சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவாக நடிக்க முதல் தேர்வானது இந்த நடிகர் தானா? யார் தெரியுமா?

0
91
- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கதாபாத்திரத்திற்கு முதன் முதலில் தேர்வான நடிகர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் கதை. தன் தந்தை பேச்சால் மீனாவை முத்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார் விஜயா. ஆனால், அவர் பணக்கார குடும்பமே இல்லை.

-விளம்பரம்-

அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. கடந்த வாரம் சீரியலில் தாலி பிரித்து கோர்க்கும் பங்ஷன் நடந்தது. இதில் மீனா மீது திருட்டு பழி விழுகிறது. இதனால் முத்து, ஸ்ருதியின் அப்பாவை அடித்து விடுகிறார். பின் ஸ்ருதி கோபித்து கொள்கிறார். மேலும், மனோஜ் வீட்டில் வந்து பணம் கேட்கிறார். இந்த ஐடியாவை ரோகிணி தான் தந்தது போல சொல்லி விடுகிறார். மனோஜ் இங்கேயே எங்கேயாவது வேலை பார்க்கட்டும் என்று கோபமாக விஜயா பேசுகிறார். இதையெல்லாம் கேட்டு முத்து- அண்ணாமலை இருவருமே ஷாக் ஆகி அமைதியாகி இருக்கிறார்கள்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியல்:

அடுத்து என்ன நடக்கும்? என்று எதிர்பார்ப்புடன் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியலில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெற்றி வசந்த். இவர் இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பு டிக் டாக், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ போட்டிருந்தார். அதன் மூலம் தான் இவருக்கு மக்கள் மத்தியில் அறிமுகம் கிடைத்தது. அதற்கு பின் இவர் நிறைய ஷார்ட் பிலிம்மில் நடித்திருக்கிறார். அதன் மூலம் தான் இவருக்கு சின்னத்திரை நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் கதாநாயகனாக வெற்றி வசந்த் கலக்கி வருகிறார்.

வெற்றி வசந்த் குறித்த தகவல்:

இந்த சீரியலின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்திருக்கிறது. இந்த நிலையில் முதன் முதலில் முத்து கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வான நடிகர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் வேற யாரும் இல்லைங்க, இதயத்தை திருடாதே சீரியல் நடிகர் நவீன் தான். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த இதயத்தை திருடாதே சீரியலின் கதாநாயகன் நவீன். இவர் சின்னத்திரை வருவதற்கு முன்பே நவீன் பல படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

நவீன் குறித்த தகவல்:

இருந்தாலும் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்து இருந்தது இதயத்தை திருடாதே சீரியல் தான். இந்த சீரியலின் மூலம் இவருக்கென ஒரு தனி ரசிகர் மூலம் உருவாகி இருக்கிறது. மேலும், இந்த சீரியலில் சிவா என்ற கதாபாத்திரத்தில் நவீனும், சகானா என்ற கதாபாத்திரத்தில் ஹிமா பிந்துவும் நடித்து இருந்தார்கள். கடந்த ஆண்டு தான் இந்த சீரியல் முடிந்தது. பின் நடிகர் நவீன், செய்தி வாசிப்பாளர் கண்மணியை திருமணம் செய்து கொண்டார்.

சீரியல் வாய்ப்பை தவற விட்டகாரணம் :

இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை இருக்கிறது. இதயத்தை திருடாதே சீரியலுக்கு பின் இவர் கலர்ஸ் தமிழில் ஒரு சீரியலில் நடித்து இருந்தார்.அதன் பின் இவருக்கு சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் , சில காரணங்களால் இவர் இந்த சீரியல் வாய்ப்பை நிராகரித்து இருக்கிறார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் தொடரில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

Advertisement