விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சிந்தாமணி, இனி மீனா டெக்கரேஷன் வேலையை ஓரங்கட்டி வைத்து விடுவாள் என்று சொன்னவுடன் விஜயா சந்தோஷப்பட்டார். ஆனால், என்ன வேலை செய்தார் என்று சிந்தாமணி சொல்லவில்லை. சந்தோஷத்தில் ரவிக்கு போன் செய்த விஜயா, சாப்பாட்டை ஆர்டர் செய்தார். இன்னொரு பக்கம் மீனா, மண்டபத்தின் ஓனரிடமே சென்று நடந்த விஷயத்தை சொன்னார். ஆனால், அவர், சிந்தாமணிக்கு கொடுக்க வேண்டிய ஆர்டரை புது ஆட்களுக்கு கொடுத்து தேவை இல்லாத வேலை செய்கிறாய் என்று மேனேஜரை திட்டி மீனாவை அடித்து வெளியே அனுப்ப சொன்னார்.
மீனா, எவ்வளவு கெஞ்சி கதறியுமே அந்த ஓனரும் கேட்கவில்லை, மேனேஜரும் கேட்கவில்லை. மனவேதனையில் மீனா வீட்டிற்கு வந்தார். வீட்டில் சந்தோஷத்தில் விஜயா, எல்லாருக்குமே சாப்பாடு கொடுத்தார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த முத்துவிடம் மீனா நடந்ததை எல்லாம் சொன்னார். உடனே முத்து, கோபத்தில் அந்த மேனேஜரை அடித்து கத்தியால் குத்த போனார். ஆனால், கடைசியில் அது மீனா கண்ட கனவு. அப்போது முத்து போன் செய்தார். ஆனால், அவரிடம் எதுவும் சொல்லவில்லை மீனா.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் மீனா, மண்டபத்தில் நடந்ததை தன்னுடைய அம்மாவிடம் சொல்லி வருத்தப்பட்டார். உடனே அவர் தம்பி, எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் வா என்று மீனாவை தனக்கு தெரிந்த போலீஸ் இடம் அழைத்து சென்றார். பின் அவரிடம் மீனா நடந்ததை சொல்ல, அவர் பத்திரத்தில் என்ன இருக்கோ அதுதான் கோர்ட் ஏற்றுக்கொள்ளும். இதை வைத்து ஒன்னும் செய்ய முடியாது என்றார். இதனால் மீனா இன்னும் மனமடைந்து விட்டார். அந்த சமயம் பார்த்து போன் செய்த முத்து, பணம் எல்லோருக்கும் கொடுத்து விட்டாயா? எல்லா வேலையும் முடிந்து விட்டதா? என்று கேட்க, உள்ளுக்குள் வேதனையை வைத்துக்கொண்டு வெளியில் காண்பிக்காமல் மீனா பேசி இருந்தார்.
நேற்று எபிசோட்:
அதற்குப்பின் வீட்டிற்கு வந்த மீனாவிடம் விஜயா, ஏன் சமைக்கவில்லை? எங்கே போய் ஊர் சுற்றுகிறாய்? என்று வழக்கம்போல் அவரை சண்டை போட்டார். மீனா, எனக்கு மனசு சரியில்லை என்று சொல்ல, விஜயா கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். உடனே மீனா, சிந்தாமணி எதுவும் சொல்லவில்லையா? அவரிடம் தெரிந்து கொள்ளுங்கள் என்று கோபப்பட்டார். அப்போது அண்ணாமலை வீட்டிற்கு வந்தார். அவர், கடைக்காரன் என்னை ஏமாற்றி விட்டான். நான் அவன் வழியிலேயே ஏமாற்றி விட்டேன் என்று சொன்னவுடன் மீனாவும் இதுதான் சரியான வழி. அந்த மேனேஜருக்கு பாடம் புகட்டனும் என்று நினைத்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா, சிந்தாமணிக்கு பாடம் புகூட்ட வேண்டும் என்று யோசிக்கிறார். அப்போது அவர், சீதாவிடம் சிந்தாமணிக்கு போன் செய்து மண்டபத்திற்கு டெக்ரேசன் ஒர்க் பண்ண வேண்டும் என்று செய்ய சொல்கிறார். சீதா, மீனா சொன்னது போலவே பேசியதால் சிந்தாமணி ஒத்துக் கொள்கிறார். பின் அவர் பேசியதை ரெக்கார்ட் செய்து அதை ஸ்ருதி இடம் போட்டு காண்பித்து சிந்தாமணி குரலில் மேனேஜரிடம் பேச சொன்னார் மீனா. சுருதியும் சிந்தாமணி போலவே பேசி அந்த மேனேஜரை பொன்னியம்மன் கோயிலுக்கு பணத்தோடு வரவேற்கிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் சீதா, சிந்தாமணிக்கு போன் செய்து பொன்னியம்மன் கோயிலுக்கு வரவைக்கிறார். இதற்கிடையில் அந்த மண்டபத்தின் ஓனரையும் அந்த கோயிலுக்கு மீனா வரவைக்கிறார். பின் கோயிலுக்கு வந்த மேனேஜர்- சிந்தாமணி இருவருமே மீனா ஏமாந்து போனதை பற்றி பேசி சிரிக்கிறார்கள். இதை மீனா, மண்டபத்தின் ஓனர் எல்லோருமே பார்த்து விடுகிறார்கள். உடனே கோபத்தில் அந்த ஓனர், மேனேஜரை வெளுத்து வாங்கி திட்டுகிறார். அதோடு சிந்தாமணியையும் திட்டுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.