விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ்- ரோகினி இருவரும் போலீஸ் மூலம் கதிர் வீடியோவை எடுக்க கோயிலுக்கு போனார்கள். கோவிலில் கதிர் வீடியோவை சீதா வாங்கி கொண்டார். பின் முத்து, மலேசியாவில் வந்தவர்கள் நல்லபடியாக ஊருக்கு திரும்பி விட்டார்கள். மலேசியா ஜெயிலில் அவருக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் மூலம் ரோகினி அப்பாவை காப்பாற்றி விடலாம் என்று மனோஜிடம் சொன்னார். உடனே கோபத்தில் ரோகினி, தேவையில்லாமல் தலை இடாதீர்கள் என்று திட்டி விட்டார். இதனால் முத்து-மீனா இருவருக்கும் ரோகினியின் மீது சந்தேகம் அதிகமானது.
பின் மறுநாள் காலையில் பார்வதியிடம் ரோகினியை பற்றி இருவரும் விசாரித்தார்கள். ஆனால், அவருக்கு பெரிதாக அவரைப் பற்றி எதுவுமே தெரியவில்லை. அதன் பின் ரோகினியின் தோழி வித்யா வீட்டிற்கு சென்று மீனா விசாரித்தார். வித்யா, மீனாவின் கேள்விக்கு மாத்தி மாத்தி பதில் சொன்னதால் மீனாவிற்கு இன்னும் சந்தேகம் அதிகமானது. பின் இதைப் பற்றி முத்துவிடம் மீனா சொன்னார். அதன் பின் சிந்தாமணி, நீ என்னிடம் வேலை செய். உனக்கு தேவையானதை செய்கிறேன் என்று சொன்னவுடன் மீனா முடியாது என்று அவரிடம் சவாலிட்டு வந்தார்.
சிறகடிக்க ஆசை:
அதன் பின் வீட்டிற்கு வந்த முத்து, நாம் எல்லோரும் மலேசியா செல்லலாம். எல்லா செலவையும் ரோகினி அப்பா பார்த்துக் கொள்வார் என்று சொன்னவுடன் விஜயா ரொம்ப சந்தோஷப்பட்டார். நேற்று எபிசோட்டில் முத்து, மலேசியா போகலாம் அதற்கான ஏற்பாடுகளை செய்கிறேன் என்று சொன்னவுடன் அண்ணாமலை, எதற்கு வீண் செலவு வேண்டாம் என்று மீண்டும் சொன்னார். ஆனால், முத்து கேட்கவே இல்லை. இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று யோசித்த ரோகினி, முத்து என் வீட்டை அசிங்கப்படுத்த தான் இப்படி எல்லாம் செய்கிறார். மலேசியா யாரும் போக வேண்டாம் என்று அழுது டிராமா செய்தார். மனோஜ் அதை நம்பி தன்னுடைய அம்மா, அப்பாவிடம் பேசி இருந்தார்.
நேற்று எபிசோட்:
உடனே மீனா, சம்மந்தியை நேரில் பார்த்து நலம் விசாரித்தால் தான் நல்லது என்று விஜயாவை உஸ் பேத்தி விட்டார். பின் எல்லோருமே மலேசியா போவதற்கு தயாராகிறார்கள். ரோகினி என்ன செய்வதென்று புரியாமல் வித்யாவிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மலேசியா மாமாவை வர வைத்த ரோகினி, இது தான் கடைசி முறை. உதவி செய்யுங்கள் நான் சொல்வது போல் எங்கள் வீட்டில் பேசுங்கள் என்று கேட்க, அவருமே ஒத்துக்கொண்டார். இந்நிலையில் இன்றைய எபிசொட்டில் முத்துவின் வீட்டிற்கு மலேசியா மாமா வருகிறார். அவரை பார்த்தவுடன் எல்லோருமே ஷாக் ஆகிறார்கள். அப்போது அவர், தொழில் எதிரிகள் உன்னுடைய அப்பாவை கொன்று விட்டார்கள்.
இன்றைய எபிசோட்:
அவருக்கு எல்லா சடங்குகளையும் முடித்து விட்டார்கள் என்று அழுகிறார். இதைக் கேட்டவுடன் ரோகினி, அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். பின் நினைவு தெளிந்து கதறி கதறி அழுகிறார். இதையெல்லாம் பார்த்து முத்துவிற்கு சந்தேகம் தான் வருகிறது. வீட்டில் உள்ள எல்லோருமே ரோகினி நிலைமை நினைத்து வருத்தப்பட்டார்கள். பின் மலேசியா மாமா, நீ அங்கு போனாலும் உன்னை கொன்று விடுவார்கள். மலேசிய போகாதே, சொத்து உனக்கு வந்து சேரும் என்று சொல்கிறார். உடனே அண்ணாமலை, மலேசியா ட்ரிப்பை கேன்சல் செய்கிறார். முத்துவிற்கு சந்தேகம் அதிகரித்து தான் போகிறது.
சீரியல் ட்ராக்:
மறுநாள் காலையில் விஜயா, பார்வதி வீட்டில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது சிந்தாமணி நடனம் கற்றுக் கொள்ள வந்தேன் என்று பொய் சொல்லி விஜயாவிடம் நெருங்கி பழகுகிறார். அப்போது அவர், மீனாவை பற்றி தெரிந்து கொண்டு அவரை ஒழித்துக் கட்ட திட்டம் போடுகிறார். இன்னொரு பக்கம் ரோகினி, வித்யாவிடம் மலேசியா மாமா நடந்தை பற்றி பேசி கொண்டு இருக்கிறார். இதை கேட்ட மீனா, ரோகினியிடம் கோபப்பட்டு சண்டை போடுகிறார். ஆத்திரத்தில் ரோகினி, கத்தி எடுத்து மிரட்டுகிறார். ஆனால், மீனா ரோகினி கையில் இருந்த கத்தியை வாங்கி அவரை குத்தப் போகிறார். ஆனால், அது உண்மை இல்லை. ரோகினி கண்ட கனவு. உண்மை தெரிந்தால் என்ன ஆகுமோ? என்ற பயத்தில் ரோகினி, வித்யாவிடம் புலம்புகிறார். அந்த சமயம் பார்த்து ரோகினியின் அம்மா வீட்டிற்கு வருகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.