அப்பாவை வர சொல்லி மிரட்டும் விஜயா, பயத்தில் சொல்வதறியாமல் நிற்கும் ரோகிணி – பரபரப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை

0
167
- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடு குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் கதை. முத்து வீட்டில் அவருடைய தாய் எப்போதும் முதல் மற்றும் இளைய மகனுக்கு தான் சப்போர்ட் செய்கிறார். முத்துவை கண்டால் அவருக்கு பிடிக்காது. காரணம், முத்து தன் தந்தைக்கு ஆதரவாக நிற்பதாலும், உண்மையாக இருப்பதாலும் அவருக்கு பிடிக்கவில்லை.

-விளம்பரம்-

உண்மையில் முத்து தன்னுடைய தாயின் பாசத்திற்காக ஏங்குகிறார். இன்னொரு பக்கம் கதாநாயகி மீனா பூக்கடை வியாபாரம் செய்கிறார். ஒரு விபத்தில் அவருடைய தந்தை இறந்து விடுகிறார். பின் அண்ணாமலை பேச்சால் அவரை முத்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார் விஜயா. ஆனால், அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். முதலில் இரு வீட்டார் சம்மதிக்கவில்லை என்றாலும் பணக்கார பெண் என்பதால் விஜயா ஏற்று கொண்டார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியல்:

வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. கடந்த வாரம் சீரியலில் தாலி பிரித்து கோர்க்கும் பங்ஷன் நடந்தது. இதில் சுருதி- ரவியை தன் வீட்டிற்க்கே கொண்டு வர வேண்டும் என்று சுருதியின் அம்மா-அப்பா திட்டம் போடுகிறார்கள். ரோகிணி- ஸ்ருதி அம்மா விரித்த வலையில் முத்து விழவில்லை. எந்த பிரச்சனையும் இல்லாமல் பங்க்ஷன் முடிந்தது. ஆனால், மீனா, ஸ்ருதியின் தங்க செயினை திருடி விட்டார் என்று பழி போடுகிறார் சுருதி அப்பா. பின் அனைவர் முன்னாடியும் மீனாவை அசிங்கப்படுத்துகிறார். ஆனால் மீனா, நான் அதை செய்ய திருடவில்லை, சுருதியிடம் கொடுக்கப் போனேன் என்று எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறார்.

முத்து – ஸ்ருதியின் அப்பாவுக்கு நடந்த சண்டை:

ஸ்ருதியின் அப்பா- அம்மா இருவருமே அதை ஏற்றுக் கொள்ளாமல் மீனாவையும் முத்து குடும்பத்தையும் மோசமாக பேசுகிறார்கள். இதனால் முத்து, ஸ்ருதியின் அப்பாவை அடித்து விடுகிறார். இதை பார்த்த ஸ்ருதி, வீட்டிற்கு வரமாட்டேன் என்று அம்மா வீட்டிற்கு செல்கிறார். கோபத்தில் விஜயா வீட்டில் ஆர்ப்பாட்டம் செய்கிறார். பின் ஸ்ருதி- ரவியை வர வைக்க வீட்டில் உள்ள எல்லோருமே போன் செய்து பேசுகிறார்கள். ஆனால், வர முடியாது என்று சுருதி மறுத்து விடுகிறார். மேலும், நேற்று எபிசோட்டில் மீனா, சுருதியை சந்தித்து பேசுகிறார். இன்னொரு பக்கம் ரவி, ஸ்ருதியிடம் சண்டை போட்டு வீட்டுக்கு செல்லாமல் ஹோட்டலில் தங்கி இருப்பது முத்துவுக்கு தெரிகிறது.

-விளம்பரம்-

நேற்றைய எபிசோட்:

இதனால் ரவியை முத்து வீட்டிற்கு கூப்பிடுகிறார். ஆனால், ஸ்ருதி வந்தால் தான் வருவேன் என்று ரவி மறுக்கிறார். இன்னொரு பக்கம் ஸ்ருதி- ரவி வராததை நினைத்து விஜயா வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். பின் ஸ்ருதி- ரவி வந்தால் தான் சாப்பிடுவேன் என்று விஜயா அடம்பிடுகிறார். இதனால் ரோகினியும் வேற வழியில்லாமல் நானும் சாப்பிட மாட்டேன் என்று மனோஜை கட்டாயப்படுத்தி நிற்க வைக்கிறார். ஆனால், மனோஜிற்கு பசி தாங்க முடியவில்லை. விஜயா சாப்பிடாததால் அண்ணாமலையும் சாப்பிடவில்லை. இதை பார்த்து முத்து வருத்தப்படுகிறார். பின் முத்து பக்கெட் பிரியாணி வாங்கி வைத்து வீட்டில் வாழை இலை போட்டு அதில் கொட்டி அனைவரையும் சாப்பிட சொல்கிறார்.

சீரியல் ப்ரோமோ:

ஒரு வழியாக முத்து தன்னுடைய அம்மாவை சாப்பிட வைத்து விடுகிறார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், ரோஹிணியை தனியாக அழைத்துக் கொண்டு உன்னுடைய அப்பா எங்கே? எப்ப வருகிறார்? அப்பா என்பவர் இல்லையா? என்றெல்லாம் கோபப்பட்டு கேட்கிறார். ரோகினிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அழுகிறார். உடனே விஜயா, இந்த அழுகை எல்லாம் இனிமேல் நான் நம்ப மாட்டேன். உங்க அப்பா வந்தே ஆக வேண்டும் என்று கோபமாக பேசுகிறார். அப்போது மாமா என்று ஒருவரை நடிக்க கூட்டி வந்தவர் விஜயா வீட்டிற்கு வருகிறார். இனி வரும் நாட்களில் ரோகினின் உண்மை முகம் தெரிய வருமா? முத்து கண்டுபிடிப்பாரா? ரோகிணியின் நிலைமை தான் என்ன? போன்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement