரர், உங்கள் மகனின் துணி பில் போட்டாச்சு என்று சொன்னவுடன் விஜயா, அதிர்ச்சியாகி என் மருமகளுக்கு மகனா? குழந்தையே இல்லையே என்று கேட்கிறார். உடனே ரோகினி ஏதோ சொல்லி சமாளித்து அந்த கடைக்காரரை அனுப்பி விடுகிறார். பின் வீட்டிற்குபுடவை வாங்கி வந்த முத்து, மீனாவிடம் கொடுக்கிறார். ஆனால், மீனா எதுவும் சொல்லவில்லை. என்ன ஆச்சு? என்று முத்து கேட்டதற்கு, காலையில் நான் சமைத்ததை நீங்கள் எதுவும் சொல்லவில்லை. என் நண்பர்கள் எல்லாம் கிண்டல் பண்ணினார்கள். நீங்கள் வாங்கித் தந்த புடவைக்கு மட்டும் நான் பதில் சொல்லனுமா? என்று கோபப்படுகிறார். பின் முத்து மீனாவை புகழ்ந்து பேசி சமாதானம் செய்து விடுகிறார். மீனாவும் முத்து வாங்கி தந்த புடவையை கட்டி சந்தோசப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது. நாளை எபிசோடில், கிரிஷ் பிறந்தநாளுக்கு முத்து- மீனா இருவருமே அவருடைய வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். அங்கு ரோஹினியும் இருக்கிறார். இனிவரும் நாட்களில் கிரிஷ் அம்மா யார் என்று தெரிய வருமா? ரோகினியின் உண்மை முகத்தை முத்து கண்டுபிடிப்பாரா? போன்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement