மீண்டும் புது பிரச்சனையில் சிக்கிக்கொண்ட மனோஜ்- ரோகினி, முத்து செய்த வேலை – சிறகடிக்க ஆசை

0
116
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா, மீனாவை வெளியே போக விடாமல் ஒவ்வொரு வேலையாக வைத்துக் கொள்ள வைத்துக் கொண்டே இருந்தார். மீனாவிற்கும் என்ன சொல்வது என்று புரியாமல் தவித்தார். இன்னொரு பக்கம் முத்து, நேரம் ஆகிவிட்டது மண்டபத்திற்கு வா என்று சொன்னார். உடனே மீனா, வீடியோ கால் மூலம் எப்படி எல்லாம் டெக்கரேஷன் செய்வது என்று சொல்லி தந்தார். ஒவ்வொரு இடத்திற்கும் என்ன வைக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க, அதற்கு ஏற்ப மண்டபத்தில் இருப்பவர்களும் செய்தார்கள். அப்படியே விஜயா சொல்லும் வேலையையும் மீனா செய்து கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

ஒரு வழியாக வீடியோ கால் மூலமாகவே மீனா டெக்கரேஷன் ஒர்க்கை சூப்பராக செய்து முடித்தார். இதை பார்த்த சிந்தாமணிக்கு பயங்கர கோபம் வந்தது. பின் அவர் விஜயாவிற்கு கால் செய்து, மீனா ஆர்டரை முடித்து விட்டார் என்று சொன்னவுடன் விஜயா ஷாக்காகி, நான் மீனாவை வெளியே அனுப்பவில்லையே? எப்படி செய்து முடித்தால் என்று கேட்டார். அதற்கு சிந்தாமணி, உங்களை விட மீனா தந்திரக்காரி. உங்களிடம் ஒரு வேலையை சொன்னது வேஸ்ட் என்று திட்டி விட்டு வைத்து விட்டார். இவர்கள் இருவரும் பேசியதை வெளியே நின்று மீனா கேட்டு விட்டார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

இன்னொரு பக்கம் ஸ்ருதி, ரவி ஹோட்டலில் வேலை சேர்ந்தார். நேற்று எபிசோடில் மீனா நல்லபடியாக ஆர்டரை செய்து முடித்ததால் மாலை போட்டுவிட்டு வாழ்த்துக்கள் சொன்னார் முத்து. அப்போது முத்து, அம்மாவிற்கு உடம்பு முடியவில்லை என்றாலுமே மீனா செய்தார். வீட்டில் இருந்தே மீனா ஆர்டர் முடித்தது பெரிய விஷயம் என்று அவரை ரொம்ப பாராட்டி பேசி இருந்தார். வீட்டில் உள்ள மற்றவர்கள் மீனாவிற்கு வாழ்த்து சொன்னார்கள். இதையெல்லாம் பார்த்து விஜயா- ரோகினி- மனோஜ் மூவருக்குமே காண்டாகி இருந்தது.

நேற்று எபிசோட்:

அதற்குப்பின் மீனா, விஜயா செய்த வேலையை பற்றி சொன்னார். இதனால் கோபப்பட்ட முத்து, அம்மா உடம்பு முடியாது போல் நடித்து இருந்தார். மீனா வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. சிந்தாமணி உடன் சேர்ந்து தேவையில்லாத வேலை செய்கிறார் என்றெல்லாம் சொன்னவுடன் அண்ணாமலை, விஜயாவை திட்டி இருந்தார். ஆனால், விஜயா எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார். அதற்குப்பின் முத்து, மீனாவின் பெயரில் அக்கவுண்ட் ஓபன் செய்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா தன்னுடைய தொழிலில் முன்னேறி வருவதால் வரி கட்ட வேண்டும் என்று அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் முத்து செய்கிறார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இதை பார்த்து விஜயாவிற்கு பயங்கரமாக வயிறு எரிகிறது. பின் மீனா, தன்னுடைய முதல் செக்கை ஸ்ருதி-ரவிக்கு தான் கொடுத்தார். இதையெல்லாம் பார்த்த மனோஜ் கிண்டலடித்துக் கொண்டிருந்தார். அதற்குப்பின் ஷோரூமில் ஜிஎஸ்டி கட்டவில்லை என்று வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் வந்திருக்கிறது.
இதைப் பற்றி ரோகினி, மனோஜிடம் கேட்க, அவர் பெரிதாக அதை கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்கிறார். அந்த சமயம் பத்து ஜிஎஸ்டி வரி துறை அதிகாரிகள் கடைக்கு வந்து மனோஜிடம் விவாதம் செய்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அப்போது மனோஜ், தான் படித்த படிப்பு, பிரச்சனையில் மாட்டிக்கொண்டதை பற்றி எல்லாம் செல்கிறார். ஆனால், அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கடைசியில் கடைக்கு சீல் வைப்பதாக சொல்கிறார்கள். உடனே ரோகினி, அவர்களிடம் சில மணி நேரம் அனுமதி வாங்கி விடுகிறார். இன்னொரு பக்கம் முத்து, தன்னுடைய அப்பாவை பள்ளியில் விடுகிறார். அந்த சமயம் பார்த்து கிரிஷ், அவருடைய பாட்டியும் பள்ளிக்கு வருகிறார்கள். அவர்களை பார்த்தவுடன் முத்து நலம் விசாரித்து பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், கிரிஷ் இருக்கும் இடம் முத்துவுக்கு தெரியவில்லை. பின் பள்ளியில் நடந்ததை பற்றி கிரிஸ் பாட்டி தன்னுடைய மகள் ரோகினிக்கு போன் செய்து சொல்கிறார். உடனே ரோகினி ரொம்பவே பயந்து விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement