விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து டிரைவிங் ஸ்கூல் ஒன்று தன்னுடைய வீட்டிற்கு வெளியே ஆரம்பித்து இருந்தார். அதற்கு தன்னுடைய அப்பா பெயரையே முத்து வைத்திருந்தார். புது பிசினஸுக்காக பூஜை எல்லாம் மீனா -முத்து இருவரும் சேர்ந்து போட்டார்கள். இதையெல்லாம் பார்த்து மனோஜ், விஜயாவிற்கு பயங்கரமாக வயிறு எரிந்தது. உடனே மனோஜ், உன்னுடைய பெயரை பிசினஸுக்கு வைக்கவில்லை என்று விஜயாவை ஏத்தி விட்டார். பின் அண்ணாமலை, ஆர்த்தி எடுத்து ஆசீர்வாதம் செய்ய சொன்னார். ஆனால், விஜயா மறுத்தார். அண்ணாமலை அறிவுரை சொன்னதால் விஜயா கோபத்திலேயே பூஜை செய்து இருந்தார்.
முத்துவின் டிரைவிங் ஸ்கூலில் மீனா மாணவியாக சேர்ந்தார். இதை விஜயா- மனோஜ் இருவருமே கிண்டல் செதார்கள். அதற்குப்பின் சீதா ஸ்கூட்டியில் ஹெல்மெட் போடாமல் வந்து கொண்டிருந்தார். இதை பார்த்த அந்த ட்ராபிக் போலீஸ், அவரை வழிமறித்து ஹெல்மெட் போடாததற்கு பைன் கட்ட சொன்னார். அதற்கு சீதா, நான் தெரிந்தவள் தானே. இது என்னுடைய தோழியின் ஸ்கூட்டி என்று ஏதோ காரணம் சொன்னார். ஆனால், அவர் கோபமாக பைனை கட்டு என்று சொன்னவுடன் சீதாவும் முறைத்துக் கொண்டே பைனை கட்டிவிட்டு அந்த இடத்தில் இருந்து சென்று விட்டார்.
சிறகடிக்க ஆசை:
அதற்குபின் முத்து வீட்டிற்கு வந்த அண்ணாமலையின் நண்பர், தன்னுடைய மகள் பவானி ஓடிப்போன விஷயத்தை சொல்லி கதறி அழுதார். முத்து,மீனா, அண்ணாமலை மூவருமே அவருக்கு ஆறுதல் சொன்னார்கள். இன்னொரு பக்கம் பவானி காதலன் வீட்டிற்கு மலேசியா மாமா வந்தார். அவர், பெண்ணை பற்றி விசாரித்து உங்கள் மகனுக்கு கல்யாணம் செய்துவிடலாம். அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அவருக்கு வாக்குறுதி கொடுத்தார். பிறகு மீனா- முத்து இருவருமே பவானி வேலை செய்த இடத்தில் விசாரித்தார்கள். அப்போது பவானி, தான் காதலித்த நபருடன் சென்ற விஷயம் தெரிந்தது.
கடந்த வாரம் எபிசோட்:
நேற்று எபிசோடில் முத்து-மீனா இருவருமே பவானியின் வீட்டில் சென்று அவரின் காதலை அவருடைய பெற்றோர்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைத்தார்கள். அவர்களுமே தன் மகளின் மீது இருந்த கோபத்தை விட்டார்கள். அப்போது பவானி வீட்டிற்கு பேச மலேசியா மாமா வந்தார். அப்போது அவர், எதுவும் வாங்காமல் வீட்டிற்குள் எப்படி போவது என்று சென்று விட்டார். அதற்குப்பின் முத்து-மீனா, பவானியின் காதலன் வீட்டிற்கு சென்று நிலைமையை சொல்லி புரிய வைத்தார்கள். அவர்களுமே ஏற்றுக்கொண்டார்கள்.
இன்றைய எபிசோட்:
நல்லபடியாக பவானியின் காதலுக்கு இரண்டு வீட்டாருமே சம்மதித்து விட்டார்கள். இதை பவானியின் காதலன் பெற்றோர்கள் மலேசியா மாவிற்கு சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் ரோகினி, மனோஜ்காக கையில் டாட்டூ போட்டார். இதை பார்த்து மனோஜ் ரொம்பவே எமோஷனல் ஆனார். பின் இதைப் பற்றி மனோஜ் வீட்டில் சொன்னவுடன் எல்லோருமே பார்த்து ஷாக் ஆனார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ரோகினி டாட்டூ போட்டதை ஒரு பெரிய விஷயமாக மனோஜ் -விஜயா பேசுகிறார். ஆனால், சுருதி- முத்து இருவரும் அதை கிண்டல் செய்கிறார்கள். அதற்கு பேர் நடன வகுப்பிற்கு சிந்தாமணி, விஜயாவை பார்க்க வந்திருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
அப்போது அவர், உங்கள் மருமகளை கைக்குள் வைக்க தெரியவில்லை. நீங்கள் வேஸ்ட், அவள் தான் புத்திசாலி. உங்களுக்கு திறமை இல்லை என்றெல்லாம் விஜயாவை உஸ்பேத்தி விடும் அளவிற்கு பேசுகிறார். இதனால் கொந்தளித்த விஜயா, எப்படியாவது பூக்கடையை போடா விடாமல் தடுக்கணும் என்று ஆவேசப்படுகிறார். இன்னொரு பக்கம் முத்து- மீனா இருவருமே பவானியை அவருடைய வீட்டிற்கு அழைத்து செல்கிறார்கள். பவானி அப்பாவும் திருமணத்திற்கு ஏற்றுக்கொள்கிறார்கள். முத்து-மீனா சென்ற பிறகு மலேசியா மாமா, மாப்பிள்ளை வீட்டு சார்பாக வந்து பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.